articles

img

முதல்வர் மருந்தக சேவைகள் வெற்றி பெற - நீடாமங்கலம் சுப்பையா

முதல்வர் மருந்தக சேவைகள் வெற்றி பெற....

தமிழ்நாடு முழுவதும், 24.2.2025 அன்று 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டன. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல பல திட்டங்களில் இதுவும் ஒன்று. பொது மக்களுக்கு- குறிப்பாக, ஏழை -எளிய நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மூல மருந்துக ளையும் (Generic drugs)  மற்றும் கம்பெனி  பிராண்டட் மருந்துகளையும்  வழங்கும் நல்ல நோக்கம் கொண்ட திட்டம் இது.

 ரூ. 3 லட்சம் வரை மானியம்

மருந்தகம் அமைக்க மருந்தாளுநர் பட்டம் / பட்டயம் பெற்ற புதிய தொ ழில் முனைவோருக்கு மருத்தக கட்டமைப்புகளை உருவாக்குவ தற்காக ரூ. 1.50 லட்சம் பண மானியமும், ரூ. 1.50 மதிப்பில் ஜெனரிக் மருந்துக ளுமாக ரூ. 3 லட்சம் மானியமும், மருந்து களுக்கு 75 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு  வருகிறது.  திருவாரூர் மாவட்டத்தில் கிரா மப்புற நகர்ப்புற மக்களுக்கு கைக் கெட்டும் தொலைவில் பரவலாக 25 இடங்களில் மருந்தகங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. திருவாரூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இம் மருந்தகங்களை கள விசாரணைகள் செய்ததில் பிராண்ட் மருந்துகள் நியாய மான தள்ளுபடி விலையிலும், ஜென ரிக் மருந்துகள்  மிக மிக குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன.

பல அனுபவங்கள்; சில குறை பாடுகள்

ஓய்வு பெற்ற அரசு தலைமை மருந்தாளுநர் ஒருவர் இதைப்பற்றி கூறும்போது, “இந்தத் திட்டம் உண்மையில் மிகச்சிறந்த திட்டம்.  மருந்தகத்தில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகள், சந்தேகத்துக்கு இட மின்றி தரமான மருந்துகளாக உள்ளன. கடந்த மூன்று மாதங்களில்  நல்ல அனுபவம் கிடைத்தது. நான் பணியில் இருந்தபோது அரசு மருத்துவமனை யில் மாதாந்திர அட்டையைப் பயன் படுத்தி இரண்டு முறைசாரா தொழி லாளர்கள் ரத்த அழுத்தத்திற்காக மருந்துகள் எடுத்து வந்தனர். நான் பலமுறை  அவர்களுக்கு மருந்துகள் கொடுத்து வந்திருக்கிறேன். அதில் ஒருவர் கூத்தாநல்லூரில் வீட்டு வேலைகள் செய்யும் பெண்மணி. மற்றொருவர் பெயிண்டர். இந்த இருவரும் மருத்துவமனைக்கு வந்து வரிசையில் நின்று மருந்துகள் வாங்கு வதில் மாதத்திற்கு ஒருமுறையிலும் சிரமங்கள் இருந்தன. நாட்கள் தவறிப்போய் வெளியில் மருந்துகள் வாங்கியும் சில நாட்கள் மருந்துகள் எடுத்துக்கொள்ள முடியாமலும் இருந்தனர். தற்செயலாக அவர்க ளை சந்தித்தபோது முதல்வர் மருந்த கத்தை பரிந்துரை செய்தேன். மிகக் குறைந்த செலவில் இன்று மருந்து களை வாங்கி வருகின்றனர். ‘ரத்த அழுத்தம் திருப்திகரமான முறையில் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளதாக வும் எந்த பிரச்சனையும் இப்போது இல்லை’, என அந்த பெயிண்டர் தெரி வித்தார்” என்று கூறினார்.  

மருந்து தரமானதே!

“ஜெனரிக் மருந்துகளை பற்றி தவறான அபிப்பிராயம் மக்களில் சில ருக்கு உள்ளது. இதய நோயிற்கான மெட்டப்ரலால், சக்சினேட் டெல்மி ஸ்டாடன், ராமிப்ரில், அம்லோடொ பின் என தனியார் கார்ப்பரேட் வணிகத் தில் பல பிராண்ட் பெயர்களில் அநி யாய விலையில் விற்கப்படுகின்றன. இவைகளின்  மூல மருந்துகள் ஜெனரிக் ஆக முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கி றது. மலிவு என்பதால் தரம் இல்லை என்பது பொருள் அல்ல. இந்தியா வில் மருந்துத் துறை கார்ப்பரேட் மய மாக்கப்பட்டு உள்ளது. இதனால்  ஏழை எளிய மக்களுக்கு  கட்டுப்படியாகும் விலையில்  தரமான மருந்துகள் கிடைப் பது அரிதாக உள்ளது. எல்லாம் கொள்ளை லாபம் என்ற பன்னாட்டு வணிக பேராசை சுழற்சியில் ஜெனரிக் மருந்துகளை பற்றிய தவறான பொய் தகவல்கள் பரப்பப்பட்டும் வருகின் றன. இக்கருத்துக்கள் உண்மையல்ல என்று முதல்வர் மருந்தகங்கள் உடைத்து நிரூபித்துள்ளன.  அதே சமயத்தில் நோயாளிகள் விரும்பினால் கம்பெனி பிராண்டட் மருந்துகளும் தள்ளுபடி செய்யப்பட்டகுறைந்த விலையில் முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கின்றன.

ஜெனரிக் மருந்துகள் தேவை யில்லை

ஆனால், இத்திட்டம் ஆரம்பக் கட்டம் தான் என்பதால் சில மோச மான குறைபாடுகளும் உள்ளன. அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்து களில் ஒரு சில மருந்துகள் இருப்பில் இல்லாததை அறிய முடிகிறது. உதார ணமாக சோடியம் பைகார்பனேட் 500 மி.கி. மாத்திரைகள், திருவாரூர் மாவட்டத்தில் அனேகமாக எல்லா மருந்தகங்களிலும் கிடைக்கவில்லை. மெட்டோப்ரலால் 50 மி.கி. அம்லோ டொபின் 5 மி.கி. மருந்துகள் கிடைக்க வில்லை. இவைகள் சிறுநீரக ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கான மருந்துகள். முதல்வர் மருந்தகத்தில், இவை கிடைக்காத தற்காலிக நிலை உள்ளது. இதை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மிக முக்கியத்துவம் கொ டுத்து உடனே தீர்த்து வைக்க வேண் டும். எல்லா உயிர்காக்கும் மருந்துக ளும் எல்லா சக்தி அளவுகளிலும் எப்போதும் இருப்பில் இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.  

என்ன செய்ய வேண்டும்

அவர் கூறியது உண்மைதான் என்பது நமது கள விசாரணையில் தெரிய வந்தது. மாநில அளவில் தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் இணை யம் மருந்துகளின் மொத்தக் கொள் முதல் மற்றும் மாவட்டங்களுக்கான விநியோகத்தை கவனிக்கின்றது. ஒவ் வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை கள் மாவட்ட அளவில் மருந்து கிடங்கி னைப் பராமரித்து வருகின்றன. திரு வாரூர் மாவட்டத்தில் திருவாரூர் கூட்டு றவு மொத்த விற்பனை பண்டக சாலை மாவட்ட அளவில் மருந்து கிடங்கினை பராமரித்து வருவதுடன் மாவட்டத்தில் உள்ள  25  முதல்வர் மருந்தகங்களுக்கும் விநியோகம் செய்து வருகிறது. மிக முக்கியமான இந்தப் பணியின் மாவட்ட கட்டுப் பாட்டு அலுவலராக கூட்டுறவு இணைப் பதிவாளர் உள்ளார்.  திருவாரூரில் உள்ள மாவட்ட மருந்துக்கிடங்கிலும் (District Drugs Warehouse) சிறுநீரக குறைபாடு களுக்கான சோடியம் பைகார்பனேட் 500, மெட்டோப்ரோலால் 50, அம்லோ டோவின் 5 மி.கி. இருப்பில் இல்லை என்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது உண்மையாக இருந்தால் கூட்டு றவு இணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்ப டையில் இக்குறைபாட்டை தீர்க்க வேண்டும்.  

மல்டி வைட்டமின் கிடைக்க வில்லை

அதேபோல் இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கான டெல் மிஸ்டார்ட்டன் -உடன் அட்டோர்வாஸ் டாட்டின் கூட்டு மருந்துகள் கிடைக்க வில்லை. மெட்டப்ரொலால் 50 மி.கி. அப்லோட்பின்  5 மிகி மாத்திரைகள் சில மருந்தகங்களில் இல்லை. இரண்டு சக்தி அளவுகளில் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டி உள்ளது. பெரும்பாலான மருந்தகங்களில் மல்டி வைட்டமின் பி-காம்ளக்ஸ் (ஜென ரிக்)  கிடைக்கவில்லை.  மருந்தகங்கள் துவக்கப்பட்டு குறுகிய காலமே ஆகியுள்ளதால் இக்குறைபாடுகள் ஏற்படுவது இயற்கை. எனினும் இப்பிரச்சனை உடனே தீர்க்கப்படவேண்டும். கூட்டு றவு இணைப் பதிவாளர்கள் மாதம் ஒரு முறையாவது அந்தந்த மாவட்ட மருந்தக உரிமையாளர்களின் கூட்டத்தை காணாலி மூலமாகவாவது கூட்டி தேவைகள், அனுபவங்களை கேட்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும். அதன் முடிவுகள் அம லாக்கப்படவேண்டும்.  மருந்தக உரிமையாளர்கள் - விற்பனையாளர்களின் ஆர்வம், ஈடுபாடு, முனைப்பு பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். மருந்தக உரிமையாளர்களுக்கு, தேவை அடிப்படையில் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலமாக கடனுதவிகள் அளிக்கப்படவேண்டும். ¬¬தரமான மலிவான மருந்துகள் எப்போதும் தடையின்றி கிடைக்கும் என்ற நோயாளிகளின் நம்பிக்கையை உரு வாக்கி வலுப்படுத்த வேண்டும். இவைகள் மட்டுமே மிக நல்ல இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்யும்.