cinema

img

அமைதியாக இருப்பது அநீதிதான்...

இயக்குநர் வசந்தபாலனின் அநீதி திரைப்படம் ஜூலை 21 அன்று வெளிவருகிறது. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் போன்ற பலரும் நடித்திருக்கும் இந்த அநீதி பட வெளியீட்டினையொட்டி பத்திரிகைப் பேட்டியொன்றில் வசந்தபாலன் இவ்வாறு கூறியிருக்கிறார்: ‘‘ஒருநாள் தொலைக்காட்சியில் சாக்லெட் விளம்பரம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு பாட்டி சேர் ஒன்றில் உட்கார்ந்திருப்பாள். அவளுடைய கைத்தடி கீழே விழுந்துவிடும். எதிரிலிருக்கும் பேரனிடம் அதனை எடுத்துக்கொடுக்கச் சொல்லுவாள். அவன் அதைப் பொருட்படுத்தாமல் சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டிருப்பான். அதனால் அந்தப் பாட்டியே இறங்கி அந்தக் கைத்தடியை எடுக்கிறாள். அந்த நேரத்தில் அவள் உட்கார்ந்த இடத்தின் மேலிருந்து ஒரு பொருள் விழுந்து அவள் உட்கார்ந்திருந்த சேர் உடைந்துபோகும். அப்போது அந்தப் பாட்டி, ‘நல்லவேளைப்பா நீ எதுவும் பண்ணல...’ என்று சொல்வாள். இதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்தது.  நீங்கள் அடுத்த தலைமுறைக்கு என்ன கருத்தைச் சொல்ல வருகிறீர்கள்? பொறுப்பில்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதுதான் உங்கள் திட்டமா? இந்த வியாபார உலகமும் கார்ப்பரேட் கம்பெனிகளும் மனிதர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்கிற கோபம்தான் இந்த அநீதி திரைப்படம் உருவாகக் காரணம். எல்லோருக்கும் இனிக்கிற சாக்லெட் ஒருவனுக்கு கசக்க ஆரம்பித்தால் என்னவாகும் என்று நினைத்ததும் தொடங்கியது இந்தப் படம். இது விவாதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அமைதியா இருப்பதும்கூட அநீதிதான்!’’