cinema

img

புதனன்று விசாரணைக்கு வரும் ஆர்யன் கானின் ஜாமின் மனு

மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆரியன் கானின் ஜாமின் மனு  வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   

சொகுசு கப்பலில் போதை மருந்து பயன்படுத்தியதாகப் பதிவான வழக்கில் ஒரு வாரத்திற்கு முன்பு கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது தரப்பில் மீண்டும் ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்ட போது, பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் தர வேண்டும் எனவும், ஆர்யன் கானின் காவலை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்க வேண்டும் எனவும் போதை பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, வரும் புதன்கிழமைக்குள் பதிலைத் தாக்கல் செய்யுமாறு போதை பொருள் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்று ஆர்யன் கானின் ஜாமின் மனு குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். 3 ஆவது முறையாகத் தாக்கல் செய்த மனுவிலும் உடனடியாக ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

;