court

img

நாட்டை கொந்தளிப்பிலேயே வைத்திருக்க நினைக்காதீர்கள்?

பாஜக வழக்கறிஞருக்கு  உச்சநீதிமன்றம் சூடு

புதுதில்லி, பிப்.28- மதப்பிரச்சனைகளைக் கிளப்பி நாட்டைக் கொதி நிலையிலேயே வைத்திருக்க நினைக்கா தீர்கள் என்று பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயாவை உச்ச நீதிமன்றம் கண்  டித்துள்ளது. படையெடுப்பு கால அரசியலைப் பேசி, “இந்த நாட்டின் நிகழ்கால, வருங்கால சந்ததி யினரை கடந்த காலத்தின் கைதிகளாக வைத்தி ருக்க முடியாது!” என்றும் நீதிபதிகள் கே.எம்.  ஜோசப், பி.வி. நாகரத்னா அமர்வு குறிப்பிட்டுள்  ளது. பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி  உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத்  தாக்கல் செய்திருந்தார். அதில், காட்டு மிராண்டித்தனமான வெளிநாட்டுப் (முகலா யர்) படையெடுப்பாளர்களால் நமது வர லாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மதவழிபாட்டுத் தலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்; பெயர்மாற்றும் ஆணையம் அமைத்து, நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களின் உண்மையான அடை யாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த மனுவின் நோக்கம் என்ன?” என்று பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயாவிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “பிரச்சனைக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை  (இஸ்லாமியர்களை) நோக்கி விரலை நீட்டு கிறீர்கள்.. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவைத் தாழ்த்துகிறீர்கள்; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இது ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை  நினைவில் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்ட நீதி பதி கே.எம். ஜோசப், “இதை (பெயர் மாற்றத்தை)  ஒரு முக்கியப் பிரச்சனையாக வைத்து நாட்டைக்  கொதிநிலையிலேயே வைத்திருக்க விரும்பு கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். “இந்து மதம் ஒரு வாழ்க்கை முறையாகும், அதனால்தான் இந்தியா அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளது. அதனால்தான் நாம் ஒன்றாக வாழ முடிகிறது. பிரிட்டிஷாரின் பிரித்தா ளும் ஆட்சிக் கொள்கை நம் சமூகத்தில் பிளவை  ஏற்படுத்தியது. அதனை நாமும் பின்பற்றக் கூடாது” என நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டார். ஆனால், “வேதங்கள் மற்றும் புராணங்களில்  குறிப்பிடப்பட்டுள்ள பல வரலாற்று இடங்க ளுக்கு இப்போது “வெளிநாட்டு கொள்ளை யர்களின்” பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவுரங்க சீப், லோதி, கஜினி போன்றோருக்கு இந்தியா வுடன் என்ன தொடர்பு? இந்திரப்பிரஸ்தம் (தில்லி) யுதிஷ்டிரால் கட்டப்பட்டது என்றாலும், பாண்டவர்களின் பெயரில் ஒரு சாலை இல்லை. நகரத்தை கொள்ளையடித்தவரின் பரீதாபாத் பெயர் உள்ளது. இதை எவ்வாறு ஏற்க முடியும்?”  என்று உபாத்யாயா கூறினார்.

அதற்கு, மத வழிபாடுகளுக்கும் சாலை களுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்ட நீதி பதி கே.எம். ஜோசப், “முகலாயப் பேரரசர் அக்பர் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நல்லி ணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்” என்பதை சுட்டிக்காட்டினார். “’படையெடுப்புகளை’ வரலாற்றில் இருந்து  எவ்வாறு விலக்கி வைக்க முடியும்? படை யெடுப்பு ஒரு வரலாற்று உண்மை. பலமுறை இந்த நாடு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதற்காக, நம் நாட்டில் முன்பு நடந்த விஷ யங்களைப் பற்றியே பேசி என்ன பயன்? இதை விட முக்கிப் பிரச்சனைகளே நாட்டில் இல் லையா?” என்று நீதிபதி பி.வி. நாகரத்னா கேள்வி  எழுப்பினார். மேலும், “இதுபோன்ற மனுக்க ளால் சமுதாயத்தை உடைக்க வேண்டாம். தயவு  செய்து, எந்த மதத்தையும் விட, நாட்டை மனத்  தில் கொள்ளுங்கள், இந்து மதத்தில் எந்த மத வெறியும் இல்லை” என்றும் நாகரத்னா கூறி னார்.

“இந்து மதத்திற்கு ஒரு சிறந்த பாரம்பரியம் உள்ளது, அதை சிறுமைப்படுத்தக்கூடாது. மெட்டாபிசிக்ஸ் அடிப்படையில் இந்து மதம்  மிகப்பெரிய மதம். இந்து மதத்தில் அடங்கி யுள்ள உபநிடதங்கள், வேதங்கள், பகவத் கீதை  போன்றவை இணையற்றது. அதைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். தயவு செய்து  அதை சிறுமைப்படுத்தாதீர்கள். நமது பெரு மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் மகத்துவம் நம்மை பெருந்தன்மையுள்ளவர் களாக மாற்ற வேண்டும். நான் ஒரு கிறிஸ்த வன். ஆனால் நான் இந்து மதத்தை சமமாக நேசிப்பவன். அதைக் கற்றுக்கொள்ள முயற்  சிக்கிறேன். இந்து தத்துவம் குறித்த டாக்டர்  எஸ். ராதாகிருஷ்ணனின் படைப்புகளை அனை வரும் படிக்க வேண்டும்” என்று நீதிபதி கே.எம். ஜோசப் கேட்டுக் கொண்டார். “கேரளத்தில் இந்து ராஜாக்கள் தேவாலயங்களுக்கு நிலங் களை நன்கொடையாக வழங்கியதற்கு உதா ரணங்கள் உள்ளன. இதுதான் இந்தியாவின் வரலாறு. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று நீதிபதி ஜோசப் கூறினார். அதற்கு, “இந்த வகையான இயல்பு காரண மாகவே பல வரலாற்று இடங்களிலிருந்து இந்துக்கள் அழிக்கப்பட்டுள்ளனர். பல மாநி லங்களிலும் மாவட்டங்களிலும் இந்துக்கள் சிறு பான்மையினராக உள்ளனர்” என்று பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா மீண்டும் முருங்கை மரம் ஏறினார்.

இதையடுத்து, “பாரதமாகிய இந்தியா ஒரு  மதச்சார்பற்ற நாடு. ஒரு நாடு கடந்த காலத்தின் கைதியாக இருக்க முடியாது. இந்தியா சட்டத் தின் ஆட்சி, மதச்சார்பின்மை, அரசியலமைப்பு ஆகியவற்றுடன் பிணைந்தது. இதன் 14-ஆவது  பிரிவு அரசின் நடவடிக்கைகளில் சமத்துவம்  மற்றும் நீதி ஆகிய இரண்டும் உறுதிப்படுத்தப் பட்டு உள்ளது. அரசியலமைப்பை உருவாக்கி யவர்கள், இந்தியாவை ஒரு குடியரசாகவே கருதினர். இதனை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடி யரசுத் தலைவரைக் கொண்டிருப்பது என்பது  மரபுரீதியான புரிதலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ள டக்கிய ஒரு ஜனநாயகம் என்ற அடிப்படையி லேயே புரிந்து கொள்ள வேண்டும். நாடு  முன்னேற வேண்டியது அவசியம். அதற்கு இன்றியமையாதவை, அடிப்படை உரிமை களையும், வழிகாட்டும் நெறிமுறைகள் (Directive Principles of State Policy -DPSP) அத்தியாயத்தில் பொதிந்துள்ள மூன்று இலக்குகளை அடைவதற்கு சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ப தாகும். எந்த தேசத்தின் வரலாறும் நிகழ்கால  மற்றும் வருங்கால சந்ததியினரை, கடந்த காலத்  தின் கைதிகளாக ஆக்க முடியாது. அரசியல மைப்பின் முகப்புரையில் பொதிந்துள்ள சகோ தரத்துவம், நல்லிணக்கம் ஆகிய தங்கக் கொள்  கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று கூறிய நீதிபதிகள், ஊடுருவியவர்களால் மாற்றப்பட்ட வரலாற்று மற்றும் வழிபாட்டுத் தளங்களின் பெயர்களை மீட்பதற்கு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் உபாத்யாயா தொடர்ந்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.