articles

img

அவர் ஒரு கம்யூனிஸ்ட் களஞ்சியம்! - ப. முருகன்

அவர் ஒரு கம்யூனிஸ்ட் களஞ்சியம்! - ப. முருகன்

1942 இல் பிறந்து 2021 இல் மறையும் வரையிலான எண்பதாண்டுகாலத்தில் நினைவு தெரிந்த இளம் வயதிலி ருந்து முதுமைக்காலம் வரை அவரது வாழ்க்கை கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கங்களிலும் அது சார்ந்த பத்திரிகை அலுவலகங்களிலும் தொழிற்சங்க அலுவலகங்களிலுமாகவே  கழிந்தது.  அங்கு பார்த்தது, படித்தது, பழகியது, கேட்டது, கிடைத்தது எல்லாமே கட்சித் தலைவர்கள், ஊழியர்களின் போராட்ட அனுபவங்கள், தியாக வாழ்க்கை பற்றியதாகவே அமைந்தது. அத்துடன் அவர் கட்சி அலுவலகத்தில் படமாகப் பார்த்த காரல் மார்க்ஸ், நூலகத்தில் முதன் முதலில் படித்த வாழ்க்கை வரலாறு நூலால் பாடமாகிப் போனார். அதனால் அவரது எண்பதாண்டு காலத்தில் முதல் 40 ஆண்டுகள் கட்சி அலுவலக பணியாகவும் இரண்டாம் 40 ஆண்டு எழுத்துப் பணியாகவுமே அமைந்தது. புத்தகங்களை விற்பவராகத் துவங்கி, பத்திரிகையாளராக  அங்குள்ள நூலகத்தின் காப்பாளராக செயல்பட்டது அவரது அறிவுப்பசிக்கும் ஆர்வத் தேட லுக்கும் அருமையான வாய்ப்பாக அமைந்தது. ஜனசக்தி பத்திரிகைப் பணி தமிழ், ஆங்கில உள்நாட்டு இதழ்களை மட்டு மல்லாது சோவியத் ரஷ்யாவின் இதழ்க ளையும் படிக்கும் வாய்ப்பை வழங்கி யது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தீவிரமான காலத்தில் 1963 - இல் தீக்கதிர் வார இதழ் துவக் கப்பட்டபோது மாலையில் அதற்காக வேலை பார்த்தார்.

கட்சி பிரிந்த பின்னர்  ஜனசக்தியிலிருந்து விலக்கப்பட்டார். தீக்கதிர் பணியில் முழுமையாக ஈடுபட்டார். தீக்கதிர் ஆசிரியர் அப்பு உள்ளிட் டோர் கைது செய்யப்பட, புதிய ஆசிரிய ராக அண்ணாச்சி சங்கர நாராயணன் தன்னை ஆசிரியராக பதிவு செய்திட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்த போது, கோவை ஈஸ்வரனுடன் அவரும் கைது செய்யப்பட்டார். இதனால் பாது காப்பு சட்டத்தின்பேரில் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்தக் காலத்தில்தான் அவர் தனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். இது பிற்காலத்தில் தில்லியில் கட்சி அலுவலகப்பணிக்கும் எழுத்துப்பணிக் கும் பயன்பட்டது. சிறையிலிருந்து விடு தலையானதும் தீக்கதிர் பணியில் ஈடுபட்டார்.

1969 இல் அவர் விரும்பியபடியே தில்லியில் கட்சிப் பணி செய்யும் வாய்ப்பு தோழர் பி.ராமமூர்த்தி மூலம் கிடைத்தது. முதலில் நாடாளுமன்றக்குழு அலுவல கத்திலும் பின்னர் மத்தியக்குழு அலுவலகத்திலும் பணியாற்றினார். இந்தக்காலத்தில்தான் திருமணம் நடைபெற்றது. சில காலம் குடும்பம் அங்கு வசித்தது. சிபிஎம் நவரத்தினத் தலைவர்கள் மட்டுமல்லாது, வாழும் வரலாறுகளான பகத்சிங்கின் தோழர் சிவவர்மா, கயா பிரசாத், அந்தமான் சிறையிலிருந்த கணேஷ் கோஷ், சுபோத்ராய் போன்ற வர்களை சந்திக்கவும் அவர்களது போராட்ட, சிறை அனுபவங்களை கேட்க வும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இவை யாவும் பின்னாளில் அவரது எழுத்துப் பணிக்கு உதவியது, உரமூட்டியது. இந்நிலையில் 15 ஆண்டுகால பணிக்கு பின் அவரது விருப்பத்தின் பேரில் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். அப்போது சிபிஎம் பொதுச் செயலாள ராக இருந்த தோழர் இஎம்எஸ் அவர்கள், இவரது பணியைப் பாராட்டிக் கடிதம் கொடுத்தார்.  1983 – இல் தமிழகம் வந்ததும் மதுரையில் தோழர் கீழக்கரை முத்து வின் நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே தீக்கதிரில் மொழி பெயர்ப்புப் பணியிலும் கட்டுரைகள் எழுதுவதிலும் ஈடுபட்டார்.

1985 இல் தீக்கதிருக்கு விளம்பரம் பெற்றுத்தர வேண்டுமென அதன் வெளியீட்டாள ரான என். வரதராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில் நான்காண்டுகள் அந்தப் பணியிலும் ஈடுபட்டார். அதன் மூலம் தீக்கதிருக்கு விளம்பர வருவாய் கிடைக்க துவங்கியது. 500 க்கு மேற்பட்ட நிறுவனங்களின் தொடர்பும் சென்னை, மதுரை, சிவகாசி, திருப்பூரில் முகவர் ஏற்பாடும் செய்து கொடுத்தார். இந்தக் காலத்தில்தான் 1987 - இல் தோழர் பி.ஆர் காலமானார். அவரது இறுதிநிகழ்ச்சிக்காக சென்னை சென்ற போது சவுத் ஏசியன் புக்ஸ்உரிமையாளர் பாலாஜி, தோழர் இஎம்எஸ் ‘அவர்க ளின் இந்திய கம்யூனிஸ்ட்டின் நினை வலைகள்’  நூலை மொழி பெயர்த்துத் தர கேட்டுக் கொண்டார். அது இன்னொரு திருப்புமுனையாக அமைந்தது. எழுத்துலகின் வாசல் திறந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு, தொழிற்சங்க முன்னோடிகள், கம்யூ னிஸ்ட் இயக்கத் தலைவர்களின் வர லாறு,உலகத் தலைவர்களின் வரலாறு என தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்று க்கு மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தார். அதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்து, ஆதாரங்களைத் திரட்டினார். பல மூத்த தலைவர்களை, தொண்டர்களை நேரில் சந்தித்து பேட்டி கண்டு தகவல்களை உறுதிப்படுத்தினார். தமிழ் இலக்கியத்தை உ.வே.சாமிநாதய்யர் தேடித் தேடி திரட்டியது போல கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை , போராட்டப் பொக்கிசங்களை அவர் திரட்டினார்.

பல்வேறு வரலாற்று நூல்களைப் படைத்து வரலாறு படைத்தார். அவை தான் இன்று, இளைய தலைமுறையின ருக்கு மட்டுமின்றி மூத்த தலைமுறை யினருக்கும் உதவிகரமாக அமைந்தி ருக்கின்றன. தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழக மார்க்சிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், உலக கம்யூனிஸ்ட் இயக் கத்தின் வரலாறு - முதல் பாகம், மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தின தலை வர்கள் மற்றும் மாநில, மாவட்டத் தலை வர்கள் வரலாறு, கட்சியின் மாவட்ட வர லாறு என அவர் எழுதிக் குவித்தவை ஏரா ளம். இவை இந்திய அரசியல், சமூக, பொருளாதார அமைப்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம் போல் விளங்குபவை. காலக்கண்ணாடியாய்க் காட்டுபவை. காரல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ, ஹோ சி மின், மார்ட்டின் லூதர் கிங், ஆங் சான் சூகி  போன்ற தலைவர்களின் வரலாறு மட்டுமின்றி, அயர்லாந்து, பாலஸ்தீன போராட்டம் பற்றியும், அந்தமான் தீவுச் சிறை, உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு (கொலோன்) என அவர் எழுதியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 100,  காரல் மார்க்ஸ் - 200, காலங்களில் நிறைய கட்டுரைகள் தீக்கதிரில் எழுதி னார். காலத்தின் தேவை கருதி அவர் எழுதிய மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஒப்பீட்டு நூல் சிறப்புடையதாகும்.  இது தவிர மகாகவி பாரதியின் பாட்டுக்கொரு கதை, கம்யூனிட்ஸ்டாய் இருப்பதன் நன்மை, கம்யூனிஸ்டுகளும் கலப்பு திருமணமும் போன்ற சிறு நூல்களையும் எழுதியுள்ளார்.  

கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றிய தக வல்கள், தரவுகள் பற்றி எப்போது கேட்டா லும் உடனே அவரிடம் பதில் கிடைக்கும். அவர் ஒரு நடமாடும் கம்யூனிஸ்ட் களஞ்சியம். ஆனால் அவர் கூறுவதோ,  ‘கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு பல்கலைக் கழகம்’ என்பதாகும். அதில் அவர் ஒரு பேராசிரியர். சாகும் வரை மார்க்சியத் தொண்டு என்று கூறுவார், அதன்படியே அவர் வாழ்ந்தார். எழுத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு வறுமையோடு போராடினா லும் அவர் ஒரு போதும் சோர்வடைந்த தில்லை. எமக்குத் தொழில் கவிதை என்ற மகாகவி பாரதி போல,மாமேதை மார்க்ஸ் போல எழுதுவதிலேயே கண்ணாய் இருந்தார். ஆனால் அவரது துணைவி யாரே குடும்ப பாரத்தை தூண்போல தாங்கினார். அவர்  இறந்த பின்னும் பத்தாண்டுக்கு மேலாக தனது எழுத்துப் பணியை தவம் போல் செய்துவந்தார். அவர் யார்? அவர் தோழர் என்.ஆர்., என்றும் என்.ஆர்.கே., என்றும் தோழர்க ளால் அழைக்கப்பட்ட என்.ராமகிருஷ் ணன்.அவரது வாழ்க்கை கம்யூனிஸம்; அவரது சுவாசம் எழுத்து!