விமானப் படையில் அதிகாரியாகலாம்
AFCAT (Air Force Common Admission Test) மூலமாகத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வ தற்கான அறிவிப்பு வெளியாகியுள் ளது. இந்தத் தேர்வை இந்திய விமானப் படை நடத்துகிறது. தொழில்நுட்ப மற்றும் தொழில் நுட்பமில்லாத பிரிவு களில் அதிகாரிகளாகப் பணிபுரிய இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அறிவிக்கை 2026ஆம் ஆண்டிற்கானது. தேர்வு முறை தற் போதிருந்து தொடங்கி விட்டாலும், தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலையில் பயிற்சி தொடங் கும். என்சிசி முடித்திருப்பவர்களுக்கு சிறப்பு நுழைவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு உள்ளது. மொத்தமுள்ள 284 காலிப் பணியிடங் களுக்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப் பிக்கலாம். இதில் 3 விமானிப் பணியிடங் களும், 156 தொழில்நுட்ப அதிகாரி களும், 125 தொழில் நுட்பமில்லாத அதி காரிகளும் தேர்வு செய்யப்படுகிறார் கள். விமானிப் பணியிடத்திற்கு 20 வயது முதல் 24 வயது வரையில் இருக்க வேண்டும். மற்ற இரு பிரிவில் அதிக பட்ச வயது 26 வரையில் இருக்கலாம். கல்வித்தகுதி : 12ஆம் வகுப்பு தேர்வில் கணிதப்பாடத்தை எடுத்து, அதில் குறைந்தது 50% எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு இளநிலைப்பட்டமும் பெற்றிருக்கவேண்டும். உடற்தகுதி : 1.6 கிலோ மீட்டர் தொலைவை 10 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். அதோடு, 10 புஷ் அப்ஸ் (Push Ups) மற்றும் 3 சின் அப்ஸ் (Chin Ups) எடுக்க வேண்டும். விமா னப்படை நடத்தும் கயிறு ஏறுதல் மற்றும் நீச்சல் போட்டியில் குறித்த நேரத்தில் செய்து காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணைப்புக் கும், கூடுதல் விபரங்களைப் பெறவும் www.afcat.cdac.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 01.07.2025 ஆகும்.
தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியிட நிரப்புதல்
சென்னை தரமணியில் உள்ள தேசியத் தொழில்நுட்ப ஆசிரி யர் பயிற்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முது நிலை நூலகர், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர், தொழில்நுட்ப அலுவலர், இந்தி மொழிபெயர்ப்பாளர், தொழில்நுட்ப உத வியாளர், முதுநிலை செயலக உதவியா ளர், இளநிலை செயலக உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் (புகைப் படக்கலைஞர்) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித் தனியான கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு தரப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதி முறைகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி தரப்படும். தேர்வு முறை : தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வும், திறன் சோதனையும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்ட ணத்தில் இருந்து விலக்கு உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https: //www.nittrc.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசித் தேதி 24.06.2025 ஆகும். இந்தத் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, நிரப்பப்பட்ட படிவத்தை பிரிண்ட் எடுத்து தேவையான சான்றிதழ்களில் நகல்களை இணைத்து 09.07.2025 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Director, National Institu tute of Technical Teachers Training and Research, Taramani, Chennai - 600113.
அப்ரண்டிஸ் வாய்ப்பு
பொதுத்துறை பொதுக்காப்பீ ட்டு நிறுவனமான “நியூ இந்தியா அஸ்யூரன்சில்” பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் (தொழில் பழகுநர்) வாய்ப்பு வந்துள்ளது. உதவித்தொகையுடன் ஓராண்டுக்கு இந்தப்பயிற்சி வழங்கப் படும். பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள வர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்வார்கள். மொத்தமுள்ள 500 இடங் களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதி யுடன் முன்பதிவு செய்ய வேண்டும். பின் னர் www.newindia.co.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனத்தின் இணையதளத் தில் கூடுதல் விபரங்கள் உள்ளன.
விண்ணப்பித்துவிட்டீர்களா?
தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பப்பணி களில் உள்ள பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளி யாகியது. 615 ஊழியர்களைத் தேர்வு செய்கிறார்கள். இந்தத் தேர்வுக்கு விண்ணப் பிப்பதற்கான கடைசித் தேதி 25.06.2025 ஆகும். இது குறித்த விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.