சென்னை,அக்.18- சட்டப்பேரவையில் செவ்வாயன்று (அக்.18) ரூ.3795.72 கோடி நிதி ஒதுக்க வழிவகை செய்யும் 2022-23ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். போக்குவரத்து துறையிலும், சொத்துக்களை உருவாக்க மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு பங்கு மூலதன உதவியாக ரூ.500 கோடியை அரசு அனுமதிக்க உள்ளது. இது இந்த மானிய கோரிக்கையில் சேர்க்கப்பட் டுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள புறநகர் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.373.50 கோடியை அரசு அனுமதித்து உள்ளது.