articles

களைச்செடிகள் அகற்ற நிதி இல்லாமல் தவிக்கும் வனத்துறை -ஜே ஷேக் அமின்-

பார்த்தீனியம் எனப்படும் அயல் நாட்டு களைச் செடியானது கடந்த  1950 ஆம் ஆண்டுகளில் கோதுமை யுடன் கலந்து இந்தியாவிற்குள் ஊடுருவியது. இச்செடிகள் தமிழ கத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன. இந்த தாவரத் தால் மனிதர்களுக்கு சுவாச கோளா றுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்து கின்றன. உடல் மீதுபடும் போது  ஒருவிதமான அரிப்பு ஏற்படுகிறது.  பார்த்தீனியம் செடியின் விதைகள் காற்றில் பரவி செழித்து வளர்கின் றன. 

இந்த செடி வளரும் இடங்களில்  வேறு எந்த தாவரம், புற்கள் போன் றவை வளருவதில்லை. இதனை உட்கொள்ளும் கால்நடைகளின் பாலில் கசப்பு தன்மை உண்டாகி றது. 

இந்த பார்த்தீனியம் செடிகள் நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் அபரீதமாக காணப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தின் தெற்கு பகு திகளில் பரவியுள்ளன. இதே போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத் தில் அழகுத் தாவரமாக வளர்க் கப்பட்ட லேண்டானா எனப்படும் உன்னி செடிகள் நீலகிரி வன கோட் டத்துக்குட்பட்ட குந்தா, குன்னூர்  வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகள், சாலையோர பகுதி களை அதிகளவு ஆக்கிரமித்துள் ளது. இவற்றால் தாவர உன்னிக ளான மான், காட்டெருமை, யானை  போன்றவற்றிற்கும், வளர்ப்பு கால் நடைகளுக்கும் உணவு பற்றாக் குறை ஏற்படும் சூழல் உருவாகி யுள்ளது. மேலும், தற்போது பெய்து  வரும் கனமழையால் பார்த்தீனி யம், லேண்டானா ஆகியவை செழித்து வளர்ந்துள்ளன. குறிப் பாக, உன்னிசெடிகளில் உன்னி  பழங்கள் அதிகளவு காய்த்துள் ளன. இவை காய்ந்து நிலத்தில் விழும் போது மீண்டும் புதிதாக செடி  முளைக்க கூடிய நிலையும் உள் ளது. உதகையிலிருந்து மஞ்சூர் சாலையில், உதகை அருகே 10  கி.மீ தொலைவில் உள்ள பால கொலா பகுதியிலேயே இந்த களைச் செடிகள் வளர்ந்துள்ளன.

இதுகுறித்து உள்ளூர் பொது மக்கள் கூறியதாவது, இந்த களைச் செடிகள் கடந்த 10 ஆண்டுகளாக தான் வளர தொடங்கியுள்ளன. இவை வேகமாக பரவி வருவ தால், மேய்ச்சல் நிலப்பரப்பு குறை கிறது. இதனால், கால்நடைகளுக் கான தீவனம் குறைகிறது. மேலும், தேயிலை தோட்டங்களிலும் ஊடு ருவதால் தேயிலை செடிகளும் பாதிப்படைகின்றன. எனவே, லேண்டானா மற்றும் பார்த்தீனியம்  செடிகளை அகற்ற தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர். 

சோலைகள் மீட்பு சூழலியல் வல்லுனர் வசந்த் பாஸ்கோ கூறும்  போது, உன்னிச்செடிகள் கடந்த ஓராண்டாக இவற்றின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளின் தட்பவெப்பநிலை அதிகரித்தது ஒரு காரணம். இச்செடிகள் சாலை யோரங்கள் மற்றும் பராமரிக்கப் படாத தேயிலை தோட்டங்களில் வளர்ந்துள்ளதால் தற்போதைக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. இவை குந்தா பகுதிகளில் உள்ள சோலைகளை ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சோலைகளை ஆக்கிரமித்தால், வன விலங்குகளுக்கு உணவு பற் றாக்குறை ஏற்படும்’ என்றார். 

இந்த களைச்செடிகள் அகற்ற போதுமான நிதி இல்லாமல் வனத் துறை தவிக்கிறது. வனத்துறை  மூலம் அந்நிய தாவரங்கள் அகற் றும் திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது. இதற்கு போது மான நிதி இல்லாததால், குறிப் பிட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள கற் பூரம் மற்றும் சீகை மரங்கள் அகற் றும் பணி நடந்து வருகிறது. இதற்கு தான் வனத்துறை கவனம் செலுத்தி  வருகிறது. முதுமலையை தவிர பிற இடங்களில் பார்த்தீனியம் மற்றும் உன்னி செடிகள் அகற்றும் பணி நடக்கவில்லை.

பல்கிப்பெரும் பார்த்தீனிய செடி களை அகற்ற தமிழக அரசு போது மான நிதியை ஒதுக்கிடு செய்ய  வேண்டும் என்றும், இவற்றை  அழிப்பதற்கு வனத்துறையினர் கூடுதலான அக்கறை செலுத்த  வேண்டும் என்பதே சூழலியலாளர் களின் கோரிக்கையாக உள்ளது.