cinema

img

பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் மரணம்...  

சென்னை 
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் 1980-1990 இடைப்பட்ட காலத்தில் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனி தடம் பதித்தவர். 

தமிழ் மலையாளம் என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சித்ரா தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்து பலத்த பாராட்டை பெற்றார். கடைசியாக "என் சங்கத்து ஆள எவன்டா அடிச்சது" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2020-ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு நடிப்பு வேலைகளில் கவனம் செலுத்தாமல் ஓய்விலேயே இருந்தார். 

இந்நிலையில் நல்லெண்ணெய் சித்ரா இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். 56 வயதாகும் சித்ராவுக்கு விஜயராகவன் என்ற கணவரும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா என்ற புனைபெயரும் உண்டு. நல்லெண்ணெய் சித்ராவின் மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.       

;