articles

img

ஒரு செம்மலருக்கு கட்டப்பட்ட பூமாலை ஆர்.உமாநாத் நூற்றாண்டு சிறப்பு மலர் - மதுக்கூர் இராமலிங்கம்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தனித்துவமிக்க தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.உமாநாத் நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி நூறாவது ஆண்டு விழா மலர் ஒன்றை கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக்  குழுக்கள் இணைந்து அழகுறவும், அர்த்த அடர்த்தியுட னும் வெளியிட்டுள்ளன. அவருடைய களைப்பில்லாத களப்பணியை அறிந்த தலைவர்கள் அந்த அனுபவங் களை இந்த மலரில் பகிர்ந்துள்ளனர். ஏராளமான புகைப் படங்களும் இடம் பெற்றுள்ளன. தோழர்கள் அன்வர் உசேன், சிவராஜ், மதியழகன் ஆகியோர் இம்மலரை தயாரித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் எழுதியுள்ள கட்டுரை யில் ‘‘நான் கட்சியில் இணைந்தபோது அவரது  கட்சி  மற்றும் தொழிற்சங்க உரைகள் என் மீது மிகுந்த தாக்கத்தை உருவாக்கியது’’ என்று குறிப்பிட்டுள்ள தோடு, சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டிலும் ஒரு கம்யூ னிஸ்ட் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஆர்.உமா நாத் ஓர் முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார். கட்சித்  திட்டம் 2000 ஆவது ஆண்டில் மேம்படுத்தப்பட்ட போது  ஆர். உமாநாத் அவர்களது மார்க்சிய, லெனினிய அடிப் படையான பங்களிப்பையும் பிரகாஷ் காரத் புகழ்ந்துரைத் துள்ளார்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையில், தமிழை தாய்மொழி யாக கொண்டிராத ஆர்.உமாநாத் தொழிலாளர்களுடன் பேசிப் பேசி தமிழை கற்றுக் கொண்டதையும் அரிசுவடி யில் ஆரம்பித்து தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராக பரிணமித்ததையும், சைக்கிளிலேயே தமிழ்நாடு முழுவதும் சுற்றி இயக்கப் பணி ஆற்றியதை யும் குறிப்பிட்டுள்ளார்.  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையில், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஆர்.உமாநாத் நடத்திய தத்துவார்த்தப் போராட்டத்தை விவரித்துள்ளதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், சிஐடியு அமைப்பையும் உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கை விவரித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை நகர்  காவல் நிலையத்தில் கொடுமைக்கு உள்ளான சிதம்பரம் பத்மினி - தனசிங்  திருமணத்தில் பேசிய பலரும் தனசிங்  பத்மினிக்கு வாழ்வு கொடுத்துள் ளார் என்று பேசிய நிலையில் நிறைவாக பேசிய ஆர்.உமாநாத் தனசிங்கிற்கு பத்மினி வாழ்வு  கொடுத்துள்ளார் எனவும் சொல்லலாம்.

திருமணம் என்பது ஆணுக்கு பெண்ணோ பெண்ணுக்கு ஆணோ வாழ்வு கொடுப்பது அல்ல,  மாறாக இருவரும் சேர்ந்து இணைவதே  திருமண வாழ்க்கை என்று குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். இந்த  பாணிதான் ஆர்.உமாநாத் பொதுக்கூட்ட மேடைகளிலும் நாடாளு மன்ற, சட்டமன்றங்களிலும் பின்பற்றிய அதிரடி யான, அதே நேரத்தில் வித்தியாசமான அணுகுமுறையாகும்.  கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் எழுதியுள்ள கட்டுரையில் ஆரம்ப காலத்தில் கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கு கட்சி வழங்கிய உதவித் தொகை என்ன என்று தாம் கேட்டதற்கு ஆர்.உமாநாத் தொழி லாளர்கள் தூக்குச் சட்டியில் கொண்டு வருகிற உண வினை பகிர்ந்து உண்போம் என பதில் சொல்லியிருக் கிறார். விடுமுறை நாட்களில் என்ன செய்வீர்கள் என்று  கேட்டதற்கு வேர்க்கடலை வாங்கி சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு வேலை பார்ப்போம் என ஆர்.யு. பதில்  சொன்னதை நெகிழ்வோடு பகிர்ந்துள்ளார். துளுவும் மலையாளமும் பேசப்படுகிற பகுதியில் பிறந்த அவர், எவ்வாறு தமிழ்நாட்டின் தலைவராக உயர்ந்தார், அதற்காக அவர் எதிர்கொண்ட அடக்குமுறைகள், சித்ரவதைகள் எத்தகையது என விரிவாக விளக்கியுள்ளார் டி.கே.ரங்கராஜன்.

திருச்சி மாவட்டத்தில் அவர் நடத்திய  தொழிற்சங்க போராட்டத்தையும், ஆர்.யு.  நடத்திய தொழிற்சங்க போராட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்திய நில மீட்பு போராட்டங்களை விவரித்துள்ள தோடு மராட்டியத்தில் தமிழ் தொழி லாளர்கள்  தாக்கப்பட்ட போது அன்றைய தமிழக முதல்வரான அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.உமாநாத் மற்றும் இரா.செழியன்  ஆகியோரை ஒரு குழுவாக அனுப்பிய தையும் அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்டதையும் விவரித்துள்ளார். கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுத் துறை தலைவர் ஏ.கே.பத்மநாபன், ஆர்.யுவின் கண்டிப்பு, கறார்த்தனம்  கோட்பாடு களை முழுமையாக பற்றி நிற்பது என  கம்யூனிச பண்பு நெறிகளை  அமைப்பிலும், சொந்த வாழ்விலும் நடைமுறைப்படுத்தியதை விவரித்துள்ளார். சிஐடியு அமைப்பை உருவாக்கியதிலும் வேர் பரப்பி வளர்த்ததிலும் ஆர்.உமாநாத் அவர்களின் மகத்தான பங்களிப்பை விவரித்துள்ளார்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், உமாநாத் - பாப்பா உமாநாத் தம்பதியினரின் மகளுமான உ.வாசுகி ‘‘புதுக்கோட்டை நமன சமுத்திரத்தில் காவேரி மில் தொழிலாளர்களுக்காக நீண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தபோது எனக்கு சுமார் நான்கு வய திருக்கும். நாற்காலியில் அம்மா அமர்ந்திருந்தார். ஒரு  பெஞ்சில் எலும்பும் தோலுமாக ஒரு உருவம் படுத்திருந் தது. என்னைப் பார்த்தவுடன் பற்கள் தெரிய  அந்த உருவம் சிரித்தது. அய்யோ இதுவா அப்பா என நொடியில் அதி ர்ந்து முகம் சுருங்கி அழ ஆரம்பித்தேன்’’ என்று எழுதி யுள்ளதை மனக்கண்ணில் காட்சியாக விரியச் செய்து பார்க்கும்போது தொழிலாளர்களுக்காக அவர் ஆற்றி யுள்ள மகத்தான தியாகம் திரைப்படம் போலவிரிகிறது. மாதர் சங்க மாநாடு ஒன்றில் அமைச்சராக இருந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன், பெண்ணே பெண்ணுக்கு எதிரி, மாமியார் தான் வரதட்சணைக் கொடுமைக்கு காரணம் என்று பேச, சிஐடியு சார்பாக வாழ்த்துரைக்க வந்திருந்த ஆர்.உமாநாத் திருமண உறவில் இரண்டு மாமியார்கள் உண்டு. கணவனின் அம்மா மனைவிக்கு மாமியார். மனை வியின் அம்மா கணவருக்கு மாமியார். ஆனால் இரண்டு மாமியாரும் சமமான அந்தஸ்தில் இல்லை. ஆணைப் பெற்றவர்க்கு தான் அதிகாரம் உள்ளது. வரதட்சணைக்கு ஆண் தன் தாயை ஏஜெண்டாக நியமிக்கிறார் என்று பேச கரவொலி எழுந்ததை உ.வாசுகி நினைவு கூர்ந்துள்ளார். எழுத்துப் பிழைகளோடு பாப்பா அம்மாவுக்கு ஆர்.யு  கொடுத்த திருமண விருப்ப கடிதத்தையும் பாட்டியம்மா மாவு ஆட்டும் போது இருவரும் உட்கார்ந்து மாவை  தள்ளிவிட்டுக் கொண்டே திருமணத்திற்கு அவரிடம் இசைவு பெற்றதையும் சுவைபட உ.வாசுகிசொல்லியுள்ளார். 

ஆர்.உமாநாத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதிய சு.பொ.அகத்தியலிங்கம் ஒரு மகத்தான  தலைவரின் நூலாக்கத்தின் போது ஏற்பட்ட சுவையான அனுபவங்களை எழுதியுள்ளார். ஆர்.உமாநாத் கண்டிப்பா னவர். அதே நேரத்தில் அவரிடம் மிளிர்ந்த ஜனநாயகப் பண்புகளை சு.பொ.அ விளக்கியுள்ளார். பி.ஆர்.நடராஜன் எம்.பி., பி.மாரிமுத்து, எஸ்.ஸ்ரீதர், கி.இலக்குவன், ஐ.வி.நாகராஜன், என்.சின்னதுரை எம்எல்ஏ, கே.முகமதுஅலி, கே.சி. பாண்டியன், பெரி.  குமாரவேல், ஜி.ரத்தினவேலு, எம்.ஜெயசீலன், ஆர். ராஜா, எஸ்.கவிவர்மன், கே. பொன்மாலா, டி.வின் செண்ட், கோவிந்தன், அ.அன்வர் உசேன் உள்ளிட்ட பலரும் ஆர்.உமாநாத் அவர்களது பன்முகத் திறமைகளை எழுத்தோவியமாக வடித்துள்ளனர்.  ஆர்.உமாநாத் போன்ற தலைவர்களது தியாகத்தை யும், வரலாற்றையும் அறிந்து கொள்வது நம்பிக்கை யோடு முன்னேறவும், சமரசமில்லாமல் வர்க்கப் போராட்டத் தில் ஈடுபடுத்திக் கொள்ளவும் உதவும். ஒரு செம்மலருக்கு கட்டப்பட்ட பூமாலையாக மணம் வீசுகிறது இந்த மலர்.