court

img

உபா வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டமான உபா வழக்குகளிலும் சட்ட விதிப்படி ஜாமீன் வழங்கப்பட வேண்டும்; சரியான காரணங்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பது அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தடை விதிக்கப்பட்ட PFI அமைப்பை சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டத்தால் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த நபரை ஜாமீனில் விடுவித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் உத்தரவு.