கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களது வீடுகள் அல்லது கடைகளை புல்டோசர் கொண்டு இடிப்பதை அனுமதிக்க முடியாது என்று ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் கட்டடங்களை மட்டும் குறிவைத்து இடிக்கக் கூடாது. ஒரு பிரிவினரிடம் மட்டும் பாகுபாடு ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுவரை 4.5 லட்சம் கட்டடங்கள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் குறித்தும், நோட்டீஸ் அனுப்புவது, தொடர் நடவடிக்கை எடுப்பது குறித்த விவரங்களை பதிவிட இணையதளம் உருவாக்கப்பட வேண்டும். விதிமீறல் கட்டடங்களாக இருந்தால் கூட குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.