court

img

சவுக்கு சங்கர் சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை தானாக முன்வந்து பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்தது. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு  பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இதை தொடர்ந்து, சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த  உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜெ.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அவர் எவ்வித கருத்துக்களையும் சமூக ஊடகங்களில் தெரிவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
 

;