இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற கர்நாடக தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். “இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற கர்நாடக தலைமை நீதிபதி ரிதுராஜை நியமனம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக நீதிபதி கே.டி சங்கரன், பேராசி ரியர் ஆனந்த் பாலிவால், பேராசிரியர் டி.பி. வர்மா, பேராசிரியர் ராகா ஆர்யா மற்றும் எம். கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்” என்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவ தற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.