இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார்கள். 2021-ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்களின் களத்தைப் பேசியது. 1970 களில் வடசென்னைப் பகுதி குத்துச்சண்டைக் கலைக்குப் பேரெடுத்திருந்த பின்னணியில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் விவரிக்கப்பட்டிருந்தது. ஓடிடி தளத்தில் வெளி யான அந்தப் படத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், கலையரசன், காளி வெங்கட் போன்றோர் நடித்திருந்தார்கள். இந்த சார்பட்டா பரம்பரையின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது இயக்கிவரும் ‘தங்கலான்’ படம் நிறைவடைந்தவுடன் சார்பட்டாவின் இரண்டாம் பாகத்தை ரஞ்சித் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.