articles

img

விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடா? மோடி அரசின் வெற்று அளப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 2024 பிப்ரவரி 1,2 அன்று மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கருகும் பயிரைக் காப்பாற்ற   காவிரியில் தண்ணீர் திறந்திடுக!
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட் டங்களில் 76 ஆயிரம் ஏக்கர் தாளடி பயிர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் மேட்டூர் அணையில் 34 டி.எம்.சி  தண்ணீர் இருப்பில் உள்ளது. தண்ணீரை உடனடியாக திறந்து விட்டால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட விவசா யிகளையும் 76 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற் பயிரையும்  பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும். ஆகவே, தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலை யிட்டு போர்க்கால அடிப்படையில், உடனடியாக தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட வேண்டும்.

பிப்ரவரி 16 -  மறியல் - ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்புகள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய விவ சாயத்துறை மேம்பாட்டிற்கு 2022-23 உடன் ஒப்பிடுகையில் 2023-24க்கு ஒதுக்கப்பட்டது ரூ.81,000 கோடி குறைவாக உள்ளது. மேலும் 2023-24க்கு ஒதுக்கப்பட்டது என்பது 2022-23ல் செலவு செய்ததை  காட்டிலும் 22.3% குறைவு ஆகும். இந்த பட்ஜெட்டில் உர மானியத்திற்கு பெரிதாக ஒதுக்கியதாக ஒன்றிய ஆட்சியாளர்கள் கதை அளக்கி றார்கள். உண்மை என்னவெனில் 2022-23ல் செலவு செய்ததைவிட ரூ.87339 கோடி குறைவான தொகையே  செலவு செய்யப்பட்டுள்ளது. உணவு மானியம் ஒதுக்கீடு என்பது ரூ.67,552 கோடியாகும். இதுவும் 2022-23யை விட குறைவு.

இந்த செயலானது பொது விநியோக முறை மற்றும் வேளாண் விளை பொருட்க ளை அரசு கொள்முதல் செய்வதன் மீது தொடுக்கப் படும் தாக்குதல் ஆகும்.  விளை பொருட்களுக்கான உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50 சதவீதம் வைத்து, (C2+50%) நிர்ணயிக்கப் படும் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிப்ப தற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இதேபோன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு, உணவு சேமிப்பு, வெள்ள சேதாரங்களை கட்டுப்படுத்துதல், நீர்ப்பாசனம், கிராமப்புற உள் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம்,  பட்டி யலின மக்களின் மேம்பாடு, பெண்கள் பாதுகாப்பு & மேம்பாடு போன்ற அம்சங்களுக்கு பெருமளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  

இந்த நடவடிக்கையானது விவசாயிகளின் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்நிலையை மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும். ஒன்றிய அரசின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாக கண்டிக்கி றோம்.  விவசாய விரோத பட்ஜெட் உட்பட ஒன்றிய அரசின் விவசாய விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை  கண்டித்து பிப்ரவரி 16  அன்று தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்துவதென ஐக்கிய விவசாயி கள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையொட்டி தமிழ்நாட்டில் அன்றைய தினம், ஆர்ப்பாட்டம்- மறியல் எழுச்சி யுடன் நடைபெறும். அனைத்து பகுதி மக்களும் ஒத்து ழைத்து, பேராதரவு தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் - 165 கிராம மக்களை வாழ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக!
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில் தமிழக அரசு வனத்துறை மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங் கள் உள்ளடக்கிய பகுதியில் 1972 ஆம் வருட வன விலங்கு சட்டம் 26(11) ன் கீழ் அரசாணை எண் 193 07.11.2023 ன் படி காவிரி தெற்கு வன உயிரின சரணால யம் அமைப்பதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் 25.04.2022 அன்று அறிவித்தது.

இந்த சரணாலயம் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தர்மபுரி  மாவட்டம் பென்னாகரம் பாலக்கோடு தாலுகாக்களில் சுமார் 686-405 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமை யும்.  இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள காப்புக்காடுகளும் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரணாலயம் தெற்காசியாவில் முக்கிய யானை வாழ்விடமாகவும்; வனவிலங்குகள் பாதுகாக் கப்படும் எனவும் 35 வகை பாலூட்டிகள் 238 வகை  பறவையினங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கம் உள்ள  பகுதியாக மாறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அறிவித்துள்ள இப்பகுதியில் 165 கிரா மங்களில் இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்கள்  சுமார் 40 ஆயிரம் பேர் காலங்காலமாக வசித்து  வருகின்றனர். இவர்கள் வாழும் பகுதியில் விவசா யத்தில் ஈடுபட்டும் காவிரி நதியை ஒட்டி ஆடுகள் மாடுகள், பட்டிகள் அமைத்து மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டும் வருகின்றனர்.

கிராமங்களில் வசிக்கும் மக்கள், பெண்கள் குழுவினர் வனத்தையொட்டிய பகுதியில் வன சிறு மகசூல் சேகரித்து வாழ்வாதாரத்தை நடத்தி வரு கின்றனர்.  தற்போது வனத்துறையினர் கால்நடைகளை விரட்டி பட்டாசு வெடித்தும் தங்கும் குடிசைகளுக்கு தீ வைத்தும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போட்டும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனச் சரணாலயத்திற்கான எல்லையை தீர்மா னித்து பெரும் கம்பி வடங்களை அமைத்தும் 165 கிரா மங்களில் வசிக்கும் மக்களை அவர்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

எனவே ஒன்றிய,  மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. மேலும் இப்பகுதி பெருங்காடுகள் இல்லாத சமவெளியில் இடைவெளி யில் உள்ள சிறுகாடுகள் கொண்ட பகுதியாகும். பூகோள அடிப்படையிலும் வனவிலங்கு சரணாலயம் அமைக்க பொருத்தமற்ற பகுதியாகும்.  

எனவே 2006 வன உரிமைச் சட்டத்தின் அடிப்ப டையில் வனத்தில் உள்ள அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கிடவும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் பாரம்பரியமாக ஆடு, மாடு மேய்க்கும் உரிமையை அனுமதித்திடவும் சிறு மகசூல் சேகரித்திடவும் அனுமதித்திட வேண்டும். மேலும் காவிரி தெற்கு வன சரணாலயம் திட்டத்தை கைவிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட 165 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு வலியுறுத்துகிறது.