மேற்கு தொடர்ச்சி மலையில் தண்ணீர் இல்லாமல் உறக்க நிலைக்கு சென்று பிழைத்திருக்கும் 62 புதிய வகை தாவரங்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தண்ணீரையும் சத்துகளையும் கடத்தும் தந்துகிக் குழாய்கள் உள்ள இத்தகய தாவரங்கள் நீராவிப் போக்கை தடுத்து தீவிரமான வறட்சியை தாக்குபிடிக்கின்றன. தண்ணீர் கிடைத்தவுடன் மீண்டும் உயிர்க்கின்றன. இவைகள் விவசாயத்தில் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் என்கின்றனர் ஆய்வாளர்கள்.