புதுதில்லி,நவம்பர்.04- உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்தக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அழக்குகளை இந்தியில் நடத்த வேண்டும் என கிஷன் சந்து ஜெயின் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவினை தள்ளுபடி செய்தனர்.
உச்சநீதிமன்றம் பல்வேறு மாநிலங்களிலிருந்து தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளை விசாரிக்கிறது. அப்படியானால் அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கு விசாரணையை நடத்த முடியுமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுதாரருக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.