சேலம் மாநகரத்தில் காவல் துறை மற்றும் தனியார் பங் களிப்புடன் சுமார் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டது. 99 சதவிகி தம் தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மாநகர காவல் துறையினர் சரியாக கண்கா ணிப்பு செய்யாததால் சேதமடைந்துள் ளது. இந்நிலையில், தற்போது குற்ற சம்பவங்களிள் தொடர்புடையவர்களை கண்காணிக்க முடியாமல் காவல்துறை யினர் திணறி வருகின்றனர்.
மாநகரத்தின் மையப்பகுதிகளாக அஸ் தம்பட்டி, அழகாபுரம், செவ்வாய்பேட்டை, கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, பள் ளப்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை ஆகியவை உள்ளன. இப்பகுதிகளில் அதி கப்படியான குற்றச்செயல்கள் நடைபெற்று வந்தது. இதனை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்கள் நடைபெறாமல் போலீசார் தடுத்து வந்த னர்.
இந்நிலையில், காவல் துறையினரின் மூன்றாவது கண் எனச்சொல்லப்படுகிற இந்த கண்காணிப்பு கேமராக்கள் உரிய பரா மரிப்புப் பணிகள் செய்யாததால், 90 சதவி கிதமான கண்காணிப்புக் கேமராக்கள் பழு தடைந்தும், சேதமடைந்தும் காணப்படு கின்றன. இதன்காரணமாக வழிப்பறி, வாக னத் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் அதிக ரித்துள்ள நிலையில், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் போலீசாரின் மூன்றா வது கண்களுக்கு அகப்படாமல் தப்பி விடு கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்க ளின் பழுதுகளை நீக்கி, தொடர்ந்து பராம ரித்து, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் கூறுகை யில், பொதுமக்கள் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தல் சேலம் மாநகரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. ரவுடிகளும், வழிப்பறி கொள்ளையர்களும் கண்காணிப்பு கேம ராக்கள் இல்லாததை அறிந்து அதிகள வில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரு கின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் எண்ணற்ற இரண்டு சக்கர வாகன திருட் டுக்கள் நடைபெற்றுள்ளன. காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கேம ராக்கள் பராமரிப்பு செய்யாததால், தற் போது அவைகள் உடைந்து அந்தரத்தில் தொங்குகின்றன. ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப் புடன் தான் 99 சதவிகித கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. முறை யாக பராமரிப்பு செய்யாத காவல்துறை யினர் தற்போது குற்றவாளிகளை அடை யாளம் காணக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாநகரப் பகுதிகளில் குற்றங்கள் அதிகரித்து வருகி றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கண் காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண் டும், என்றார்.
இதனிடையே, சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி, பணி யிட மாற்றம் செய்யப்பட்டார். இதைய டுத்து திருப்பூர் காவல் ஆணையராக செயல்பட்டு வந்த பிரவீன்குமார் அபிநபு, சேலத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலை யில், கடந்த வெள்ளியன்று பொறுப்பேற் றுக் கொண்ட அவர், சேலம் மாநகரில் ரவுடி பட்டியல் எடுக்கப்பட்டு, குற்ற சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்ப டும். மாநகரின் பல்வேறு இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ள தாக அறியபட்டுள்ளது. காவல் துறையின் முக்கிய அங்கமாக உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பழுதுகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என செய்தியா ளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த அறி விப்பின்படி, மாநகர காவல் துறையினர் செயல்படும் பட்சத்தில், பொதுமக்கள் நேசிக்கும் காவல் துறையாக சேலம் மாநகர காவல் துறை மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
-எழில், சேலம்