articles

img

கை நழுவிச் செல்லும் ஓய்வுக்கால பலன்கள் - பி.ஸ்ரீகாந்த்

ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களின் கடுமையான பணி களுக்கு பின்னர் ஓய்வுக்கால பலன்களை பெறுவதில் காலவரையற்ற தாமதம் நிலவுகிறது. இதனால் தொழிலாளர்கள் அவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. மோசமான நிதி நிர்வாகம், ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது, நீடிக்கும் எரிபொருள் விலை உயர்வு, பொதுவான பொருளாதார வீழ்ச்சி போன்ற பல்வேறு நெருக்கடிகளில் போக்குவரத்து துறை சிக்கியுள்ளது. பலருக்கும், பணிக்காலத்தில் சிரமப்பட்டு வேலை செய்ததற்கு ஓய்வு பெறும்போது ஓய்வுக் கால வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் ஓய்வுக்கால பலன்கள் கிடைக்கும் என்ற உத்தரவாதம் உள்ளது. இந்த உத்தரவாதம் போக்குவரத்து துறையில்  கிடையாது. ஓய்வுக்கால பலன்களில், மாதாந்திர ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் விடுப்புக் கால ஊதியம் இவையெல்லாம் அடங்கும்.

ஆனால் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்க ளின் பரபரப்பான, மனஅழுத்தமிக்க பனிக்காலத்திற்கு பின்னர் ஓய்வு பெற்ற நாளில் இருந்து கடுமையான நிதி நெருக்கடி சோகத்தில் மூழ்குகின்றனர்.  இன்னும் சொல்லப்போனால், அவர்களின் பணிக் காலத்திலேயே கூட சட்டப்பூர்வமான ஊதிய மறு நிர்ணயம், ஆண்டு ஊதிய உயர்வு, மற்ற படிகள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றையே போராடித் தான் பெற வேண்டிய நிலை உள்ளது. விரைவில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஊழி யர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள திட்டமிடுவதற்குப் பதிலாக மிகப்பெரிய அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. அவர்கள் ஓய்வுக்கால பலன்களை பெறுவதில் அளவு கடந்த தாமதம் நிலவுகிறது.

வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படும்ஊழியர்கள்

போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் பரிதாபகரமான சூழல் உள்ளது. அடுத்தடுத்து வந்த அரசுகளும் இதே முறையில் தான் தொழிலாளர்களை நடத்தியுள்ளனர். இது ஒரு புதியதொரு நிகழ்வா கவே மாறிவிட்டது. ஆனால் அரசின் கீழ் உள்ள  மற்ற நிறுவனங்களில் ஓய்வு பெறும் ஊழியர்கள் இதுபோன்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ள வில்லை. போக்குவரத்து ஊழியர்கள் லட்சக்கணக் கான பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும், மாநிலத்தின் அன்றாட சமூக பொருளாதார நடவ டிக்கைகளுக்கும் மிகப்பெரிய பங்கை வகித்துள்ளனர். ஆனால் அவர்களின் பொருளாதார நிலைமையோ ரோட்டோரமாக உள்ளது; அவர்களின் எதிர்காலம் இருண்ட காலமாகவே நீடிக்கிறது.

18 மாத கால நீண்ட காத்திருப்பு

பி.பாலகிருஷ்ணன் சென்னை மாநகர போக்கு வரத்து துறையில் பணிபுரிந்து மே 2019ல் ஓய்வு பெற்றவர். அவர் தனது வருங்கால வைப்பு நிதி, ஈட்டிய விடுப்பு ஊதியம், பணிக்கொடை  ஆகிய ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு 18 மாதங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. 18 மாதங்கள் என்பது நீண்ட காலமாக தோன்றுகிறதா? அப்படியெல்லாம் கிடை யாது! புகழேந்திக்கு டிசம்பர் 2015  வயது முதிர்வு பணி ஓய்வு நாள் ஆகும். இன்னும்  அவருக்கு ஓய்வுக்கால பலன்கள் எவையும் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவர் ஒழுங்குமுறையற்று விடுப்பு எடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  நிலுவையாக இருந்துள்ளது. தற்போது தான் அவருக்கு ஓய்வு பெறுவதற்கான அனுமதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் ஓய்வுக் கால பலன்களை அவர் பெற்றபாடில்லை.

அற்பக் காரணங்களுக்கும் கடும்  நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள்

ஓய்வு பெறும் ஊழியரின் ஓய்வுக்கால பலன்களை நிறுத்தி வைப்பதற்கு நிறுவனத்திற்கு யாதொரு உரி மையும் இல்லை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக் காட்டுகிறார் புகழேந்தி. ஆனாலும் அதிகாரிகள் நீதி மன்றத்தை அவமதிப்பு செய்துள்ளனர். அற்பமான தவறுகளுக்கும் கடுமையாகத் தண்டிக்கும் பழி வாங்கும் மனப்பான்மை கொண்ட நிறுவனமாக போக்குவரத்துத் துறை உள்ளது என்கிறார் புகழேந்தி.

ஓய்வு பெறும் நாளில் வழங்கப்படுவது வேட்டியும், ஸ்வீட் பாக்ஸ் மட்டுமே

வி. தயானந்தம் (சிஐடியு நிர்வாகி)  கூறும் போது, “ஒரு ரயில்வே ஊழியர் ஓய்வு பெறும் நாளில் அனைத்து ஓய்வுக்கால பலன்களுக்கான காசோலை யைக் கையோடு பெறுகிறார். பெற்றுக் கொண்டு பெரு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் செல்கிறார். ஆனால் ஒரு அரசு போக்குவரத்து ஊழியர் ஓய்வு பெறும் நாளில்  பெறுவது அவர் ஓய்வு பெற அனுமதிப்ப தற்கான உத்தரவு, அவருக்கு சேர வேண்டிய நிலுவை ஓய்வூதியப் பலன்களுக்கான ஒரு இருப்பு நிலை கணக்குச்சீட்டு, ஒரு வேட்டி, சில இனிப்புகளைக் கொண்ட ஒரு ஸ்வீட் பாக்ஸ் மட்டுமே!  ஓய்வு பெறும் நாளில், போக்குவரத்து ஊழியர்களுக்கு நிதிப் பலனாக ஒன்றுமே வழங்கப்படுவதில்லை. அவருக்கு வழங்கப்படும் கணக்குச்சீட்டில், அவ ருக்கு சேர வேண்டிய ஓய்வுக்கால பலன்களான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஈட்டிய விடுப்பு ஊதியம், ஓய்வு பெறும்போது தொகுத்து பெறப்படும் தொகை (கம்யூடேசன்) ஆகிய விவரங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். மாதாந்திர ஓய்வூதியம்  கூட மூன்று மாதம் கழித்து  தான் வங்கிக் கணக்கில் வரவாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த 2015 இல் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. கடந்த 80 மாதங்களாக அகவிலைப்படி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது” என்கிறார்.

ஸ்வீட் பாக்ஸ், வேட்டி வாங்க மறுப்பு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த ஆர். சுப்பிரமணியம் கடந்த ஜூன் 30 இல் ஓய்வு பெற்றார். என்னென்ன  இடர்பாடு களை எதிர் கொள்ள நேரிடுமோ என்று மனங்கலங்கு கிறார்.  அவரது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்; மகன் உயர் கல்வியை தொடர கணிச மான நிதி வேண்டும் என்பதெல்லாம் அவரின் எதிர்காலத் திட்டங்கள். இவர் ஓய்வு பெற்ற நாளில் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் முறையில், ஸ்வீட் பாக்ஸ், வேட்டியை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மாநில அரசின்  எட்டு போக்குவரத்துக் கழகங்க ளில் மாநில விரைவு போக்குவரத்துக் கழக ஊழி யர்கள் மட்டுமே தாங்கள் ஏதோ கொஞ்சம் அதிர்ஷ்ட சாலிகள் என்று கருதிக் கொள்ளும் நிலை உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு மட்டுமே ஓய்வுபெறும் நாளில் ஏதோ ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலை மட்டும் வழங்கப்படுகிறது.

மற்ற போக்குவரத்துக் கழகங்களில் ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் இருந்தே நிலையான ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வுக்கால பலன்களை பெறுவதில் அளவு கடந்த தாமதத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ஊழியர்கள் இடையே கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்களும், தனிப்பட்ட குடும்பக் கடமைகள் உள்ளவர்களும் கடு மையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். சமூக நலத் திட்டங்களின் கீழ் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை கூட வழங்கப்படவில்லை. சிஐடியு, ஆளும் திமுக வைச் சார்ந்த தொழிற்சங்கம் போன்ற சங்கங்கள் நிலு வையில் உள்ள ஓய்வுக்கால பலன்கள், அகவிலைப் படியை வழங்கக் கோரி  எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தின.

புதுமையான போராட்டம்

தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி கடந்த ஜூன் 30-இல் ஓய்வு பெற்றவர் முகமது அலி ஜின்னா. அவர் ஓய்வு பெறும் நாளில் தனது குடும்பத்தினருடன் பணிமனைக்கு முன்பாக மறியல் போராட்டம் நடத்தினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. உடனே ஏராளமான ஓய்வு பெற்ற ஊழி யர்கள் ஜின்னாவின் வழியில் தங்களின் குடும்பத்தி னருடன் போக்குவரத்து பணிமனை முன்பு மறியல் போராட்டம் செய்தனர். ஆனாலும் என்ன? முகமது அலி ஜின்னாவுக்கு இன்னும் ஓய்வுக்காலப் பலன் கள் எவையும் வழங்கப்படவில்லை.

அதிகாரிகள் கூறும் காரணங்கள்

நிதி நெருக்கடி, லாபம் ஈட்டாத வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குதல், சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகம், கோவை, மதுரை, சேலம், கும்பகோ ணம், திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகிய 8 போக்கு வரத்துக் கழகங்களின் மிகப்பெரிய நிர்வாகச் செல வினம் ஆகியவற்றை  ஓய்வுக்காலப் பலன்கள் காலத்தே வழங்கப்படாததற்கான காரணங்களாக அதிகாரிகள் கூறுகின்றனர். போக்குவரத்துக் கழகங்கள் வரு வாயை மீறிய செலவின நெருக்கடியில் உள்ளதாக தெரி விக்கின்றனர். அன்றாட நிர்வாகத்தை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருப்பதாக போக்குவரத்துத் துறை சொல்கிறது. போக்குவரத்துக் கழகம் ஈட்டும் வருவாயில் பாதித் தொகை தொழிலாளர்களின் ஊதியம், படிகள், வருங்கால வைப்பு நிதி, ஈட்டிய விடுப்பு ஊதியம், பிற ஓய்வுக்கால பலன்களுக்கான செலவினமாக செல்வதாகக் கூறப்படுகிறது. 2010 -11 இல் ஊழியர் பணியமைப்புச் செலவினம் ரூ. 3757 கோடியாக (வருவாயில் 44 %) இருந்தது. 2021 - 22 இல் 8475 கோடி யாக (வருவாயில் 55%)  அதிகரித்துள்ளது.

ஊழியர்களின் பணத்தை நிர்வாகச் செலவினத்திற்காக மாற்றுதல்

போக்குவரத்துத் துறை ஊழியர்களின் அவல நிலைக்கு  அதிகரித்து வரும் ஊழியர் ஊதியச் செல வினம், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை நிர்வாகம் காரணங்களாகச் சொல்கிறது.ஆனால், தொழிற் சங்கத் தலைவர்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தனிநபர் பங்குத்தொகை மற்றும் ஓய்வுக் காலப் பலன்களுக்கான தொகையையும்   அன்றாட நிர்வாகச் செலவினத்திற்காக வகை மாற்றம் செய்யப் படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஊழியர்களின் நிதியும் துடைத்தெறியப்பட்டுவிட்ட நிலையில் மாநில அரசின் பல்வேறு மானியங்களை  போக்குவரத்துக் கழகங்கள் எதிர்பார்த்து காத்தி ருக்கின்றன. அரசோ அவ்வப்போது திட்டமிடாத முறையில், சீரற்ற வகையில் நிதி வழங்குகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் எப்போது ஓய்வுக்காலப் பலன்களை பெறுவோமோ என்ற திகில் மனப்பான்மையில் இருக்கின்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகங்கள்  லாப நோக்கிலானதல்ல

ழியர் சங்க தலைவர். அவர் மாநில அரசு போக்கு வரத்துக் கழகங்கள் லாபம் ஈட்டுவதற்கான நிறுவ னங்கள் அல்ல. அவைகள் மக்களுக்கு குறைந்த செலவில் போக்குவரத்து வசதி வழங்கும் சேவை யாற்றி வருபவையாகும் என்கிறார் தொழிலாளர் முன்னேற்ற பேரவையைச் சார்ந்த கே.நடராஜன் என்பவர் அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியின் மோசமான முடிவுகள் போக்குவரத்துக் கழகங்களை நாசப்படுத்தி விட்டதாகக் கூறுகிறார். லாபகரமான வழித்தடங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களை அனுமதித்தது, மொஃபசல் வழித்தடங்களில் தனியார் பஸ் நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுத்தது, அரசு போக்குவரத்து கழகம் நீண்ட தூர பயணச் சேவைகளை விரிவாக்கம் செய்யாதது போன்ற காரணங்களை கூறுகிறார்.

மேலும், தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் பல்லாண்டு காலமாக உயர்த்தப்படாத அடிப்படை ஊதியம் ,படிகள் ஆகிய வற்றை உயர்த்தவும், தொழில்நுட்பப் பணியாளர்களு க்கு ஒரே ஒரு தடவையிலான  பதவி உயர்வு வழங்கவும் 14ஆவது ஊதிய மறுநிர்ணயம் தொடர்பான கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் போது கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதாகத் தெரி விக்கிறார்.‌ நிதி ஆதாரங்களை திரட்டி நிலுவைகளை தீர்வு செய்ய அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வதா கவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அமைச்சர்

கடுமையான நிதி நெருக்கடி, ஊழியர் பிரச்சனை களால் முற்றுகையிடப்பட்டுள்ள போக்குவரத்து துறையின்  அமைச்சர் எஸ் .எஸ். ‌சிவசங்கருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. 14ஆவது ஊதிய நிர்ணய பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடிக்க வேண்டும். இந்தப் பிரச்சனை பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சர் இந்தத் துறைக்கு புதியவர். மிகவும் வித்தியாசமான பிரச்ச னையை எதிர்கொண்டுள்ளார். அவர் இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த போது, முந்தைய அரசு ஓய்வுக்காலப் பலன்களுக்கு செல வழிக்க வேண்டிய மிகப்பெரிய தொகையை வழங்கும் கடமையிலிருந்து தப்பிப்பதற்காக கொரோனா மருத்துவ பேரிடர் காலத்தில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியது. இதனால் திமுக அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.

2020- 21 இல் இறந்தவர்கள், தன் விருப்ப ஓய்வில்  ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை மட்டும் ரூ.985 கோடி ஆகும். கொரோனா பேரிடர் காலத்தில் மட்டும் 2498 பேர் தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், பணியிடை மரணம் அடைந்த ஊழியர்கள் எண்ணிக்கை மட்டுமே 1906 என்றும் தெரிவித்தார். 2022 மே ,ஜூன் மாதங்களில் மட்டும் 1755 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஊழியர்களின் ஓய்வுக்கால பலன்களை வழங்கு வதில் நிலவும் அளவு கடந்த தாமதத்தை அமைச்சர் ஒப்புக்கொண்டார். கொரோனா பெருந்தொற்றின் போது இறந்த ஊழியர்கள், தன் விருப்ப ஓய்வு பெற்ற வர்கள் ஆகியோருக்குரிய ஓய்வுக் காலப் பலன்க ளுக்கான தொகையை அரசு விரைவில்  வழங்கிவிடும்.  அரசு வழங்கியவுடன் அவர்களுக்கான  ஓய்வுக்கால பலன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரி வித்தார்.

நன்றி :இந்து (ஆங்கிலம்) நாளிதழ் ஜூலை,17,  தமிழில்: ம.கதிரேசன்