articles

img

வடக்கிலிருந்து வடகிழக்கு வரை பரவும் மதவாத பொருளாதாரம் - சுஜித்அச்சுக்குட்டன்

2019-இல் ஜம்மு காஷ்மீருக்கான  அரசியல் சாசன விதி 370ஐ  ரத்து செய்ததற்கு  பிறகு முதன்முறையாக  24.4.2022  அன்று ஜம்மு-காஷ்மீருக்கு  இந்திய டிஜிட்டல் ‘சக்திமான்’ திருவாளர்  மோடிஜி  விஜயம்  செய்திருந்தார். பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பி.எஸ்.ஏ.) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டங்களின்  மூலம்  ஏராளமான காஷ்மீரி இளைஞர்கள்  சிறையில் அடைக்கப்படுவதை மறைத்து, வலிந்து திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வழக்கம்போல் கவர்ச்சிகர உரையாற்றினார்.  வளர்ச்சிக்கான செய்தியுடன் நான் இங்கு வந்துள்ளேன் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியின் புதிய கதை எழுதப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் முன்னோர்கள் அனுபவித்த  சிரமங்களை இனிமேல் சந்திக்க  மாட்டார்கள் என்று முழங்கியவர்  தனியார் முதலீட்டாளர்கள் இங்கு  வர ஆர்வமாக உள்ளனர்” என்றும்  கூறினார்.   ரூ.7500 கோடி  திட்ட மதிப்புள்ள தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ் சாலை,  ரூ.3100 கோடி திட்ட மதிப்பு உள்ள பனிஹால்-காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதை உள்பட ரூ.20,000 கோடி  மதிப்பிலான திட்டங்களைத் அன்று தொடங்கி வைத்தார். மேலோட்டமாக பார்த்தால்  ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தின்  பன்னோக்கு வளர்ச்சிக்காக திட்ட முதலீடுகள் போல இவை தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல என்பது நாக்பூர்  தாசர்களின்  நகர்வுகளை புரிந்து கொண்டவர்கள்தான் கண்டு பிடிக்க முடியும். ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும்  மாநில அந்தஸ்து வழங்குவது எப்போது என்பதை  பேசாமல் மோடி கவனமாக  தவிர்த்தார்.

பாரம்பரிய தொழில் கலாச்சாரத்தை அழிக்கும்  திட்டம்

ஜம்மு-காஷ்மீர் மக்கள்தொகையில் 70% சதமானோர்  கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் இவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீர் மக்களின் பாரம்பரிய செய்தொழிலான விவசா யம்,  கால்நடை வளர்ப்பு,  செம்மறி பொருட்கள் உற்பத்தி, மீன்பிடி, சுற்றுலா  மற்றும் காடுகளும் அதை  ஒட்டிய வாழ்வாதாரமும்  உள்ளன. இதையொட்டியே ஜம்மு-காஷ்மீரின் வாழ்வியல் தன்மை  கலாச்சாரம் மற்றும் பண்பாடும் உள்ளது. இவைகளை மேலும்  வட்டாரத் தன்மையோடும் நவீனத்தின் துணை யோடும்  வளர்த்தெடுப்பதில்தான் நீடித்த நிலையான  வளர்ச்சியை ஜம்மு-காஷ்மீரில்  உருவாக்க முடியும். அதுதான் இளைஞர்களை பிரிவினைவாதி களிடமிருந்து பாதுகாக்கவும்  முடியும். ஜம்மு-காஷ்மீரின் செய்தொழில் கலாச்சார வாழ்வியலை சீர்குலைத்து அதன் முகத் தோற்றத்தை சிதைக்கும் நவீன கார்ப்பரேட் கொள்ளை உத்திகளும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும்தான் மோடி அன்று அறி வித்தார்.  முன்னதாக மோடியின் ஜம்மு-காஷ்மீர் பயணம் குறித்த ஒர் அறிக்கையில், ‘‘அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை’’ தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத வேகத்தில், மேம்படுத்துவதற்கும், அப்பகுதி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் பரந்த அளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்ததை இப்போது நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்துத்துவா இருட்டுக்குள் ஜம்மு-காஷ்மீரை தள்ளுவதற்கு, தங்கள் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிப்பதற்கு விதி 370 ரத்து செய்யப்பட்டதை  நியாயப்படுத்தி  நிரந்தர மாக்கும் வேலையை செய்வதுதான் பாஜக-வின்  திட்டமாகும். பாஜகவின் இந்திய மாடல் ஆட்சியான  ‘கவர்னரின் (Execution via Governers) மூலம்  நிறைவேற்றுதல்’ என்ற  திட்டமும் அதன் பின்னணியில் இருந்தது.  2019-இல்  ஜம்மு-காஷ்மீர்  மாநிலங்கள் துண்டாடப்பட்டதற்குப் பிறகு உள்நாட்டு, அயல்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பொருளாதார தொழில்துறைக் கொள்கைகள் அதிவேகமாக முடுக்கி விடப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் தொழில்துறை கொள்கை 1921-30 (J & K Industrial Policy 2021-2030)  முற்றிலும்  இதற்கென 19.4.2021 வடிவமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு  “வரலாற்று மாற்றங்களுக்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களின் இலக்கு எட்டப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா 25.1.2022 அன்று ஜம்முவில் தெரிவித்திருந்தார். நிர்வாக  திட்ட மிடல்  திறனை  உலக நாடுகளுக்கு  விற்கும்  நியூசி லாந்து  ஜி2ஜி பன்னாட்டு நிறுவனத்தோடு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம்  கால்நடை  வளர்ப்பு  மூலம்  வருவாயை மேம்படுத்துவது என்ற பெயரில் கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகை செய்யப்பட்டது. ஐக்கிய  அரபு அமீரகம், அமெரிக்கா,  பிரிட்டன் உள்ளிட்ட  80க்கும் மேற்பட்ட நாடுகளில்  சொகுசு ஹோட்டல்கள் -விடுதிகளை கொண்டிருக்கும் ‘ஒயோ ரூம்ஸ்’ பன்னாட்டு நிறுவனத்துடன் அப்போதே  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்களை மாற்றுவது  ஜம்மு  மற்றும் காஷ்மீருக்கு வெளியே உள்ள முதலீட்டா ளர்கள் ஈர்ப்பதற்கு  நிலங்களை தொழில்துறை நோக்கங்களுக்காக மாற்றுவது உள்ளிட்ட நிலச்  சட்டங்களில் கவர்னர் நிர்வாகம்  தொடர் மாற்றங்களைச்  செய்துள்ளது. ‘ரியல் எஸ்டேட் உச்சி மாநாடு’ 23.5.2022 அன்று ஸ்ரீநகரில் நடைபெறவிருக்கிறது. கவர்னர் நிர்வா கத்தின் தகவல்கள்படி, லட்சக்கணக்கான குடியிருப்பு கள் கட்டுவதற்கான பெருநிறுவன ரியல் எஸ்டேட்  வணிகம் ஒட்டுமொத்தமாக ஜம்மு-காஷ்மீரை ஆக்கிரமிக்கும் நிலை உருவாகியுள்ளது. 

வாய்ப்பந்தலில் தோரணம் கட்டிய நிர்மலாவின் பட்ஜெட்

ஜம்மு-காஷ்மீரில் பாஜக அரங்கேற்றியது, படிப்படியாக வடகிழக்கு இந்தியாவுக்கும் பரவியுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டை  தாக்கல் செய்யும்போது  அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம்,  திரிபுரா, அருணாசலப்பிரதேசம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களுக்கான பிரதமரின் மேம்பாட்டு  முன்முயற்சி (PM-DevINE scheme) திட்டத்திற்கு ரூ.1500 கோடியை முதல் தவணையாக ஒதுக்கீடு  செய்வதாக  அறிவித்தார். இத்திட்டம் இப்பிராந்தி யத்தின் திட்ட ஒருங்கிணைப்பு முகமை (Nodal Agency)- யான  வடகிழக்கு கவுன்சில் (NEC) மூலம்  செயல்படுத்தப்படும் என்றும் மோடியின்  ‘கதி சக்தி’  - தேசிய மாஸ்டர் பிளான் திட்ட வெளிச்சத்தில்  கட்டமைப்பு மற்றும் தேவைகளின் அடிப்படையில் நிதி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நிலவும் சமூகப் பதற்றங்களை  முடிவுக்கு கொண்டுவரவும் வேலைவாய்ப்பு, மகளிர் மேம்பாடு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட சமூக  புனரமைப்புப் பணிகளுக்கு  இந்நிதி பயன்படுத்தப் படுமா என்ற கேள்வி எழுகிறது.

வடகிழக்கின்  எதார்த்த நிலை

சமீபத்தில் மணிப்பூரின் சுராசந்த்பூரில் கர்னல் விப்லவ் திரிபாதி அவரது மனைவி, மகன் மற்றும் 46 ஏஆர் பட்டாலியனின்  நான்கு வீரர்கள் ஆயுதம் தாங்கிய வன்முறையாளர்களால் பதுங்கியிருந்து கொல்லப் பட்டனர். இது  வடகிழக்கில் தொடரும் பயங்கரவாத செயல்களை  மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள் ளது. மோடி அரசின்  ரூ.1500 கோடி திட்ட நிதி ஒதுக்கீடு  வடகிழக்கு  மக்களின் மனங்களில் கனன்று கொண்டி ருக்கிற பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி  இல்லை என்பதையே  நிதி ஒதுக்கீட்டு விபரங்கள் கூறுகின்றன. நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டு நிற்பதோடு ஐம்பதிற்கும் மேற்பட்ட இனக்குழுக் களையும் பழங்குடியினரையும் உள்ளடக்கிய;  பல்வேறு வரலாற்றுப் பின்னணிகளையும் உணர்வுப் பூர்வமான புவிசார் அரசியலையும் கொண்டவைதான் வடகிழக்கு மாநிலங்களாகும். ஒவ்வொரு மாநில மக்களுக்கும் அவர்களின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் விரக்திப் பார்வையும் உள் ளது. வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம் மற்றும்  சீனா ஆகிய நாடுகளின்  5,182 கிமீ  தூர நெடு எல்லையை ஒட்டியே இவர்கள் வாழ்கிறார்கள். சவால்மிக்க இம்மாநிலங்களின் புவிசார் அரசியல் சூழலில் மோடி அரசின் மோசமான நிர்வாகம், அந்நியப்படுத்தல், வளர்ச்சியின்மை மற்றும் அக்கறை யற்ற அணுகுமுறைகள் மக்களின்  நியாயமான மனக்குறைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு வடகிழக்கு மாநிலங்களின் அரசியலை தனது குறுகிய அரசியலுக்காக பயன்படுத்தும் வேலைகளையும் வழக்கம்போல் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. திரிபுராவை ஒற்றை கட்சி ஆளுகைக்குள் கொண்டு வரும் அடாவடி பாசிச நடவடிக்கைகளும் இதில் ஒன்று.  சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் தேர்தலி்ல் தடை செய்யப்பட்ட வன்முறைக் குழுக்களுக்கு கோடிக் கணக்கான  ரூபாய்  நிதியை பாஜக மாநில அரசு அளித்ததும்,  ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும்  வன்முறை அச்சுறுத்தல்கள் நடைபெற்றன. அதே சமயத்தில்  ஜனநாயக சக்திகளுக்கு எதிராக ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை பயன் படுத்துவதும்  தேர்தல் விதிகளை மீறும் அட்டுழியங் களும் என மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டிருந்தது.

நிதி ஒதுக்கீட்டிலும்  மர்மம்

தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான  வடகிழக்கு மையத்தின் (நெக்டார்) கிராமப்புற மக்களின் திறன்  மேம்பாடு, இயற்கை விவசாய  மேம்பாடு, குழந்தை கள் மற்றும் பெரியவர் புற்று நோய் சிகிச்சை  போன்ற வற்றிற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கு மொத்த மாக ரூ.241 கோடியை மட்டும் ஒன்றிய அரசு  ஒதுக்கியுள்ளது. வழக்கம்போல ரூ.722 கோடி  போக்கு வரத்து  உள்கட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள் ளது. எஞ்சியிருக்கும் ரூ.537 கோடியை மோடி அரசு  இனம் தெரியாத செலவினங்களுக்காக இருப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.  வடகிழக்கு மாநில மக்களின்  அடிப்படை மனக் குறைகளை  நீக்குவதற்கான  சமூக முன்னுரிமைத் தேவைகள் கண்ணெதிரே எவ்வ ளவோ உள்ளன. ஆனால்  ஒன்றிய  அரசு இவைகளை தொடவே இல்லை.  பட்ஜெட்டின்போது  நிர்மலா சீதாராமன்  இந்நிதி ஒதுக்கீடு தற்போதுள்ள மத்திய  அல்லது மாநில திட்டங்களுக்கு மாற்றாக இருக்காது  என்று கவனமாக குறிப்பிட்டதன் பொருள் ரூ.537 கோடிக் கான திட்டங்களும் 2024 தேர்தலை நோக்கியே தாமதப்படுத்தப்படுவதாக கருத இடமுள்ளது.

வடகிழக்கு கவுன்சிலின் பரிதாபநிலை

ரூ.1500 கோடி  நிதியின்  திட்டங்களை  திட்ட  ஒருங்கிணைப்பு முகமையான (Nodal Agency) வட கிழக்கு கவுன்சில் (NEC) நிறைவேற்றும் என்று படாடோபமாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,  இந்த வடகிழக்கு கவுன்சிலின் நிலைமையோ படுமோச மாக உள்ளது. கவுன்சிலிங் மாதாந்திர அறிக்கைகள் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களின் முன்னேற்ற த்தை கூறுகிறது. 2017, 2018, 2019 மூன்று ஆண்டு களில் முறையே 8, 10 மற்றும் 9  அறிக்கைகள் பிர சுரிக்கப்பட்டுள்ளன. ஆனால், கவுன்சிலின்  அதிகாரப் பூர்வமான இணைய  தகவல்களின் படி 2020-2021 ஆம் ஆண்டில் பிப்ரவரி 2020 மாதத்தில் மட்டும் ஒரே ஒரு அறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது  2020-2021 ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்களுக் கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்பதையே காட்டு கின்றன. (ஆதாரம் வடகிழக்கு கவுன்சில்  மாதாந்திர இலக்குகளின் நிறைவேற்றப்  பட்டியல்கள்) வடகிழக்கு கவுன்சிலின் குரூப் ஏ, பி, சி அதிகாரிகள் அலுவலர்களின் ஒப்பளிக்கப்பட்ட 202 மொத்த பணி யிடங்களில் 39  சதமான பணியிடங்கள் (இறுதி 1.11.2021  நிலவரப்படி) காலியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் மட்டுமே  வடகிழக்கு மாநில கவுன்சி லின் நிலைமையை  விளக்குகின்றன. மோடி- அமித்ஷா -நிர்மலா வகையறாக்கள் வாய்ப்பந்தல் போடுவதைப்போல வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடோ, வளர்ச்சியோ இல்லை.