court

img

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த மே மாதம் பேரறிவாளனை மட்டும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142 படி, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத் தொடர்ந்து சிறையிலிருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துவந்தனர். இதை அடுத்து, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு பிறப்பித்த உத்தரவு மீதமுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.