articles

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

 சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசார ணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆவதால், மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில்  பொதுமக்களின் அமைதியே முக்கியம் என நீதிபதிகள் தெரி வித்தனர்.


அண்ணாமலைக்கு பதிலடி!

சென்னை: ஒன்றிய அரசிடம் ரூ.2,152 கோடி நிதி பெற்று தந்துவிட்டு, பள்ளிக் கல்வித்துறை என்ன செய்கிறது என்று அண்ணாமலை கூறியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட் டுக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு வழங்கியது பற்றி ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்போம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுங்கள் என அவர் கூறியுள்ளார். ஞானசேகரனுக்கு ரத்தப் பரிசோதனை சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனை முடிந்து சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
 


விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாது காப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜயின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு வர் எனத் தெரிகிறது
.
பாம்பன் பாலம் மார்ச்-இல் திறப்பு


இராமேஸ்வரம்: பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஜன.31ல் ஒத்திகை பணி நடந்தது. இந்நிலை
யில், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா மார்ச்சில் நடக்கும் என்றும், பிரதமர் மோடி இதை திறந்து வைப்பதாகவும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்


மார்ச் 6-9 இல் செட் தேர்வு

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (செட்) மார்ச் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதி களில் நடைபெறும் என்றும், இந்த தேர்வுகள் கணினி வாயி லாக நடைபெறுவதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தேர்வு தேதிக்கு  7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 


வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: ஆவடியில் உள்ள ராணுவ பீரங்கி தொழிற் சாலை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு  மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலை அலுவலக  வளாகம் முழுவதும் காவல் துறையினர், வெடிகுண்டு நிபு ணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்ட லைத் தொடர்ந்து ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றிய  அதிகாரிகள், ஊழியர்கள் வெளியேறினர்.


வங்கி மேலாளருக்கு அபராதம்

மதுரை: வங்கிக் கடனை திரும்பச் செலுத்திய பிறகும் அடமானமாக வைத்த பத்திரத்தை திரும்பத் தர மறுப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25,000 அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தஞ்சாவூர்: தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வியாழனன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்  ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்  சிராக் பஸ்வான் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர் களிடம், “சாதிவாரி கணக்கெடுப்பை நானும், எனது கட்சியும்  (லோக் ஜனசக்தி கட்சி) ஆதரிக்கிறோம்” எனக் கூறினார்.


ஏடிஜிபி உத்தரவு 

சென்னை: பாலியல் துன்புறுத்தல் புகார் எதிரொலியாக, காவல்துறை உயர் அதிகாரிகள் இல்லங்களில் (முகாம் அலுவ லகம்) பெண் போலீசாருக்கு பணி ஒதுக்கக் கூடாது என உயர்  அதிகாரிகளுக்கு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.