court

img

குடியரசுத் தலைவரே நாடாளுமன்றத்தை திறந்து வைக்க உத்தரவிட வேண்டும்!

புதுதில்லி, மே 25- புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர்  மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், அதனை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் உச்ச  நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொட ரப்பட்டுள்ளது.  வழக்கறிஞர் சி.ஆர். ஜெய் சுகேன் என்பவர்  இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய் துள்ளார்.  உச்சநீதிமன்றத்திற்கு மே 27 முதல் கோடைக்கால விடுமுறை துவங்குவதாலும், மே 28 அன்று நாடாளுமன்றம் திறப்பு விழா என்பதாலும், அதற்கு முன்னதாகவே, தனது மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்; புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவைச் செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் என  வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் உச்ச நீதி மன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்ட டத்திற்குப் பதில், அதன் அருகிலேயே ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில், ரூ. 971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற வளா கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2020  டிசம்பர் 10 அன்று, அன்றைய குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த்-தைக் கூட அழைக்கா மல், தானாகவே அடிக்கல் நாட்டினார்.  கொரோனா காரணமாக நாட்டின் பொரு ளாதாரமே அதல பாதாளத்தில் சரிந்தது. எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்பட்டது. ஊதியத்திலும் பிடித்தம் செய்யப்பட்டது. இவ்வளவுக்கு இடையிலும், பிரதமர் மோடி பெருந்தொகையை ஒதுக்கி,  டாடா குழுமம் மூலமாக புதிய நாடாளுமன்ற கட்டட வேலையில் தீவிரம் காட்டி வந்தார். தற்போது, முக்கோண வடிவில், 4 மாடிகளு டன் 64 ஆயிரத்து 500 சதுர அடி அளவில்  புதிய நாடாளுமன்றக் கட்டடம் நிர்மாணிக்கப் பட்டு உள்ளது. இந்தக் கட்டடம், நாட்டின் விடுதலை போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவரும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் ‘இந்துத் துவா’ என்ற விஷத்தை இந்திய மண்ணில் பரப்பியதுடன், மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருமான வி.டி.  சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28 அன்று  திறந்துவைக்கப்படும், அதுவும் பிரதமர் மோடியே திறந்துவைப்பார் என்று அறி விக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பு நெறி முறைகளின்படி, குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும்; ‘இந்திய ஒன்றியத்திற்கு நாடா ளுமன்றம் கட்டாயம் இருக்க வேண்டும், அது  குடியரசுத் தலைவரையும், இரண்டு அவை களையும் கொண்டிருக்க வேண்டும்; அந்த அவைகள் முறையே மக்களவை மற்றும் மாநி லங்களவை என்று அறியப்படும்’ என  இந்திய அரசியலமைப்புப் பிரிவு 79- கூறு கிறது. நாடாளுமன்றத்தின் தலைவரே குடி யரசுத் தலைவர்தான் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது. அவ்வாறிருக்க, அவர் மூலமாக அல்லாமல், அவரை விழாவிற்கே அழைக்கா மல் புறக்கணித்துவிட்டு, நாடாளுமன்றக் கட்ட டம் திறக்கப்படுவதை ஏற்க முடியாது; நாடா ளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிய  கட்டடத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்ப தால், நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா வைப் புறக்கணிக்கிறோம் என்று காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, தேசியவாத காங்கிரஸ்,  ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, சமாஜ்வாதி உள்ளிட்ட 19 கட்சி கூட்டாக அறிவித்துள்ளன. ஆனால், யார் வந்தாலும், வராவிட்டாலும் நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து விட்டார்.

இந்நிலையில்தான், வழக்கறிஞர் சி.ஆர்.  ஜெய் சுகேன் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.  “இந்திய அரசியலமைப்புப் பிரிவு 79-இன்  கீழ் நாடாளுமன்ற அவைகளை கூட்டுவதற்கும், ரத்து செய்வதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோர் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள். அதேபோல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவை குடி யரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாக்கப்படும். இவ்வாறு இருக்கையில், குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்துள்ளார்.  “கடந்த மே 18 அன்று, மக்களவைச் செயலக  ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் மே 28-ஆம்  தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்ட டத்தைத் திறந்து வைப்பார் எனத் தெரி விக்கப்பட்டது. இந்த விழாவிற்கு குடி யரசுத் தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்  கப்படவில்லை. இதன் மூலம் மக்களவைச் செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும்  செயலில் ஈடுபட்டுள்ளது” என்று குற்றம் சாட்டி யிருக்கும் ஜெய் சுகேன், ‘புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறப்பது தொடர்பாக மக்களவைச் செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மே 26 வெள்ளிக்கிழமையுடன், உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை துவங்குவதால், தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.