cinema

img

தயாரிப்பாளர் சங்கம் குற்றச்சாட்டு:  விஷால் மறுப்பு...

சென்னை:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் கடந்த 2017‌ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடிகர் விஷால் இருந்து வந்தார்.

ஆனால் திடீரென கடந்த 2019 ஆம் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்க பொறுப்புகளை தனி அலுவலர் மஞ்சுளா என்பவரிடம் ஒப்படைத்தது. இதனால் தயாரிப்பாளர் சங்க கணக்குகள் அனைத்தையும் தனி அலுவலரிடம் அப்போதைய பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஒப்படைத்தார்.இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு முரளி ராமசாமி தலைமை யிலான அணி பதவியேற்றுள்ளதுமுந்தைய தலைவரான விஷாலிடம் கணக்குகள் தொடர்பான விளக்கத்தை கேட்டு தனி அலுவலரும் தணிக்கை குழுவினரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி வெளிவந்தது.தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பொருப்பில் விஷால் இருந்தபோது செய்யப்பட்ட வரவு- செலவு கணக்குகள் தொடர்பான விளக்கத்தினை தனி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விஷால் தரப்பினர் கூறியப்போது, ‘டிஜிட்டல் முறையில் தயாரிப்பாளர் சங்க கணக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு நாங்கள் செய்த செலவுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்றும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த வைப்புநிதி முழுவதும் காணாமல் போய்விட்டதாக புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கும் முரளி ராமசாமி அணியின் நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது.

;