தமிழ்த் திரை உலகமும் கம்யூனிஸ்டுகளும்
1947-இல் நாடு விடுதலை பெற்ற பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படத்துறை யைப் பயன்படுத்தத் தொடங்கியது. சுதந்திர இந்தியாவின் தணிக்கைக் கொள் கைகளால் தி.மு.கழகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகள் திரைக்கு வந்தன. மின்சார மயமான கிராமங்களில் டூரிங் டாக்கீஸ்கள் சினிமாப் பெட்டிகளைக் கொண்டு நுழைந்தன. சினிமாவின் சக்தி யைப் புரிந்தவர்களாகத் தி.மு.கழகத்தினர் விளங்கினர். ஐம்பதுகளில் கம்யூனிஸ்டுகள் தலை மறைவு வாழ்க்கையும், சிறை வாழ்வும் அனுபவித்ததால் கலைத்துறையில் முழு மையாக ஈடுபட முடியவில்லை. ப.ஜீவா னந்தம் திரைத்துறைக் கலைஞர்களோடு தொடர்பு கொண்டி ருந்தார். கம்யூனிஸ்ட் இயக்க கலைஞர்களான எம்.பி.சீனி வாசன், டி.கே.பாலச்சந்திரன், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரையும் நெறிப்படுத்தினார். “அவன் அமரன்” - பொங்கிய தொழிலாளர் போராட்டம் தி பீப்பிள்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் 1958-இல் “அவன் அமரன்” திரைப்படத்தை எடுத்தது. எஸ்.பாலசந்தர் இயக்கி னார். லில்லி மிஸ்ஸ் கூலியாளான ஆதரவற்ற மாரியம்மா வின் மகன் அருள். பாரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பிய அருள் தொழிற்சங்கப் பணியில் ஈடுபடுகிறான். மில்லில் இரண்டா யிரம் தொழிலாளர்கள் வேலை நீக்கத்திற்கு எதிராக போராட் டம் வெடிக்கிறது. முதலாளிகளின் குண்டர்களால் அருள் கொல்லப்பட்டு, அமரனாகிறான்.
“பாண்டித் தேவன்” - மக்களுக்காக உயிர்த்தியாகம் 1959-இல் டி.கே.பாலச்சந்திரன் “பாண்டித்தேவன்” படத்தை உருவாக்கினார். கதைநாயகன் ஓர் இளம் எஞ்சினி யர். தொழிலாளர்கள் அவனால் நலம் பெறுகின்றனர். பயங்கர வெள்ளத்தைத் திசைதிருப்ப, மக்களையும் அணைக்கட்டை யும் காப்பாற்ற, உயிரைத் துச்சமென மதித்து வெடி மருந்து டன் மலையுச்சிக்குப் போகிறான். முகவை ராஜமாணிக்கம் வசனம் எழுதினார். “பாதை தெரியுது பார்” - முதல் மக்கள் நிதி திரைப்படம் 1960-இல் “குமரி பிலிம்ஸ்” உருவாகியது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.ஆர். வெங்கட்ராமன் தலைமையில் ப.ஜீவானந்தம் காமிராவை முடுக்கி பாதை தெரியுது பார் படப்பிடிப்பைத் துவக்கி வைத் தார். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ். வி. சகஸ்ர நாமம், முத்துராமன் மற்றும் பலரும் நடித்தி ருந்தனர். இது களத்தூர் கண்ணம்மாவுடன் இணைந்து தமிழில் சிறந்த திரைப்படத்திற் கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.
கொல்கத்தா விலிருந்து தமிழ்நாடு வந்த சினிமா ஒளிப் பதிவாளர் நிமாய் கோஷ் அடிப்படையில் சினிமா ஒளிப்பதி வாளர். நிமாய் கோஷும், கம்யூனிஸ்டான இசையமைப்பா ளர் எம்.பி.சீனிவாசனும் சேர்ந்து தொழிலாளர்கள், பொன்மலை ரயில்வே ஊழியர்கள், மாணவர்கள் என பலரிடம் 500 முதல் 5000 ரூபாய் வசூலித்து குமரி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ‘பாதை தெரியுது பார்’ படத்தை எடுத்தனர். சுமார் 45 ஆயிரம் பேர் இணைந்து இதற்கு நிதியுதவி செய்தனர். தமிழின் முதல் கிரவுட் பண்டிங் திரைப்படம் என்று இதனைச் சொல்லலாம். 5000 ரூபாய்க்கு மேல் பலரும் நிதி தர முன்வந்தபோது நிமாய் கோஷ் அதனை மறுத்தார். தங்க ளது முயற்சி லாப நோக்கம் இல்லாததாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். படத்திற்கான கதை யைக் கூட்டாக, தோழர்கள் அமர்ந்து பேரவை நடத்தி, விவாதித்து, உருவாக்கினார். தொழிலாளி வர்க்க குணங் களோடு அமைந்த கதாநாயகனை உருவாக்கினர். மார்க்சீய மெய்ஞானத்தில் சிறந்தவரான ஆர்.கே.கண்ணன் திரைக் கதை வசனம் எழுதினார். பொன்மலை இரயில்வே தொழிலாளர்கள் நடத்தி வந்த வள்ளுவர் கலைமன்றம் அமைப்பிலிருந்து கே.விஜயன் என்ற பஞ்சாலைத் தொழி லாளியை முருகேசனாக நடிக்க வைத்தனர். சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா, டி.கே.பாலச்சந்திரன் போன்ற பல கலை ஞர்களை இணைத்து உருவாக்கப்பட்ட இந்தப்படத்தின் இறுதி யில் பஞ்சாலை மானேஜிங் டைரக்டர் உணவு தானியங் களைப் பதுக்கி கள்ள மார்க்கெட்டில் விற்கும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார். தொழிலாளர்கள் அதை முறி யடிக்கின்றனர். கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியார் பாடல் எழுதி னர். எம்.பி.சீனிவாசன் இசையமைத்தார். இந்தப் படத்தை ஓட விடாமல் செய்ய ஏ.வி.எம்.செட்டியார் விநியோக உரிமையை வாங்கி, காணாமல் செய்தார். தொழி லாளி வர்க்கம் கலைப்படைப்பை உருவாக்குவதுடன், விநி யோக கட்டமைப்பையும் பெற்றிருக்க வேண்டும் என்ற பாடத்தை இது உணர்த்தியது. காலம் மாறிப்போச்சு தெலுங்கில் வெற்றிபெற்ற “ரோஜுல மாராயி” படத்தை சி.வி.ஆர்.பிரசாத் தமிழில் “காலம் மாறிப் போச்சு” படமாக ஆக்கினார்.
தஞ்சை ஜமீன்தார்களின் கொடுமைகள் பற்றிய இப்படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி நடித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியினரின் திரை முயற்சிகள் 1978-இல் யுகசக்தி பிலிம்ஸ் சின்னப்பபாரதியின் “தாகம்” நாவலை “புதிய அடிமைகள்” என படமாக்கினர். டி.செல்வரா ஜின் “தேநீர்” நாவலும் “ஊமை ஜனங்கள்” ஆக மாறியது. இரண்டுமே பெரிதாக பேசப்படவில்லை. இடதுசாரி சிந்தனையுடன் பல்வேறு படைப்புகள் மல்லியம் ராஜகோபால், வின்சென்ட் இயக்கிய “துலா பாரம்”, “ஏழாவது மனிதன்”, “கண் சிவந்தால் மண் சிவக்கும்” போன்ற படங்களும், கோமல் சுவாமிநாதனின் “தண்ணீர் தண்ணீர்”, “ஒரு இந்தியக் கனவு”, “அனல் காற்று” ஆகிய வையும் இடதுசாரி சிந்தனை கொண்டவை. தொடரும் சினிமா போராட்டம் மறைந்த இயக்குநர் ஜனநாதன் “ஈ”, “பேராண்மை”, “இயற்கை”, “புறம்போக்கு” போன்ற படங்களில் இடதுசாரிக் கருத்துக்களை வணிக வெற்றியாக்கி காட்டினார். இன்றும் “ஜெய் பீம்”, “வாட்டாக்குடி இரணியன்” போன்ற படங்கள் வந்தா லும், இடதுசாரி இயக்கத்திற்கான திரைத்துறை இடம் இன்னும் நிரப்பப்படாத வெற்றிடமாகவே உள்ளது. திரைப்படத்துறை தொழிலாளர் சங்கம் அமைப்பதில் இடது சாரிகள் வெற்றி பெற்றாலும், கலை ஆயுதமாக திரைத் துறையை இன்னும் வலுவாக கையாள வேண்டிய தேவை உள்ளது.