பல்வேறு நாடுகளின்அரசியல் அமைப்புகளில் சட்டம் இயற்றுவதில் பொதுமக்களின் பங்கேற்பு என்பது உத்தரவாதமான உரிமையாக உள்ளது.ஆனால் இந்திய அரசியல் அமைப்பில் மக்களின் கருத்தை, அவர்கள் பங்கேற்பின் வடிவத்தை பிரதிபலிக்கும் ஒரே ஏற்பாடு தேர்தல்கள் மட்டுமே. ஒப்பீட்டளவில் வழக்கமான மற்றும் அடிக்கடி நடக்கும் தேர்தல்கள் மக்களின் பங்கேற்பையும் அது குறித்த பரந்த விவாதத்தையும் அதிகரிக்க அனுமதிக்கின்றன. இவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் தேர்தல்கள் என்ற திட்டம் மேலும் சுருங்கச் செய்துவிடும்.
கடந்த சில நாட்களாக ஒரே நாடு, ஒரே தேர்தல்,தேசிய மற்றும் மாநில தேர்தல் களை ஒரே நேரத்தில் நடத்தும் சாத்தியக் கூறுகள் குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவும் இதற்காக அமைக்கப் பட்டுள்ளது.
இரண்டு முக்கிய காரணங்கள்
ஒன்று, தேர்தல்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரம் நடத்துவதற்கான செலவை இது கணிசமாக குறைக்கும். இரண்டாவது, அரசியல் கட்சிகளை பிரச்சாரப் பணி யில் இருந்து விடுவித்து ஐந்தாண்டு காலத்திற்கு தொடர்ந்து ஆட்சியில் கவனத்தை செலுத்திட முடியும். எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வ பணியில் செயல்படலாம்.
எதிர்வாதங்கள்
செலவினங்களை மிச்சப்படுத்துவது என்பது ஒப்பீட்டளவில் மிகவும் சிறியதாகவே இருக்கும் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். இரண்டா வது, ஒன்றிய அரசு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வா திகள் மாநில தேர்தலில் கணிசமான நேரத்தை செல விடுவது என்பது சமீபத்தில் இந்திய அரசியலில் பிடித்துள்ள நோய் .எனவே அடிக்கடி மாநில தேர்தல் நடைபெறுவது நாடாளுமன்றத்தின் நிர்வாகத்தின் அலுவல்களையும் பாதிக்கிறது என்பது கவலையாக இருந்தால் வேறொரு எளிய வழி இருக்கிறது. மாநில தேர்தல்கள் முதன்மையாக கட்சியின் மாநில பிரிவுகளால் நடத்தப்படலாம். தேசிய அரசியல்வாதி கள் ஒன்றிய அரசின் ஆட்சிப் பணிகளில் ஈடுபட லாம். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது பற்றி விமர்சிப்பவர்கள் வேறு சில ஆட்சேபணைகளையும் எழுப்புகின்றனர்:
பெருங்கனவே...
140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் மாநில தேர்தல்களையே பல கட்டங்களில் நடத்த வேண்டிய சூழல் நிலவும் நேரத்தில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்து வது அரசியல் தளவாடங்கள் இல்லாத நிலையில் பெரும் கனவாகவே இருக்கும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சில அடிப்படை களுடன் தேர்தல் கால அட்டவணை பொருந்தாமல் இருப்பதும் மற்றொரு காரணம். சுதந்திரம் அடைந்து ஒரு சில ஆண்டுகளில் ஒன்றிய, மாநில தேர்தல்கள் ஒரே நேரத்தில் தான் நடத்தப்பட்டன. அரசியல் சாசன பிரிவு 356 பயன்படுத்தப்பட்டதன் பின்னணி யில் 1960களில் அது மாறியது.
கூட்டாட்சி, ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும்
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாராம்சம் என்னவென்றால் எல்லா நேரங்களிலும் அரசாங்கம் சபையின் நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும். அது தோல்வியுற்றால் உடனடியாக பதவி விலக வேண்டும். புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க மீண்டும் மக்களிடம் திரும்பிட வேண்டும். சட்டரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் ஒன்றிய, மாநில தேர்தல்களை ஒரே சுழற்சியில் அமைக்க முடிந்தாலும் ஒரு மாநில அரசாங்கம் வீழ்ச்சியடை யும் தருணத்தில் இந்த ஏற்பாடு உடைந்து விடும். இதற்கு இரண்டு தீர்வுகள் முன்மொழியப்படுகின்றன.ஆனால் இவை இரண்டுமே சிக்கலை மோச மாக்குபவை. ஐந்தாண்டு காலம் முடியும் வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது கூட்டாட்சி மற்றும் ஜனநாயகம் இரண்டையும் குழி தோண்டி புதைத்து விடும். தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு நடத்தக்கூடாது. தேர்தல் செலவுகளை குறைக்க வேண்டும் என்ப தற்காக சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த சுழற்சி வரையிலும் இருக்கும் என கூறுவது மிகவும் வக்கிரமான ஊக்குவிப்புகளுக்கு வழிவகுக்கும்.
கட்சித்தாவல் அதிகரிக்கும்
அரசாங்கத்தின் வீழ்ச்சியை தவிர்த்திட வலுவான உந்துதல்கள் ஏற்படும். .ஒன்று,எதிர்க்கட்சிதாவல். மற்றொன்று குதிரை பேரம். பத்தாவது அட்ட வணை இரண்டையுமே தடை செய்தாலும் கூட அர சியல்வாதிகள் இதிலிருந்து தப்பிக்க பல்வேறு வழி களை கண்டுபிடித்துள்ளனர். நீதிமன்றங்களாலும் இதை தடுக்க முடியவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் கள் என்பது குதிரை பேரத்தை மேலும் வெடிக்கச் செய்யும். மிகப்பெரும் பணப்பை (பாக்கெட்டு)களைக் கொண்ட அரசியல் கட்சிகள் மிகப்பெரிய பய னாளிகளாக மாறும் என்று நாடாளுமன்ற உறுப்பின ரும் சட்ட நிபுணருமான கபில் சிபல் ஒரு பேட்டியில் தெரி வித்துள்ளார்.
கூட்டாட்சி முறை
இந்தியாவின் கூட்டாட்சி முறை என்பது வெறு மனே நிர்வாக வசதிக்கான ஒரு விஷயம் அல்ல. மாநிலங்களை பொறுத்தவரை, பல்வேறு,மொழி, கலாச்சாரம், இனம் மற்றும் பிற கூட்டு அபிலாசை களின் சட்டப்பூர்வத் தன்மையை அங்கீகரிக்கும் கொள்கை சார்ந்த விஷயமாகும். ஒன்றியத்தில் மட்டு மல்ல மாநிலங்களிலும் ஜனநாயக ரீதியில் சொந்த கோரிக்கைகளை அதன் அபிலாசைகளை தேர்வு செய்யும் நிலை உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் இந்த தனித்துவமான மன்றங்கள் மற்றும் அரங்கு களை ஒளியிழக்கச் செய்யும். மாநில அளவிலான பிரச்சனைகளை தேசியத்திற்குள் அடக்கிவிடும் வாய்ப்புகளும் ஏற்படலாம்.
எதேச்சதிகாரத்திற்கு கடிவாளம்
நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி என்பது அதிகாரக் குவியலுக்கு எதிரான ஒரு தடுப்பு அரண். மாநிலங்களவை இதற்கு உதவும் ஒரு பெரிய ஏற்பாடு. மாநில அளவில் ஜனநாயகப்பூர்வ மாக நடைபெறும் போட்டி அதன் பன்முகத் தன்மை ஆகியவையும் அதன் முக்கிய காரணிகள். ஒரே நேரத்தில் தேர்தல்கள் இந்த பன்மைத் தன்மையை அழித்துவிடலாம். கூட்டாட்சி முறைக்கும் ஊறு விளைவிக்கலாம்.
சட்டமியற்றும் உத்தரவாத உரிமை...
மேலும், அரசியல் அமைப்பின் முன்னுரையில்” மக்களுக்காக” என்னும் வார்த்தைகள் ஓங்கி ஒலித்தாலும் அவர்கள் உரிமையை நிலைநாட்டும் அரசியல் வெளி மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக அவர்களுடைய பிரதிநிதிகள் மீது அவர்க ளுக்கு இருக்கும் கட்டுப்பாடு மிகவும் குறைவு. பல்வேறு நாடுகளின்அரசியல் அமைப்புகளில் சட்டம் இயற்றுவதில் பொதுமக்களின் பங்கேற்பு என்பது உத்தரவாதமான உரிமையாக உள்ளது.ஆனால் இந்திய அரசியல் அமைப்பில் மக்களின் கருத்தை, அவர்கள் பங்கேற்பின் வடிவத்தை பிரதிபலிக்கும் ஒரே ஏற்பாடு தேர்தல்கள் மட்டுமே. இந்த வகையில் தேர்தல்கள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் வேறுசில விவாதங்களும் உள்ளன. ஒப்பீட்டளவில் வழக்கமான மற்றும் அடிக்கடி நடக்கும் தேர்தல்கள் மக்களின் பங்கேற்பையும் அது குறித்த பரந்த விவாதத்தையும் அதிகரிக்க அனுமதிக் கின்றன. இவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் தேர்தல் கள் என்ற திட்டம் மேலும் சுருங்கச் செய்துவிடும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பெறப்படும் நிர்வாகப் பலன்கள் அதிகம் எனக் கூறுவது திட்டமிடப்பட்ட மிகைப்படுத்துதல் அல்லது இல்லாத ஒன்றை இருப்பதாக கருதுவது. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்து, அதன் வடிவாக்கம், நடைமுறைப்படுத்துதல் அதிகச் செலவு பிடிக்கும் திட்டம் மட்டுமல்ல, பல்வேறு ஆபத்துகளையும் ஏற்படுத்தும் .குறிப்பாக அரசியல் அமைப்பின் கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது என வரும்போது இந்த திட்டம் மிகவும் மோசமான விளைவுகளையே உருவாக்கும். எனவே, இது கைவிடப்பட வேண்டும்.
கட்டுரையாளர்: வழக்கறிஞர், புதுதில்லி,
நன்றி : தி இந்து ஆங்கிலம் 13/9/23,
தமிழில் : கடலூர் சுகுமாரன்