articles

img

புதுச்சேரி காவல்துறையின் அத்துமீறல் கொடூரங்கள்; மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டுவோம்! - எஸ்.ராமச்சந்திரன்

புதுச்சேரி காவல்துறையின் அத்துமீறல் கொடூரங்கள்; மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டுவோம்!

2025 மே 11ஆம் தேதி மாலை 6 மணி யளவில் புதுச்சேரி நல்லவாடு பூர்ணாங்குப்பம் லே-பாண்டி ரிசார்ட்டில் ஒரு பெண் தொழிலாளியின் வாழ்க்கை திடீரென மாறியது. ரிசார்ட்டின் பொது மேலாளர், துப்பு ரவுப் பணியாளரான கலையரசி மற்றும் மூன்று  பெண்களை அழைத்து, “ரிசார்ட்டில் தங்கியிருந்தவ ரின் விலையுயர்ந்த பொருள் காணாமல் போயிருக்கி றது. புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும்” என்று கூறினார்.

சித்ரவதையின் தொடக்கம்

தவளக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கியது. மொத்தம் நான்கு பெண்கள் - கலைய ரசி உட்பட மூன்று பேர் ரிசார்ட்டிலிருந்தும், இன்னொரு பெண் தனியாகவும் அழைத்துவரப்பட்டனர். முதலில் மற்ற பெண்கள் விசாரிக்கப்பட்டனர். மாலை 7 மணியள வில் கலையரசியை உதவி ஆய்வாளர் சண்முக சத்யா தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.  “நீ தான் நகையை எடுத்தாயா?” என்று கேட்டார். “நான் எடுக்கவில்லை” என்ற பதிலுக்கு, “நீ தான் எடுத்தி ருப்பாய். உண்மையைச் சொல்” என்று முதுகில் லத்தியால் பலமுறை அடித்தார்.

நரக வேதனை

“நான் நகையை எடுக்கவில்லை. மாதவிடாய் காலம்” என்று கதறி அழுத கலையரசி, முதுகிலி ருந்து முழங்கால்கள் வரை கடுமையாக லத்தியால் அடிக்கப்பட்டார். சத்யாவின் கை வலித்ததும், பெண் காவலர் பிருந்தாவை அழைத்து “மாடிக்கு கொண்டு போய் இவளை உதை” என்று உத்தரவிட்டார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளன. காவலர்கள் பிருந்தா மற்றும் வசந்த், கலையர சியை மாடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வீடியோ கண்காணிப்பு இல்லை. பிருந்தா, ஆடைகளைக் கழற்றச் சொல்லி நிர்வாணப்படுத்தினார். “உன் வயிற் றைக் கிழித்துப் பார்த்தால் தெரியும்” என்று கூறி, குனியவைத்து முதுகில் கடுமையாக அடித்தார். வசந்த் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று, கையை நீட்டச் சொல்லி விரல்களில் அடித்ததால் விரல்கள் வீங்கின. விரல்களைச் சுவரில் தட்டச் சொன் னார். உதவி ஆய்வாளர் சுரேஷ் வந்து முட்டிப் போட வைத்து உள்ளங்கால்களில் லத்தியால் பலமுறை அடித்தார். கன்னத்திலும் அறைந்தார். “இதற்கு மேல் அடித்தால் இவர் இறந்துவிடுவார்” என்று அங்கிருந்த ஒருவர் தடுத்ததால் சித்ரவதை நின்றது.

விடுதலையும் திடீர் திருப்பமும்

இரவு 1 மணியளவில் மறுநாள் காலை 8 மணிக்கு வருமாறு கூறி வீட்டுக்கு அனுப்பினர். மறுநாள் (மே 12) கணவருடன் சென்ற கலையரசி, காலை 10  மணிக்கு மதிய உணவு சாப்பிட்டு மீண்டும் வருமாறு கூறப்பட்டபோதும், நாள் முழுவதும் காவல் நிலை யத்திலேயே காத்திருக்க நேர்ந்தது. இரவு 11:45 மணியளவில் சண்முக சத்யா, “நீ எந்தத் தவறும் செய்ய வில்லை. வீட்டுக்குப் போ” என்றார். கணவர் “என் மனைவி தவறு செய்யாதபோது ஏன் அடித்தீர்கள்?”என்று கேட்டதற்கு, அவரையும் தாக்கி மிரட்டும் தொனியில் “ஒழுங்காக வெளியே ஓடிப்போங்கள்” என்றனர்.

மனைவியின் துயரம், கணவனின் மரணம்

காவல்துறையின் கொடுமையால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும், மனைவி மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட அவமானத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளான கலையரசியின் கணவர் அர்ஜூனன், மனமு டைந்த நிலையில், மே 14, 2025 அன்று மயங்கிச் சரிந்து விழுந்தார். உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். நினைவு திரும்பாமலேயே மே 23, 2025 அன்று அர்ஜுனன் மரணமடைந்தார்.

புகாரின் சந்தேகத்திற்குரிய தன்மை

லே-பாண்டி ரிசார்ட்டில் தங்கியிருந்தவர்கள் யார்? அவர்கள் புகாரை எப்போது கொடுத்தார்கள்? நேர டியாகவா அல்லது ஆன்லைனிலா? காணாமல் போன பொருளை உண்மையிலேயே எடுத்து வந்தார் களா? இவை அனைத்தும் தெரியாது. ஆனால் அவர் கள் பொருள் கிடைத்து விட்டதாகப் புகாரை வாபஸ் வாங்கியுள்ளனர்.  லே-பாண்டி ரிசார்ட் நிர்வாகம், தவளக்குப்பம் காவல் நிலைய அதிகாரிகள் மட்டுமே இந்தப் புகாரின் உண்மையை அறிவார்கள். ஆனால் இந்தப் புகாரால் ஒரு குடும்பம் வீதியில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடு

மே 23, 2025 அன்று கலையரசியின் கணவர் இறந்த தும், அவரது உறவினர் மறுநாள் மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர் ராஜாங்கத்தை தொடர்பு கொண்டார். உடனடியாக தோழர் பெருமாளுடன் சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் மாவட்ட ஆட்சி யரைச் சந்தித்தனர். ஆட்சியர் முன் கலையரசி அளித்த வாக்குமூலத் தின் அடிப்படையில் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப் பட்டது. ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். அகில இந்திய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

போராட்டம்

பத்து நாட்களுக்கு மேலாகியும் காவல்துறையின் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ(எம்.எல்) ஆகிய கட்சிகள் இணைந்து தவளக்குப்பம் காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தன.

அவர்களின் கோரிக்கைகள்

: l காவல் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு; l உடனடி தற்காலிக பணிநீக்கம்; l உயர்மட்ட விசாரணை; l கலையரசியின் குடும்பத்திற்கு இழப்பீடு வேண்டும் என்பதாகும். மாவட்ட ஆட்சித்தலைவர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் உறுதிமொழியின் அடிப்படையில் ஐந்து நாட்கள் கழித்து அர்ஜுனனின் உடல் ஜிப்மரில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அன்றே தவளக்குப்பம் காவல் நிலைய அதிகாரிகள் மொத்தமாக இட மாற்றம் செய்யப்பட்டனர்.

சபாநாயகரின் சர்ச்சைக்குரிய தலையீடு

புதுச்சேரியில் எந்த சம்பவம் நடந்தாலும், குற்ற வாளிகளைப் பாதுகாக்க அவர்கள் தரப்பில் பாஜக சபாநாயகர் செல்வம் ஆஜராகி விடுவார். லே-பாண்டி ரிசார்ட் நிர்வாகத்திற்காகவும் பாஜக சபாநாயகர் செல்வம்  கலையரசியிடம் பேரம் பேசி னார். காவல்துறையையும் ரிசார்ட் நிர்வாகத்தையும் பாதுகாக்க, வழக்கிலிருந்து தப்பிக்க ‘ஒப்பந்தம்’ உரு வாக்கினார். இரண்டு குழந்தைகள், கூரை வீடு கூட  இல்லாமல் பிளாஸ்டிக் பேனரால் மறைக்கப்பட்ட வீடு, கணவனை இழந்த வேதனை, வறுமை, சொந்தங்க ளின் நிர்பந்தம் - இவற்றின் அழுத்தத்தில் கலையரசி கண்ணீருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  

மர்மமான பணப் பரிவர்த்தனை: ஏற்கனவே ஹோட்டல் நிர்வாகம் ரூ.5 லட்சம் தருவதாக பேரம் பேசியது. ஆனால் இறுதியில் ரூ.3.5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள 1.5 லட்சம் எங்கே போனது என்பது தெரியவில்லை. இதை ‘பெருமையாக’ சபாநாய கர் செல்வம் பத்திரிகையாளர்களிடம் வேறு அறி வித்துக் கொண்டார்.

தொடரும் காவல்துறைக் கொடுமைகள் புதுச்சேரியில் இந்தக் கொடுமை முதல் முறையல்ல:

தானாம்பாளையம் பள்ளிச் சிறுமி வழக்கு: இதே காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வழக்கில் காவல் அதிகாரிகளும் சபாநாயகரும் குற்றவாளிகளைப் பாதுகாத்தனர்.

காட்டேரிக்குப்பம் காவல் நிலையம்: இங்கு இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 9 நபர்கள் (2 சிறுவர்கள் உட்பட) பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சித்ர வதைக்கு உள்ளாக்கப்பட்டனர். குற்றம் நிரூபண மாகவில்லை.

கிருமாபாக்கம் காவல் நிலையம்: இங்கு அநியா யத்தைத் தட்டிக் கேட்ட இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்.

நீதிக்கான போராட்டம்

இந்நிலையில், ஜூன் 11, 2025 (இன்று) இடதுசாரிக் கட்சிகள், வி.சி.க., மனித உரிமை மற்றும் சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளன.

போராட்டத்தின் கோரிக்கைகள்:

1.தவளக்குப்பம் காவல் நிலைய அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்க! 2.நேர்மையான விசாரணைக்காக உடனடி தற்காலிக பணிநீக்கம் செய்க! 3.கலையரசியின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்குக! 4.தானாம்பாளையம் பள்ளிச் சிறுமி வழக்கில் தாளாளர் ராமுவைச் சேர்த்திடுக! 5.போக்சோ சட்டத்தின் அடிப்படையில் பள்ளிச் சிறுமி க்கு நிவாரணம் வழங்குக! 6.இரவு நேர விசாரணைகள், பொய்ப் புகார்கள், சித்ர வதைகளைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்திடுக! 7.தவளக்குப்பம் நிகழ்வுகளுக்கு உயர்மட்ட விசார ணைக்கு உத்தரவிடுக!  8. லே பாண்டி ரிசார்ட் மற்றும் காவல் துறையைப் பாது காக்கும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போகும் சட்டப்பேரவை தலைவரே! பதவியின் ‘கண்ணியம்’ காத்திடபதவி விலகுக! புதுச்சேரி காவல்துறையின் சித்ரவதைகளும் மனித உரிமை மீறல்களும் தொடர்கதையாகிவிட்டன. இதற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் இது. கலை யரசியின் துயரம் வீணாகக் கூடாது. அவரது கண வனின் மரணம் நீதியைக் கேட்டு நிற்கிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதும், காவல்துறை யின் அட்டூழியங்களை ஒழிப்பதும் ஒவ்வொரு குடிமக னின் கடமையும் உரிமையும் ஆகும். நீதிக்காகப் போராடுவோம். மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டுவோம்.