articles

img

ஓய்வூதியம் மறுக்கும் முதலாளித்துவம்; சுரண்டலை எதிர்க்கும் சோசலிசம்! -பி.சம்பத்

சமீபகாலத்தில் ஓய்வூதியர்கள் அமைப்பாக திரளும் உத்வேகம் அதிகரித்து வருகிறது.  காரணம், ஓய்வூதியம் உட்பட பல உரிமை களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள காலம் இது. தொழி லாளி வர்க்கத்தின் ஊதியம், வேலை நிரந்தரம், பஞ்சப்படி, போனஸ், மருத்துவ உரிமை, விடுப்பு உரிமை உட்பட பல உரிமைகளுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்தியா வில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் முதலாளித் துவ வர்க்கம் கடைப்பிடித்து வரும் தாராளமய, தனி யார்மய கொள்கைகள் தான். இக்கொள்கைகள் வலுவான போராட்டங்கள் மூலம் முறியடிக்கப் பட்டாலன்றி உழைக்கும் மக்களுக்கு விடிவு காலம் இல்லை.

போராடிப் பெற்ற உரிமைகள்

மேலே சொன்ன உரிமைகள் முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்திற்கு தாமாக முன்வந்து வழங்கியதல்ல. தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் இவை. இதற்கு நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி உள்ளது. இதனைச் சரியாக புரிந்து கொண்டால் தான் நமது போராட்டங்களை சரி யான திசைவழியில் கொண்டு செல்ல முடியும். முத லாளித்துவம் உருவாகி பல நூற்றாண்டு காலம் தொழிலாளர்கள், முதலாளிகளின் லாபத்திற்காக மிக கடுமையாக சுரண்டப்பட்டார்கள். இதற்கு எதி ராக தொழிலாளி வர்க்கம் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடியது. இச்சூழலில் தான் 1917ல் நவம்பர் புரட்சி ரஷ்யாவில் வெற்றிபெற்றது.

அங்கு தோழர் லெனின் தலைமையில் அணி திரண்ட உழைப்பாளிகள் “நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்வாதார உரிமை களுக்காக போராடிக் கொண்டும், முதலாளி வர்க்கத்திடம் கையேந்திக் கொண்டும் இருக்க முடியாது. - எங்கள் உரிமைகள் நலன்களை காக்க அரசாங்கத்தை கைப்பற்றுவோம். அரசியல் அதி காரம் பெறுவோம்” என உறுதிமிக்க போராட்டங்க ளை நடத்தினார்கள். பொருளாதாரப் போராட் டத்தை அரசியல் போராட்டமாக மாற்றினார்கள். இதில் கிராமப்புறத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து உழைப்பாளிக ளும் இணைந்து மகத்தான புரட்சியாக அது மாறி யது. நவம்பர் 7இல் லெனின் தலைமையில் அதிகா ரத்தைக் கைப்பற்றினார்கள். உலக வரலாற்றில் முதன்முதலில் தொழிலாளி வர்க்கத்தின் கையில் அரசியல் அதிகாரம் கிடைத்தது.

உலகையே காத்த  சோவியத் செஞ்சேனை

உலகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற் படுத்திய நிகழ்வு இது. முதலாளி வர்க்கத்தை கதி கலங்க வைத்த நிகழ்வும் இதுதான். அப்போதும் கூட“கூலிக்காரர்களாவது அதிகாரத்தில் நீடித்தி ருப்பதாவது” என தங்களைத் தாங்களே முதலாளி கள் தேற்றிக்கொண்டார்கள். ஆனால், முதலாளி களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி சுமார் 75 ஆண்டு கள் தொழிலாளி வர்க்க அரசு நீடித்து நின்றது என்பது மறுக்க முடியாத வரலாறு. மட்டுமல்ல, 1940 களில் ஹிட்லர், முசோலினி தலைமையில் பாசிச, நாசிச சர்வாதிகார சக்திகள் உலகையே கபளீகரம் செய்யும் வகையில் பெரும் சவாலாக உருவாகின. இதை முறியடிக்க முடியாமல் அமெரிக்கா, பிரிட்டன்,  பிரான்ஸ் போன்ற பெரும் ஏகாதிபத்திய நாடுகள் விழிபிதுங்கி நின்றன. இத்தருணத்தில் தான் சோவி யத் ஒன்றிய தொழிலாளி வர்க்க செஞ்சேனை களத்தில் இறங்கியது. செஞ்சேனையின் பலம், போர்க்குணம் கண்டு அதிர்ந்து போயினர் பாசிஸ்டு கள். இறுதியாக, உலகமே வியக்கும் வண்ணம் பாசிச, நாசிச சக்திகள் செஞ்சேனையினால் நிர்மூல மாக்கப்பட்டு படுதோல்வியடைந்தன. ஹிட்லரின் சடலம் கூட அவரது ஆதரவாளர்களுக்கு கிடைக்க வில்லை.

புரட்சியால் விளைந்த உரிமைகள்

இந்நிகழ்வுகள் உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தை உத்வேகப்படுத்தி முதலாளித்து வத்திற்கு எதிரான போராட்டத்தில் இறங்க வைத்தன. பாசிச சக்திகள் கைப்பற்றிய நாடு களை செஞ்சேனை விடுவித்தது. அங்கிருந்த கைப்பாவை அரசுகள் வீழ்த்தப்பட்டு 12 நாடுகளில் தொழிலாளி வர்க்கம் தலைமையில் சோசலிச அரசுகள் உருவாகின. தன்னந்தனியான சோவியத் குடியரசு என்ற நிலை மாறி ஒரு சோசலிச முகாமே உருவாகியது. இந்நிலை ஏற்படுத்திய உத்வேகத் தால் இதர பல முதலாளித்துவ நாடுகளில் தொழி லாளி வர்க்கப் போராட்டங்கள் தங்களின் கோரிக்கை களை முன்வைத்து தீவிரமடைந்தன. சோசலிச வளர்ச்சியால் பதறிப்போயிருந்த அந்நாடுகளின் முதலாளி வர்க்கங்கள் தங்கள் நாடுகளிலும் சோவி யத் புரட்சி போல ஏற்பட்டு விடக் கூடாது என அஞ்சி,  போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை வேறு வழியின்றி  நிறைவேற்ற முன்வந்தார்கள். அவ்வாறு கிடைத்தது தான் ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம், பஞ்சப்படி, போனஸ்,  ஓய்வூதியம், மருத்துவ மற்றும் விடுப்பு உரிமைகள். சோவியத் புரட்சியால் உந்தப்பட்டு பிற்காலத்தில் சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுக ளிலும் புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கம் தலைமையிலான சோசலிச அரசுகள் ஏற்பட்டன.

சோவியத் வீழ்ச்சியால் ஏற்பட்ட மாற்றம்

ஆயினும், 1990களில் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. தொழிலாளி வர்க்க வெற்றிகளால் ஆத்திரமடைந்த ஏகாதிபத்தியம் பல சதிவேலை களில் இறங்கியது. மறுபுறம், பல சோசலிச நாடுக ளில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தலைவர்கள் சோச லிசத்தின் பலம் அதிகரித்த பின்னணியில் பொருத்த மான எதிர்கால அணுகுமுறைகளை உருவாக்குவ தில் வழி தவறினார்கள். சோசலிச கோட்பாடுகளை மீறி செயல்படும் போக்கும் உருவாகியது. இதுவும்  ஏகாதிபத்தியத்தின் சதியும் இணைந்து சோசலிச அமைப்பிற்கு சரிவு ஏற்பட்டது. சோவியத் யூனியன் சிதறுண்டு போனது. சோசலிச முகாம் மங்கிப் போனது.

இத்தகைய சூழல் முதலாளி வர்க்கத்திற்கு ஊக்க மளிப்பதாக அமைந்தது. சோசலிச சவால் வலுவாக இல்லாத பின்னணியில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான தங்கள் தாக்குதலையும், சுரண்டலையும் தீவிரப்படுத்தினார்கள். லாபத்திற்கான ஒரே ஊற்றுக்கண் உழைப்புச் சுரண்டல் மட்டும் தானே?. எனவே, தாராளமயம்-தனியார்மயம்-உலக மயம் என்ற கொடூரமான சுரண்டல் முறை யை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அமல்படுத்தி னார்கள். இதன் விளைவுகள் தான் நாம் சந்திக்கும் ஊதிய குறைப்பு, காண்ட்ராக்ட் முறை,  போனஸ் - பஞ்சப்படி - ஓய்வூதியம் மறுப்பு போன்ற தாக்குதல்கள். இன்றளவும் பெரும் சவாலாக தொழிலாளி வர்க்கத்தின் முன்பு இக் கொள்கைகள் அமைந்துள்ளன. 

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?. உலக அளவில் சோசலிச முகாம் வலுவாக இருந்து தொழிலாளி வர்க்க அரணாக செயல்பட்ட காலத்தில் முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளி வர்க்கம் போராடி மேலே குறிப்பிட்ட பல உரிமைகளைப் பெற முடிந்தது. சோசலிச அமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்ட சூழலில் - அத்த கைய பாதுகாப்பு அரண் இல்லாத சூழலில் அனுப வித்த உரிமைகள் பறிக்கப்பட்டு உழைப்பாளிகள் கோரச்சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது வலுவான போராட்டங்கள் பல நடந்தாலும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுவது கடினமான நிலையாக மாறியுள்ளது.

விடுபடுவதற்கான தீர்வு என்ன?

தாராளமயக் கொள்கைக்கு மாற்று இல்லை என கொட்டமடிக்கிறார்கள் முதலாளிகள். ஆம்.  அவர்கள் கொள்ளை லாபம் அடைய இதனைத் தவிர அவர்களுக்கு மாற்றுக்கொள்கைகள் இல்லை தான். ஆனால், தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இதனை நாம் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. இந்த கொடூரச் சுரண்ட லிலிருந்து விடுபட தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு மாற்றுக் கொள்கை இருக்கிறது. அது தான் சோசலிசம். உழைப்பாளிகள் அனைவரும் இந்த உண்மையை தம் நெஞ்சங்களில் ஆழப் பதிந்து கொள்ள வேண்டும். புரியாதவர்களுக்கும் இதனை  புரிய வைத்திட வேண்டும். தாராளமய-தனியார் மய-உலகமய சுரண்டல் பாதையை முறிய டிப்பதற்கான போராட்டங்களை தீவிரப்படுத்திக் கொண்டே படிப்படியாக இப்போராட்டங்களை சுரண்டலிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்கான சோசலிசத்திற்கான போராட்டமாக மாற்றுவ தற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். தொழிலாளி வர்க்கத்திற்கும், இதர உழைப்பாளி மக்களுக்கும் தலைமை தாங்கும் தோழர்களுக் குள்ள குறிப்பான கடமை இது.

பாட்டாளி வர்க்கத்தின்  உடனடி எதிரி

இந்தியாவில் தாராளமய-தனியார்மய கொள்கைகளை 1990களில் காங்கிரஸ் ஆட்சியா ளர்கள் நரசிம்மராவ் - மன்மோகன் சிங் காலத் தில் துவக்கினார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இதனை மிகத் தீவிரமான முறையில் அமல்படுத்தி வருகிறது. இதற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட் டங்கள் வலுப்பெற்று வருகின்றன. ஆனால், சங்பரிவார் - பாஜக கும்பலால் அமல்படுத்தப்படும் இந்துத்துவா மதவெறிக்கோட்பாடு பாசிச ஆட்சிக்கு இட்டுச்செல்வது மட்டுமின்றி, உழைப்பாளி மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்மமான வெறுப்பை பரவலான மக்களிடம் உருவாக்க முனைகிறது. சாதியப் பிளவுகளையும் சாதுரியமாக பயன்படுத்தி சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக மக்கள் அணி திரள்வதை தடுக்க முனைகிறது. இச்சூழலில் பிரதான அபாயம் என்ற முறையில் பாசிச இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிராக மக்களை அணி திரட்ட வேண்டும். அதே நேரத்தில் தாராளமய - தனியார்மய - உலக மய கொள்கையை முறியடிப்பதற்கான போ ராட்டங்களையும் கூர்மையாக வலுப்படுத்த வேண்டும். சமீபத்திய தேர்தலில் பாஜக நாடாளு மன்ற பலத்தில் பின்னடைவைச் சந்தித்திருப்பது நமக்கு உத்வேகம் அளிக்கிறது. இச்சூழலை பயன் படுத்திக் கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக அரசியல் - பொருளாதார போராட்டங்களை வலு வாக அணி திரட்டுவோம்.

தமிழ்நாடு அரசு  கவனிக்க வேண்டியது

தமிழ்நாடு அரசுக்கு இம்மாநாட்டின் மூலம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். பாசிச மதவாத தாக்குதலுக்கு எதிராக திமுகவின் பங்களிப்பை நாம் வரவேற்கிறோம். எனினும், ஒன்றிய அரசின் தாராளமய, தனியார்மய கொள்கைகள் தமிழ கத்தில் அமல்படுத்தப்படுவதும் அதன் மூலம் உழைப்பாளி மக்களின் நலன்கள், உரிமைகள் பாதிப்புக்குள்ளாக இடம் தருவதும் ஏற்கத்தக்க தல்ல. தமிழக உழைப்பாளி மக்கள் இதனை ஒருபோ தும் ஏற்க மாட்டார்கள். சென்னை மாநகரில் தற்போது சாம்சங் தொழிலாளர்கள் மூன்று வாரங்க ளாக போராடி வருகிறார்கள் என்பது அதற்கான எடுத்துக்காட்டு. சாம்சங் நிர்வாகத்தின் அடாவடித் தனமும் தமிழக அரசின் உறுதியான தலை யீடின்மையும் தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை அதிருப்தியடைய வைத்துள் ளது. செங்கொடி இயக்கம் உழைப்பாளி மக்களின் நலனில் எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலை யிட்டு தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை யையும், இதர உரிமைகளையும் அங்கீகரிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இதேபோன்று மின்சார வாரியத்தை பல கூறுகளாக பிரித்திருப்பதும், மின்துறை உட்பட கேந்திரமான துறைகளில் தனியார்மயத்தை அனு மதிப்பதும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல பரவ லான பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைதான். காலிப்பணியிடங்களை நிரப்பா தது, காண்ட்ராக்ட் முறையை தீவிரமாக புகுத்துவது, சுரண்டலை அதிகப்படுத்தும் என்பதோடு சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் பெரும் கேடு ஏற் படுத்தும்.  இந்நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.

ஓய்வூதியர்கள் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல. தொழிலாளி வர்க்கத்தின் பிரிக்கமுடியாத பகுதியினர். எனவே, ஓய்வூதியர்களின் போராட்டங் களை இதர உழைப்பாளி மக்களின் போராட்டங்க ளை இணைத்து வலுவான முறையில் நடத்திட திட்டமிட வேண்டும்.

பி.சம்பத்

மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

26.09.2024 அன்று திருவண்ணாமலையில்  நடைபெற்ற மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மாநாட்டில் ஆற்றிய துவக்கவுரையின் கட்டுரை வடிவம்