பிரமிக்கத்தக்க விடுதி, 17,800 நபர்க ளுக்கான படுக்கைகள், உணவுக் ்கூடம், விளையாட்டு வசதிகள், இன்னும் பல வசதிகள் என - உலகின் மிகப் பெரிய கைபேசி உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் கட்டிய விடுதிகளைப்பற்றி பேசுகிறார்கள். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இந்த விடுதியில் பெண்கள் மட்டுமே - குறிப்பாக திருமணமாகாத இளம் பெண்கள் மட்டுமே தங்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருமணமான பெண்களின் வேலை உரிமை
திருமணம் செய்து கொள்ளும் பெண் கள் அதிக விடுப்பு எடுப்பர்; குழந்தைப் பேறு ஒரு பிரச்சனையாக இருக்கும்; இந்து திருமண முறைப்படி அணியும் தாலி அல்லது ஆபரணம் அணிவது உற்பத்தித் தளத்தில் ஆபத்து விளைவிப்பதாக இருக்கும் என்பது உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து, திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதை தவிர்க்கின்றனர்.
தைவானில் உள்ள பாக்ஸ்கான் நிறுவன தலைமையகத்தில் பேசும் போது, திருமணம் செய்தோர் வேலை செய்ய தடை யல்ல எனக் கூறுகின்றனர். இந்தியாவிலும் 1961ல் நிறைவேற்றப்பட்ட சட்டம், 80 நாள் கள் பணி செய்த பெண் ஊழியர்கள், மகப்பேறு சட்ட பலன்களை அனுபவிக்க முடியும் எனக் கூறுகிறது. 2017ல் மேற் கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம், 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு பலன்களை அனுபவிக்க வழிவகை செய்கிறது. தனி யார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும், 10க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கும் இது பொருந்தும் என்றும் சட்டம் கூறுகிறது.
இந்தியாவில், பாக்ஸ்கான் நிறுவனம் 48,000 பேருக்கு வேலை அளித்து வருவதாகக் கூறுகிறது. ஆனால் மகப்பேறு விடுப்பு வழங்குவதற்குப் பதிலாக, திருமணம் செய்த பெண்களையே வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டோம் என மறைமுகமாக அமலாக்கிவருவது நியாயமா? பாக்ஸ் கான் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி லியு, திருமணம் செய்த 25 சதவீதம் பெண்கள் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறுகிறார். அந்த 25 சதவீதமா னோர் நிர்வாகப் பிரிவில் இருக்கக் கூடும்; உற்பத்திப் பிரிவில் இல்லை.
எனவே, பெண் தொழிலாளர்கள் திரு மணம் செய்தால் வேலை இல்லை என்று, பாக்ஸ்கான் நிறுவனம் பெண் தொழிலாள ரின் தனி உரிமையைப் பறிக்கும் போக்கை அனுமதிக்கக் கூடாது. இன்று சில தனி யார் நிறுவனங்கள் ஆண் தொழிலாளர்களு க்கு ‘தந்தைமை பேறு விடுப்பு’ என அனும திக்கும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகப்பேறு உரிமையை மறுக்கும் பாக்ஸ்கான் கொள்கை, அரசு களை மீறிய கொள்கையாக உள்ளது என்பதை உணர வேண்டும். பெண் தொழி லாளர் திருமணம் செய்தாலும் வேலை செய்யத் தடை இல்லை என்பதை நமது அரசுகள் வலியுறுத்த வேண்டும்.
‘கேம்ப் கூலி’ முறையா?
பாக்ஸ்கான் தன்னிடம் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தனது நிறுவனம் உரு வாக்கியுள்ள விடுதியில் தங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இது ஊழியர்கள் மீதான அக்கறை, நலன் சார்ந்து, பின் பற்றப்படுகிறதா? அல்லது கூடுதல் உற்பத்தி சார்ந்து பின்பற்றப்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பஞ்சா லைகளில் சுமங்கலி, தங்கமகள், திருமகள், மாங்கல்யம் போன்ற பெயர்களில் திருமண மாகாத பெண்களை வேலைக்கு அமர்த்து வதும், மூன்று ஆண்டுகளில் ஒரு குறிப் பிட்ட தொகையுடன் வெளியேற்றுவதும் அரங் கேறியது. சிஐடியு, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் பல்வேறு வடிவங்களில் நடத்திய போ ராட்டங்கள், அரசு மூலம் சில தலையீடு களை செய்ய வைத்தது. ஆனால் இன்றைய பஞ்சாலை முதலாளிகள், வெளி மாநிலத் தொழிலாளர்களை இந்த ‘கேம்ப் கூலி’ முறைக்கு தமிழ்நாட்டில் பயன்படுத்துவ தைக் காண முடியும். கேம்ப் கூலி முறை தனிமனித வாழ்வு முறைக்கு எதிரானது என்ற ஜனநாயக சிந்தனையை முதலீட்டா ளர்களிடம் அரசு வலியுறுத்த வேண்டி யுள்ளது. இதுபோன்று பாக்ஸ்கான் நிறு வனம் இளம் பெண் தொழிலாளர்களை தங்க வைத்து உழைப்பைச் சுரண்டுகிறதா எனவும் அரசு கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.
மூலதனம் குறி வைக்கும் நாடுகள்
சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஐக்கியநாடுகள் சபையினால் வழி நடத்தப் படுகிறது. அதேபோல் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு அமைப்பு (ஓஇசிடி) (Organisation for Economically Co Operation and Devel opment) என்ற அமைப்பும் உள்ளது. இரண்டு அமைப்புகளும் மனித உரி மைகள் மற்றும் தொழிலாளர் உரிமைக ளை இணைத்து வழிகாட்டுதல்களை அளித்துள்ளன. 38 நாடுகளைக் கொண்ட ஓ.இ.சி.டியில் இந்தியா, சீனா, தென் ஆப்பி ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இல்லை. ஆனால் ஒ.இ.சி.டி நாடுகளின் தொழில் முதலீடுகள் இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில்தான் அதிகம் உள்ளது. மனித வளம், உள்நாட்டுச் சந்தை ஆகியவை இந்த நான்கு நாடுகளிலும் அதிகம். இதை, பெரு முதலாளிகளின் மூலதனம் பயன்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மூலதனம் தனது விரி வாக்கத்திற்காக இது போன்ற நாடுகளை யும், உழைப்பாளர்களையும் தேர்ந்தெ டுக்கிறது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
ஓ.இ.சி.டியில் அங்கம் வகிக்கும் 38 நாடுகளும் பின்பற்ற வேண்டிய நெறிமுறை கள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மனித உரிமைகள் மீறப்படக் கூடாது; முதலீடு செய்யப்பட்ட நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்கவேண்டும் போன்றவை மிக முக்கியமானவை ஆகும். இந்த அடிப்படையில் தான் அங்குள்ள நிறு வனங்களுடன் நமது அரசுகள் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்கின் றனவா; சர்வதேச தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தும் பல்வேறு வகையிலான தொழிலாளர் உரிமைகள் பின்பற்றப்படு கின்றனவா என்பதைக் கண்காணிப்பதும், அமலாக்க வழிவகை செய்வதும் முதலீடு களைக் கவரும் அரசுகள் கவனம் கொள்ள வேண்டியவை ஆகும்.
வழிகாட்டுதல்களை மீறிய நிறுவனங்கள்
தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் இத்தகைய வழி காட்டுதல்களை மீறி உள்ளன. அரசுகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில் 2015ம் ஆண்டு பாக்ஸ்கான் தனது நிறுவனத்தையே மூடிச் சென்றது. மீண்டும் திறக்கும் போது, ஏற்கனவே வேலை இழந்த 1300 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இழப்பீடுக்கான சரத்து குறிப்பிட்டது. தற்போது பாக்ஸ்கான் பல்லாயிரம் தொழி லாளர்களுக்கு வேலை வழங்கி உள்ளது. அதில் மேற்கண்ட 1300 பேருக்கு மட்டும் இடமில்லை என்பது மிகக் கொடிய சிந்தனை ஆகும். சிஐடியு சங்கத்தில் இருந் தால் கிடைக்காது; திமுக தொழிற்சங்க மான எல்.பி.எப்க்குச் சென்றால் கிடைக்கும் எனக்கருதி 1300 தொழிலாளர்களும் எல்.பி.எப் உறுப்பினர்களாகி கோரிக்கை வைத்த போதும் பாக்ஸ்கான் நிறுவனம் வேலை கொடுக்கவில்லை என்பதை தமிழ்நாடு அரசு கவனிக்க வேண்டும்.
முதலீடுகளுக்கான பயணத்தில் கவனிக்க வேண்டியது
தமிழ்நாட்டின் முதல்வர் தற்போது முதலீடுகளை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். கடந்த காலத்தில் அதிமுக அரசும் இதை மேற் கொண்டது. பிரதமர் மோடி தனது ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் வகையில் பேசி வருகிறார். இந்தப் பய ணங்கள் மூலம் இந்தியாவில் முதலீடுகள் லேசாக அதிகரிக்கின்றன என்பதை மறுக்கவில்லை. சில ஆயிரம் வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. ஆனால், மனித உரிமைகள் மீறப்படுவதும் கடுமை யாக அதிகரிக்கிறது.
ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, தொழிலாளர் உரிமைகள் வலுவாக முன் வைக்கப்படும்போது, வேறு மாநிலங்க ளுக்குச் சென்று விடுவோம் என நிறுவன முதலாளிகள், அதிகாரிகள் மிரட்டுவது நடைபெறுகிறது. ஒரு நிறுவனத்தின் முன்னேற்றம் என்பது திறன் படைத்த தொழிலாளர்கள் மூலமே சாத்தியம். நீடித்தவளர்ச்சி என்பது உள்நாட்டுச் சந்தை மற்றும் மக்களின் வாங்கும் சக்தி உயர்வு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. தமிழ்நாடு இரண்டு வகையிலும் முன்னே றிய மாநிலமாக உள்ளது.
ஆனால், நிறுவனங்களின் இது போன்ற பேரங்கள் மனித உரிமை மீறலுக்கு உதவு வதாக மாறிவிடும் அபாயம் இருப்பதை உணரவேண்டும். முதலீடுகளும் தேவை; அதே வேளை மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம் போன்ற அடிப்படையான ஜனநாயக மாண்புகளும் பாதுகாக்கப் பட வேண்டும்.
மற்றொருபுறம், பிளாச்சிமடா உள்ளிட்ட பகுதிகளில் குளிர்பான நிறுவ னங்கள் அமைந்தபோது குடிநீர், நிலத்தடி நீர் வளம் ஆகியவை பாதிக்கப்படக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். இந்திய அரசியல் சாசனச் சட்டம், பிரிவு 21 முன் வைக்கும் வாழும் உரிமை குறித்த கருத்து மற்றும் பிரிவு 51 (A) முன்வைக்கும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை என்கிறது. இதில், அரசுக்கு முதல் பொறுப்பு இருப்பதை மறந்து விடக் கூடாது.
கட்டுரையாளர்:
சிஐடியு துணைப் பொதுச் செயலாளர்