சென்னை,நவ.20- சென்னை உயர்நீதிமன்றம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டப்பட்ட இந்த கட்டிடம் சென்னையின் முக்கியமான அடை யாளங்களுள் ஒன்று. பாரம்பரிய மிக்க இந்த உயர் நீதிமன்றத்திற்கு நாள்தோறும் ஏராள மான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் இந்த வளாகம், சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இருப்பினும் உயர்நீதிமன்ற வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக மூடப்படும் வழக்கம், ஒரு சம்பிரதாயமாக கடை ப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்திற்கு பல்வேறு காரணங் களும், கதைகளும் சொல்லப்பட்டு வரு கின்றன. தற்போது நீதிமன்ற கட்டி டம் அமைந்துள்ள இடத்தில் சென்ன கேசவ பெருமாள் கோவில், சென்ன மல்லேஸ்வரர் கோவில் என இரண்டு கோவில்கள் இருந்ததாகவும், அந்த கோவில்களுக்கு மாற்று இடம் வழங்கி உயர்நீதிமன்றம் கட்டிடம் கட்டப்பட்ட தாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. இதன்படி உயர்நீதிமன்ற வளாகம் கோவிலுக்குச் சொந்தமானது என்ற கருத்தை வலியுறுத்த ஆண்டுக்கு ஒரு நாள் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுவதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி உயர்நீதிமன்ற கட்டப்பட்டுள்ள இடமானது வேறு சில கோவில்களுக்கும் சொந்த மான இடம் என்றும் சில கதைகள் உலவுகின்றன.
ஆனால் அதிகாரப் பூர்வமாக இதற்கு வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் ஜார்ஜ் டவுண், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்ட தால், அப்பகுதியில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. ஆனால் நாளடைவில் மக்கள் உயர்நீதிமன்றம் சுற்றிச் செல்வதற்கு பதிலாக, நீதி மன்ற வளாகத்தின் உள்ளே இருக்கும் பாதையை பயன்படுத்தத் தொடங்கி னர். இதை கவனத்தில் கொண்ட நீதி மன்ற நிர்வாகம், எதிர்காலத்தில் நீதி மன்ற வளாக நடைபாதைக்கு பொது மக்கள் உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு வழக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்றம் தனது உரிமை மற்றும் ஆளுமையை காத்துக் கொள்கிறது. இந்த வழக்கத்தின்படி உயர்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து கதவுகளும் 24 மணி நேரத்திற்கு முழு வதுமாக மூடப்படும். இதன் அடிப்படை யில் இந்த ஆண்டு சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிறு இரவு 8 மணி வரை கதவுகள் மூடப்பட்டன. இது குறித்த அறிவிப்பு நோட்டீஸ்கள் அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டன.