புதுதில்லி, அக். 17 - உச்ச நீதிமன்றத் தலை மை நீதிபதி யு.யு. லலித் நவம்பர் 8-ஆம் தேதியுடன் பதவி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய மற்றும் நாட்டின் 50-ஆவது தலை மை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் நியமிக்கப்பட்டுள் ளார். சந்திரசூட் பெயரை யு.யு. லலித் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், ஒன்றிய அரசு திங்களன்று முறைப் படி அறிவிப்பு வெளியி ட்டுள்ளது. நவம்பர் 9-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்ளும் டி.ஒய். சந்திரசூட், 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை 2 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகிப்பார்.