court

img

குட்கா தடை: தமிழ்நாடு அரசு புதிய அரசாணை இயற்றலாம் - உச்ச நீதிமன்றம்

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை கொண்டு வரலாம் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து 2018-இல் வெளியிட்ட அரசாணையை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை கொண்டு வரலாம் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.