business

img

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு!

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரன் ரூ.1,120 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (02-06-2025) காலை ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.880 உயர்ந்து இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு காலையில் ரூ.30 உயர்ந்து நிலையில், மாலையில் ரூ.110 உயர்ந்து மொத்தமாக ரூ.140 உயர்ந்து ரூ.59,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் 1 கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.111-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.