articles

img

அகில இந்திய மாநாடு 2

இசையில் தொடங்கிய புரட்சி

தமிழகப் பொதுவுடமை இயக்கம்  துவக்கம் முதலே ஆட்டக்கலை களோடும் இசைப் பாடல்களோடும் இறுக்கமான பிணைப்பைக் கொண்டு உள்ளது. பொதுவுடமை இயக்கத்தின் கலைப்பங்களிப்பும் இசைப் பாடல்களு டன் தான் துவங்கியது என்று கூறலாம். தொழிலாளிகள், விவசாயிகளை அணிதிரட்டிக்கட்சி நடத்திய பல போராட்டங்கள், பேரணிகளின் முன்னணிப் படையாகக் கலைக்குழுக்கள் பறை முழக்கிச் சென்றதைப்  பல மூத்த தோழர்கள் குறிப்பிடுகிறார்கள். தஞ்சை மண் ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பு ரீதியாக முன்னெ டுத்த முதல் போராட்டமான 1943–தென்பரை விவசாயிகள்  போராட்டத்தில் மன்னார்குடியை நோக்கி நடத்தப்பட்ட  பேரணியில் பறை இசைத்துத் தாரை தப்பட்டைகள் முழங்கச் சென்றதாக வரலாறு குறித்து வைக்கிறது. “காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழு மில்லை பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே பசை யற்றுப் போனோமடா” என்கிற தோழர் ஜீவாவின் பாடல்  வரிகள், மூடப்பட்ட கோவை ஸ்டேன்ஸ் மில் தொழிற் சாலை வாசலிலிருந்து புறப்பட்டுத் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் எதிரொலித்து உழைக்கும் மக்களின் மனங்களில் ஆவேசக்கனல் மூட்டியது. தியாகி மணவாளன் எழுதிய “விடுதலைப்போரினில் வீழ்ந்த மலரே..தோழா..தோழா..வீரர் உமக்கே வணக்கம் வணக்கம்” - என்கிற பாடல் வரலாற்று உணர்வை ஊட்டி  தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையை நினை வூட்டும் கூட்டங்களில் பாடப்பட்டு உணர்ச்சிகரமான பங்காற்றியது. தோழர் நாகை சாமிநாதன் மொழி பெயர்த்த சர்வதேச கீதமான “பட்டினிக் கொடுஞ்சிறைக் குள் பதறுகின்ற மனிதர்காள்…” என்கிற பாடல் பாடப் பெறாத கம்யூனிஸ்ட் கூட்டமே இருக்காது. இசையோடு பிறந்த இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கம்.

ஆராய்ச்சி இதழ்கள் -  அறிவின் புதிய பரிமாணம்

1960-க்களில் முழு வேகத்துடன் தமிழ கத்தில் நுழைந்த மொழியியல் படிப்பும், அதனுடன் தொடர்புடைய மானிடவியல் சமு தாயவியல், உளவியல் அறிவும் புதிய ஆய்வுக்களங்களை நம்முன் நிறுத்தின. நாட்டார் வழக்காற்றியலும், இனக்குழு மக்கள் பற்றிய படிப்பும் தலைதூக்கத் தொடங்கின. ஆய்வு  நெறிமுறைகளில் மார்க்சிய அணுகுமுறை ஒரு பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. ஜீவா, நா.வா., கைலாசபதி, எஸ்.ஆர்.கே, கா.சிவத் தம்பி, ரகுநாதன், பின்னர் கே.முத்தையா, அருணன் ஆகி யோரின் ஆய்வுரைகள் மார்க்சிய அணுகுமுறையின் முக்கியத்துவத்தை உணர்த்தின. அறிவியல் வழிப்பட்ட தும், சமுதாய உணர்வோடு கூடியதும் பல துறை அறி வுடன் இணைந்ததுமான ஓர் ஆய்வு முறையைச் செயல் படுத்தும் தளம் தேவைப்பட்டது. அந்தத் தளமாக ‘ஆராய்ச்சி’  அமைந்தது. தமிழகம் நன்கறிந்த மார்க்சிய அறிஞர் பேரா சிரியர் நா. வா. அதன் ஆசிரியரானார். ‘ஆராய்ச்சி’ தனது பயணத்தை 1969 சூலையில் தொடங் கியது. காலாண்டு இதழ். 1982 வரை வெளிவந்ததாகத் தெரி கிறது. பேராசிரியரின் மறைவால் இதழ் நின்றுபோயிற்று. பிறகு, சில ஆண்டுகளுக்குப் பின் ஆ.சிவசுப்பிரமணியன், தோத்தாத்ரி, பொன்னீலன் ஆகியோர் முயற்சியில் ‘ஆராய்ச்சி’ இதழ் ‘நாவாவின் ஆராய்ச்சி’ என்ற பெயரில் வந்து, நின்று, இப்போது மீண்டும் ‘புதிய ஆராய்ச்சி’ என்ற பேரில் வந்து கொண்டிருக்கிறது.

இசைப் புரட்சியின் முன்னோடிகள்

தமிழகக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எழுதிய தோழர் என்.ராமகிருஷ்ணன் தன்னுடைய நூலில் கலைகளும் கம்யூனிஸ்ட்டுகளும் என்று  ஒரு தனி அத்தியாயம் எழுதியுள்ளார். “1920 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டங்களில் மகாகவி பாரதியின் தேசபக்தப் பாடல்கள் பாடப்பெற்றன. 1930ஆம் ஆண்டுகளில் இலக்கிய ஆசான் ஜீவா தனது பாடல்கள் மூலம் ஒரு புதிய திருப்பத்தையே ஏற்படுத்தினார். பாடகர் கோவை ராம்தாஸ், “காலுக்குச் செருப்பு மில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை” என்ற ஜீவாவின்  பாடலை உரத்த குரலில் பாடும்பொழுது அது கேட்போ ரின் நாடி, நரம்புகளைத் துடிக்கச் செய்து விடும். தொழி லாளி வர்க்கக் கூட்டங்களில் மட்டுமல்ல, தேசிய இயக்கக் கூட்டங்களிலும் பெரும் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. கோகிலவாணி கே.பி. சுந்தராம்பாள் பாடும் கூட்டங்களில் கூட “காலுக்குச் செருப்புமில்லை” பாடலைப்பாடும்படி கூட்டத்தினர் அவரை நிர்ப்பந்திப்பதுண்டு.” “புளிக்கின்ற கூழுக்கும், எரிக்கின்ற வெய்யில்தனில் புழுவாய்த் துடித்து ழைக்கின்றார்” என்ற ஜீவாவின் பாடலை நாங்கள் பாடும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறி விடுவார்கள். சில கூட்டங்களில் பொது மக்கள் தேம்பித்தேம்பி அழும் அழு குரல் கேட்கும்” என்று கூறியுள்ளார் கே.பி.ஜானகி.

வில்லுப்பாட்டின் மூலம் மக்களிடம் புரட்சி

1951-52 முதலாவது பொதுத் தேர்தல் சமயத்தில் திருமூர்த்தி குழுவின் “குறவன் - குறத்தி” நாடகம் தமிழக மக்களைத் தட்டி யெழுப்பிற்று. தேர்தலில் ஆளும் வர்க்கத்தின் கொள்கை களை அம்பலப்படுத்தி அதில் ஆட்சிக்கு எதிராக மக்க ளின் தீர்ப்பை உருவாக்கியதில் திருமூர்த்தியின் கலை நிகழ்ச்சிகளுக்கு மகத்தான பங்கு உண்டு. “ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா-இல்லே அவனவனே நெலத்தையெல்லாம் அமுக்கிக் கிட்டானா?” என்கிற அவரது பாடல் மிகப்பிரபலம். தமிழக கிராம மக்களின் பழம்பெரும் கலையான வில்லுப்பாட்டு மூலம் தென் மாவட்டங்களில் கட்சியின் கொள்கையைப் பரப்பிய பெருமை வில்லிசை வேந்தர் சாத்தூர் எஸ்.பி.பிச்சைக்குட்டியையும், சிவகிரி எஸ்.எம் கார்க்கியையுமே சாரும். “காந்தி மகான் சரித்திரம்”, “சுதந்திர உதயம்”, “கடவுள் முன் காந்தி”, “மாஸ்டர் மீட்பு”,  “பாஞ்சாலி சபதம்”, “கர்ணன்” போன்ற இசை நிகழ்ச்சி களை வில்லுப்பாட்டு மூலம் பிச்சைக்குட்டி நடத்தினார். மற்றொரு பிரபல வில்லிசைக் கலைஞரான சிவகிரி எஸ்.எம்.கார்க்கி ஆயிரக் கணக்கான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச் சாரத்தை சாதாரண மக்களிடையே கொண்டு சென்றவர். ‘முத்துப்பட்டன்’ கதையை மட்டும் கார்க்கி, 1500 இடங்களில் நடத்தியுள்ளார்.

தமிழ் நாவல் இலக்கியத்தில் அழுத்தமான தடம்

நாவல் இலக்கியத்துக்கு ‘பஞ்சும் பசியும்’ தந்து ரகுநாதன் கணக்கைத் துவக்கி வைத்தார். தாகம் நாவலின் மூலம்  அடியெடுத்து வைத்த கு.சின்னப்பபாரதி பத்துக்கு மேற்பட்ட நாவல்களைப் படைத்துள்ளார். அவருடைய நாவல்கள் உலகின் 9 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. திருக்குறளுக்குப் பிறகு இவ்வளவு அதிக மொழி களில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் அவரே. டி.செல்வராஜ் “மலரும் சருகும்” நாவலில் துவங்கி ‘தோல்’ வரை ஏழு  நாவல்கள் எழுதி அவர் மறைவதற்கு முன்புகூட ஒரு நாவலை எழுதி  விட்டுச்சென்றார். ‘கரிசல்’ முதல் “மறுபக்கம்” வரை நாவல் பொன்னீலனின் பங்களிப்பு. கம்யூனிஸ்ட்டுகளான தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, தேனி சீருடையான், ம.காமுத்துரை, ஆதவன் தீட்சண்யா,  சு.வெங்கடேசன் போன்றோர் தொடர்ந்து நாவலில் இயங்கி வருகின்றனர். கல்கியின் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு லட்சோபலட்சம் மக்க ளின் மனதைக் கவ்விப்பிடித்த “வீரயுக நாயகன் வேள்பாரி” என்கிற நாவலை  ஆனந்த விகடனில் எழுதி பெரும் புகழ் பெற்றவர் மார்க்சிஸ்ட் கட்சியின்  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமரை-புரட்சிக்கான இலக்கிய விதை

1960களின் முற்பாகத்தில் தோழர் ஜீவானந்தம் அவர்களின் முன் முயற்சியில் பிறந்த இரு இயக்கங்கள் எனத் தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றத்தையும் தாமரை இலக்கிய மாத இதழையும் குறிப்பிட வேண்டும். தாமரை இதழின்  ஆசிரியராக தி.க. சிவசங்கரன் பொறுப்பேற்று நடத்திய  1965க்கும் 1972க்கும் இடையிலான காலம் தமிழ்ச்சிறு கதை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய காலம் என்று நிச்சயமாகக் கூறலாம். இன்று தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாளர்களாக எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் பிரபஞ்சன் வண்ண நிலவன், பூமணி, கந்தர்வன், பா. செயப்பிரகாசம், ஆர். கே லிங்கன், தனுஷ்கோடி ராமசாமி (1973), ச.தமிழ்ச் செல்வன்(1974) போன்ற பலரும் முதல் கதையை எழுதி  மலர்ந்து மணம் பரப்பியது தாமரை இதழில்தான் என்று  பெருமையுடன் குறிப்பிட முடியும்.

செம்மலர் - இலக்கிய சாதனை

நாவலாசிரியர் தோழர் கு. சின்னப்பபாரதியின் முன்முயற் சியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கலை இலக்கிய இதழாக 1970 மே மாதம் முதலாக வெளிவந்து கொண்டி ருப்பது செம்மலர். அதனுடைய முதல் இதழின் தலையங்கம் கலை இலக்கி யம் யாருக்காக என்கிற கேள்வியை எழுப்பிக் கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறது: “இன்று புதிய மாறுதலுக்கான புதிய போராட்டம் மலர்ந்திருக்கும் போது  இந்தப் புதிய போராட்டத்தின் புதிய கதாநாயகர்களாக உழைக்கும் மக்கள் வீறு  கொண்டெழுந்திருக்கும் பொழுது இப்புதிய போராட்டத்தின் மூலம் புதிய கலாச் சாரம், புதிய பண்பாடு, புதிய மனிதன் உருவாகிக்கொண்டிருக்கும்போது இவை களுக்கு எதிர்ப்பாகக் கிளம்பும் சுரண்டும் வர்க்கத்தினரை அம்பலப்படுத்துவதும், முற்போக்கு என்ற கொடியின்கீழ் தப்பான வழியில் தவறாகச் செல்கிறவர்களை சரி யான வழிக்கு விமர்சன ரீதியாகக் கொண்டு வருவதுமான பணியில்  தன் புதிய மலர்களை மடலவிழ்க்கிறது.” 1970 மே முதல் இன்றுவரை ஒரு  இதழ் கூட நில்லாமல் இடையறாது வெளிவந்து பொன்விழாவைத்  தாண்டிப் பயணிக்கிறது செம்மலர்.

நாடகத்தில் கம்யூனிஸ்ட்டுகள்

மதுரையில் உருவாகிய “புதுமைக் கலாமன்றம்” தயாரித்த நாடகங்களில் கே.பி.ஜானகியம்மாள், அவரது கணவர் எஸ்.குருசாமி, தோழர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா ஆகி யோர் நடித்துள்ளனர். இதே கால கட்டத்தில் “கந்தன் காட்டும் வழி” என்கிற நாடகம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் பி.ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், கே.பாலதண்டாயுதம், பி.சீனிவாசராவ், ஜீவா, கே.பி.ஜானகி, என்.சங்கரய்யா போன்றோரும் நடித்துள்ளனர். இந்தப் புதுமைக் கலா மன்றத்தின் பொறுப்பாளராக தோழர் பி.சீனிவாசராவ் இருந்துள்ளார். 90 களில் இடதுசாரி இயக்கத்தோடு தன்னை வெளிப்படையாக அடையாளப் படுத்திக்கொண்ட நாடக இயக்குநர் கோமல் சுவாமிநாதனின் “தண்ணீர்  தண்ணீர்,” “அனல் காற்று” போன்ற நாடகங்கள் கட்சி மேடைகளில்  தமிழகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டன. தேசிய அளவில் புகழ்பெற்ற நாடக வியலாளரான பிரளயன் முன்னெடுப்பில் சென்னைக் கலைக்குழு கால் நூற்றாண்டுகாலமாக இடையறாது இயங்கி வருகிறது.

இலக்கியத்தின் திசை மாற்றிய கம்யூனிஸ்ட்டுகள்

1934 இல் சோவியத்தில் மாக்சிம் கார்க்கி தலைமையில்  முதல் உலக எழுத்தாளர்கள் மாநாடு நடைபெற்றது. 1936இல் தான் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் துவக்க முடிந் தது. சரத் சந்திரர், கே.ஏ.அப்பாஸ், முன்ஷி பிரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த்  போன்ற முன்னோடிகள் அச்சங்கத்தின் பொறுப்பேற்றனர். 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் வார இதழாக ‘ஜனசக்தி’, 6-11-1937 அன்று பிறந்தது. 13-11-1937 சனிக்கிழமை அன்று  வெளியான ஜனசக்தி இரண்டாவது இதழில் தோழர் பி.ராமமூர்த்தி ஒரு  சிறுகதையை எழுதினார். உலகப் போரை ஒட்டி வெளியாகியிருந்த ஒரு ஜப்பானிய சிறுகதையைத் தழுவி அவர் எழுதிய “கொட்டாத கைகள்” என்கிற சிறுகதை வெளியானது. கட்சி சார்ந்த எழுத்தாளர்களின் கதைக்  கணக்கை தோழர் பி.ராமமூர்த்தியே அன்று துவக்கி வைத்தார் எனலாம்.