court

img

சிபிஐ-யை தவறாக பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஒன்றிய பாஜக அரசு, மத்திய அமைப்புகளான சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதாக சிபிஎம், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஎம், திமுக, காங்கிரஸ், ஆர்.ஜெ.டி, ஆம்.ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், சிபிஐ, அமலாக்கத் துறை, போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும், பாஜகவில் இணையும் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுகிறது அல்லது முடித்துவைக்கப்படுகிறது, 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே உள்ளது என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.