ஷேக் ஹசீனா வாசித் நடத்தி வந்த எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக நடை பெற்ற பெருந்திரள் கலகத்தின் வெளிப் பாடு காரணமாக அவருடைய அரசாங்கம் வீழ்ந்து, ஷேக் ஹசீனா நாட்டைவிட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. போராடி வந்த மாணவர்கள் ‘டாக்காவை நோக்கி பேரணி’க்கு அறைகூவல் விடுத்த தில், நகரத்தை நோக்கி வரத் தொடங்கிய பல்லா யிரக்கணக்கான மாணவர்கள், ஆகஸ்ட் 5 திங்கள் அன்று பிரதமர் இல்லத்தை நோக்கி செல்லத் தொடங்கி னார்கள். ‘போராடும் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டோம்’ என்று பிரதமர் ஹசீனாவிடம் ராணுவத் தளபதி கூறியதானது, தத்தளிக்கும் ஆட்சிக்கு எதிரான இறுதி அடியாக விழுந்தது.
தீர்வு காணத் தவறிய ஹசீனா அரசு
‘அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்க ளின் வாரிசுகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்’ என்று அரசு அறிவித்ததற்கு எதி ராக மேற்கொள்ளப்பட்ட மாணவர் இயக்கம் மிகப் பெரிய கலகமாக மாறியது. ஹசீனா அரசாங்கம், மாணவர்களுடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண்ப தற்குப் பதிலாக, கிளர்ச்சியாளர்களைக் கடுமையான முறையில் நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. இதே சமயத்தில் உச்சநீதிமன்றமும் தலையிட்டு, மேற்படி இட ஒதுக்கீட்டை 5 விழுக்காடாக மட்டும் இருக்கும் என்ற முறையில் குறைத்த போதிலும், அப்போது நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும், ஆளும் கட்சி குண்டர்களின் தாக்குதல்களிலும் சுமார் 200 மாண வர்களும், பொது மக்களும் கொல்லப்பட்டார்கள். சிறிதுகால அமைதிக்குப் பிறகு இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றது. ‘கொலைகளைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளுடன் தொடங்கிய இயக்கம் விரைவில் பிரதமர் ஹசீனாவின் பதவி விலகல் கோரிக்கையாக உருமாறியது.
எதேச்சதிகார ஆட்சியாக...
2009இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர், அவருடைய 15 ஆண்டு கால ஆட்சி எதேச்சதிகார ஆட்சியாக முன்னேறத் தொடங்கியதைப் பார்த்தோம். 2024 ஜனவரியில் நடை பெற்ற தேர்தல் உட்பட மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களும் அவாமி லீக்கிற்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாகவே நடத்தப்பட்டன.
எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் நசுக்கப் பட்டன, அரசு நிறுவனங்கள் வெளிப்படையாகவே ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டன. ஊட கங்கள், குடிமை சமூகம் மற்றும் ஆட்சிக்கு எதிராகக் கருத்துகள் கூறுபவர்களைக் கொடூரமான முறை யில் நசுக்கும் விதத்தில் அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்துவிட்டும், ஏராளமானவர்களைக் கைது செய்து, சிறைகளில் அடைத்தும் ஓர் எதேச்சதிகார ஆட்சி யாக மாறிப்போனது.
தீவிரமடைந்த வேலையின்மை
வங்க தேசத்தில் ஹசீனாவின் முதல் பத்தாண்டு கால ஆட்சி, பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி யது. ஆடைகள் ஏற்றுமதியின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ந்தது. ஆயினும் இதன் பலன்கள் அவாமி லீக் மற்றும் ஹசீனாவின் உள் வட்டத்தில் உள்ள ஒருசிலரிடம் மட்டுமே சென்ற டைந்தன. 2019 வரையில், வங்க தேசம் அடுத்த ஐந்தாண் டுகளுக்குள் உயர்-நிகர-மதிப்புள்ள (High-net-worth) நபர்களின் எண்ணிக்கையில் உலகில் மூன்றா வது இடத்தை அடைந்துவிடும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் இப்போதுள்ள நிலைமை என்னவெனில் சுமார் 1 கோடியே 80 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பதாகும்.
ஊழல் தலைவிரித்தாடுவதுடன், தொழில் அதிபர்கள் மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்களுடனான கள்ளக் கூட்டணி, நடுத்தரவர்க்கத்தினரையும், அறிவு ஜீவிகளையும் அந்நியப்படுத்தத் தொடங்கியிருக் கிறது. அரசுப் பணிக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக தொடங்கிய மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டம், ஆளும் கட்சிக்கு எதிராகப் பின்னர் மிகவும் விரிவானமுறையில் வளர்ந்து, ஷேக் ஹசீனா அரசாங்கத்தை வேரோடு அகற்றுவதற்கான ஒன்றாக மாறியது. இவ்வியக்கத்தின் தன்மை கார ணமாக ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அடிப்படை வாத சக்திகளுடன் இயங்கும் மாணவர் அமைப்புக ளும் இப்போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டன.
அராஜக சூழல்
ஷேக் ஹசீனாவின் திடீர் விலகல் மற்றும் அரசு இயந்திரத்தின் வீழ்ச்சியின் உடனடி விளைவு, ஒரு அராஜகமான சூழ்நிலை அங்கு உருவானது. காவல்துறை அதன் கொலைவெறிக்காக வெறுக்கப் பட்டது. இப்போது அது மக்களின் கோபத்தின் சுமை யைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. பல காவல் நிலை யங்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது மூடப்பட்டுள்ளன. அவாமி லீக் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் மீது பரவலான தாக்குதல்கள் நடத்தப்பட்டு, சிலர் கொல்லப் பட்டுள்ளனர். அரசாங்கம் வீழ்ச்சியடைந்த இரண்டு நாட்களில், பல மாவட்டங்களில் இந்துக் கோவில்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் மீதும் தாக்கு தல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல்களின் முக்கிய பாதிப்பை அவாமி லீக் தலைவர்கள் மற்றும் வணிகர்கள் எதிர்கொள்ளும் அதே வேளையில், அடிப்படைவாத சக்திகளும் குழப்பத்தை பயன் படுத்தி சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குகின்ற னர் என்பது தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது.
எனினும், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்க ளைப் பாதுகாப்பதற்கும் சிறுபான்மை சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் அழைப்பு விடுக்கும் மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, குடிமை சமூகம் மற்றும் சில அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மன நிறைவைத் தருகிறது. மாணவர் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பின் பேரில், எண்ணற்ற இடங்களில் உள்ள கோவில்களைப் பாதுகாக்க முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் குழுக்கள் பல செயல்பட்டு வருகின்றன.
இடைக்கால அரசாங்கம்
ஓர் இடைக்கால அரசாங்கம் உடனடியாக அமைக் கப்பட்டுள்ளது. அப்போதுதான் அதன் மூலம் ஓர் ஒற்று மையையும், சட்டம்-ஒழுங்கையும் மீண்டும் கொண்டு வர முடியும். மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நோபல் பரிசு பெற்றவரும் கிராம வங்கியின் நிறுவனரு மான முகமது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்திட ஒப்புக்கொண்டி ருக்கிறார். இதர ஆலோசகர்களும் காலதாமதமின்றி நியமிக்கப்பட வேண்டும்.
ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதை உறுதி செய்வதற்காக, மாணவர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு, குடிமை சமூக அமைப்புகள், ஜனநா யக-மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி அரசியல் சக்திகள் ஆகியவற்றுடன் இணைந்து ஒன்றுபட்டு நின்று செயல்பட வேண்டும். வங்க தேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பல அடிப்படைவாத சக்திகள் சமூகத்தில் வேரூன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உணர வேண்டும். இத்தகைய வலதுசாரி அடிப்படைவாத சக்திகள் ஆட்சி யைக் கையகப்படுத்துவதை அனைத்து ஜனநாயக சக்திகளின் பரந்த ஒற்றுமையால் மட்டுமே தடுக்க முடியும்.
அமெரிக்காவின் பங்கு
இப்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவின் இப்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவின் பங்கை, வங்கதேசத்தில் செயல்படும் முற்போக்கு மற்றும் இடதுசாரி சக்திகள் உன்னிப்பாகக் கவனித்திட வேண்டும். பாகிஸ்தான் அல்லது சீனாவைக் காட்டி லும், ஹசீனாவிற்குப் பிந்தைய வங்க தேசத்தின் நிகழ்ச்சிநிரலை மறுவடிவமைத்திட அமெரிக்கா சுறுசுறுப்பாகத் தலையிடும். அமெரிக்கா, வங்க தேசத்தைத் தன்னுடைய இந்தோ-பசிபிக் ராணுவக் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு விரும்புகிறது.
இந்தியாவில், வழக்கம் போல், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் வங்கதேசத்தின் நிகழ்வுப் போக்குகள் வளர்ச்சிகள் குறித்து பல விதமான பொய் தகவல்கள் உமிழத் தொடங்கி இருக்கின்றன. கோடி மீடியா (Godi Media) வால் உமிழப்பட்டுள்ள மிகவும் முக்கியமான ஒன்று, பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. அமைப்பும், சீனாவும் கூட்டாக இணைந்து ஷேக் ஹசீ னாவைத் தூக்கி எறிந்திட சதி செய்தன என்பதாகும். இதற்காக கோடி மீடியா பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கின்றது. இந்தியாவில் உள்ள ஆளும் வர்க்கத்திற்கும் அதன் ஊடகங்களுக்கும் வங்க தேசத்தில் ஓர் ஊழல் நிறைந்த, எதேச்சதிகார ஆட்சியை மக்கள் இயக்கத்தால் தூக்கி எறிய முடியும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தார் என்பதை மட்டுமே இந்த ஊடகங்கள் பிரதானமாக கருதி, அதற்கு எதிராக பாகிஸ்தான் - சீனா சதி என்று பேசுகின்றன. இத்தகைய அணுகு முறை வங்கதேச மக்களின் அறிவுக்கூர்மையையும், சுதந்திரமான விருப்பத்தையும் அவமதிப்பதாகும்.
இந்துத்துவா சக்திகளின் ஆத்திரமூட்டல்
இந்தியாவில் ஆட்சி செய்திடும் இந்துத்துவா வாதிகள், தங்களுடைய இந்துத்துவா கண்ணாடியை அணிந்துகொண்டு அதன்மூலமாகத்தான் வங்க தேச நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள். பாஜக தலைவர்க ளில் ஒருவரும், மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, வங்க தேசத்தில் இருக்கின்ற ஒரு கோடி இந்துக்கள் இந்தியா விற்கு வருவதற்காகக் கோரிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விதத்தில் குடி யுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தவேண்டும் என்றும் ஆத்திரமூட்டும் விதத்தில் அறைகூவல் விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் இருப்பவர்களை, இந்தியாவிற் குள் ஊடுருவுபவர்களாகத் தொடர்ந்து சித்தரித்து வருவதுதான், வங்கதேச மக்கள் மத்தியிலும், அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் இந்தியாவுக்கு எதிரான உணர்வு மேலோங்கியிருப்ப தற்கான காரணங்களில் ஒன்றாகும். ஊடுருவுபவர்க ளைக் “கரையான்கள்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இழித்துக் கூறியதை நினைவுகூர்ந்திடுங்கள். வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வெகுஜன எழுச்சி யை ஆத்திரமூட்டும் விதத்திலும், எதிர்மறையாகவும், தங்களின் ஊடகங்கள் மூலமாகவும், இந்துத்துவா பேர்வழிகளின் மூலமாகவும் சித்தரிப்பது என்பது வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு எதிராக இருந்து வரும் உணர்வுகளை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்வதற்கே உதவிடும்.
வங்கதேச உள்விவகாரங்களில் தலையிடுவ தாகக் கருதப்படும் எந்தவொரு கருத்து அல்லது செயலிலிருந்தும் விலகி இருப்பதே மோடி அர சாங்கத்தின் சிறந்த போக்காகும். இடைக்கால அர சாங்கம் அமலுக்கு வரும் போது அதனுடன் பொறுமை யாக இந்தியா செயல்பட வேண்டும். அமைதி, இயல்பு நிலை மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுடன் ஜனநாயக அமைப்பை மீட்டெடுப்ப தற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைக ளுக்கும் அது ஆதரவாக இருந்திட வேண்டும்.
தமிழில் : ச.வீரமணி