டிஜிட்டல் நாணயம் சோதனை முறையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
எஸ்.பி.ஐ, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் இந்த சேவையை வழங்கப்படும் என்றும், முதற்கட்டமாக மொத்த விலை வர்த்தகத்திற்கு தொடங்கப்படும் என்றும், அடுத்த மாதம் சில்லறை வர்த்தகத்திற்கு டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என்றும், அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.