கேரளாவில் ‘நவ கேரள சங்கமம்’ என்ற பெயரில், இடது ஜனநாயக முன்னணி அரசு, மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியை துவக்கி வைத்த முதல்வர் பினராயி விஜயன், தமது அனுபவங்களை இக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார்:
‘புதிய கேரளம்’ மக்கள் சங்கமம் துவக்க விழா, மலப்புரம் மாவட்டம் திரூரில் நடந்தது. அங்கு பங்கேற்ற பார்வையாளர்கள் ஒரு முழு தேசத்தின் பிரச்சனைகள், தேவைகள் மற்றும் மகிழ்ச்சி களைப் பகிர்ந்து கொள்ளும்தளமாக மாற்றினார்கள். மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘புதுகேரள’ சங்கமத்தின் முதல்நாளில் திரூரில் நடைபெற்ற காலைக் கூட்டம், மக்கள் பங்கேற்பு மற்றும் கருத்துரையாளர் களால் சிறப்பிக்கப்பட்டது.
மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் தேவைகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வாக ‘புதிய கேரள சங்கமம்’ மாறிவரும் அனுப வத்தை திரூர் வழங்கியது.
ஆண்டுதோறும் முன்னேற்ற அறிக்கை
ஜனநாயக நாட்டில் மக்களே இறையாண்மை உடையவர்கள். அரசாங்கம் என்ன செய்தது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்கி முன்னேற்ற அறிக்கை (Progress Report) வெளியிடுவதை இடது ஜனநாயக முன்னணி அரசு கொள்கையாக கொண்டுள் ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விரல்விட்டு எண்ணத்தக்க சிலவற்றைத் தவிர மற்றவற்றை நடை முறைப்படுத்தி 2016ஆம் ஆண்டு ஆட்சிக் காலம் நிறை வடைந்தது. அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அந்த சாதனைகள் கேரள மாதிரியாக மிளிர்கி றது. 2021இல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நிர்வா கத்தை விரைவாகச் செயல்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டமிட்டது.
நல்லாட்சியின் பலன்கள் மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்றடைய வேண்டும். வளர்ச்சி அனைத்து தரப்புக்கும் சென்றடைய வேண்டும். சமூக நீதியின் அடிப்படையில் அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் பார்வை. அதைச் செய்ய, ஏற்கனவே உள்ள நிறைய விச யங்கள் திருத்தப்பட வேண்டும். அதன் ஒரு பகுதி யாக, தாலுகா அளவிலான குறை தீர்க்கும் முகாம் கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் மண்டல அளவிலான ஆய்வுகள் நடத்தப்பட்டன.
வெகுமக்கள் விவாதம்
ஜனநாயகத்தின் படிநிலைகளை வளப்படுத்தவும், அதிகாரமளிக்கவும் இந்த வெகுமக்கள் விவாதத்தை மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் அங்கீகரித்து வருகின்ற னர். அரசாங்கத்தின் மீதான அந்த அங்கீகாரத்தின் பிரதிபலிப்பும் நம்பிக்கையின் பிரதிபலிப்பும் திரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. உறுதி யான மக்கள் பிரச்சனைகள் முதல் தனிப்பட்ட குறைகள் வரை அங்கு எழுப்பப்பட்டன. அங்கு எழுப்பப்பட்ட உயர்வான கருத்துகளும் கோரிக்கைகளின் பன்முகத்தன்மையும் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
வெற்றிலையை விவசாய வகைமையில் சேர்க்க வெற்றிலை விவசாயி அப்துல் ஹமீது வேண்டு கோள் விடுத்தார். அரசின் தலையீட்டால் திரூர் வெற்றி லைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாகவும், பயிர் காப்பீட்டில் வெற்றிலையும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பதில் அளிக்கப்பட்டது. இயற்கைச் சீற்றங்களின் போது வெற்றிலைக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள் ளது. காப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திரூர், திரூரங்காடி ஆகிய தாலுகாக்களை பிரித்து, தானூரை மையமாக கொண்டு புதிய தாலுகா அமை க்க வேண்டும் என பேராசிரியர் பாபு கேட்டுக் கொண் டார். மாவட்டத்தில் விளையாட்டுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். மேலும், தானூரில் விளையாட்டு அகாடமி, உள்விளையாட்டு மற்றும் வெளிப்புற அரங்கங்கள் தொடங்க வேண்டும் என்றார்.
தானூர் மோர்யாகாப்பில் உப்பு நீர் பயிர்களை நாசம் செய்வதாகவும், இதை தடுக்க பூரப்புழயில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் தானூர் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வேண்டுகோள் விடுத்தார். கனோலி கால்வாய் மாசுபட்டுள்ளது. அதை சுத்தம் செய்து சுற்றுலாவுக்கு பயன்படுத்த வேண்டும். தானூர் அம்பேத்கர் காலனியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இதையெல்லாம் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பதில் அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளியின் மகிழ்ச்சி
மாற்றுத்திறனாளியும், கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவருமான அபுபக்கர் சித்திக் அக்பர் கூறுகையில், கோவிட் -19 பெருந் தொற்று காலத்தில் அவர் சிக்கலில் இருந்ததாகவும், அப்போது இந்த அரசாங்கம் தங்குமிடம் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கியதாகவும் தெரி வித்தார். புலம்பெயர்ந்தோரின் பயண இன்னல்க ளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அவர்களை விமான நிறுவனங்கள் சுரண்டுவதாகவும் புலம் பெயர்ந்தவரான மடபத் அபுபக்கர் தெரிவித்தார். விமான சேவைகளை தொடங்குவதில் கேரள மாநிலம், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டு நடவ டிக்கை எடுக்கிறது என்றும், ஒன்றிய அரசின் பய னுள்ள தலையீடு தேவை என்றும், துரதிர்ஷ்டவசமாக இது நடக்கவில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.
ஆதரவற்றோர் மற்றும் நோயுற்றோருக்கு மாநில அரசு அளித்து வரும் ஆதரவு மிகப்பெரியது என்று மருத்துவப் பணியாளர் ரமேஷ் மேனன் கூறினார். தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும், ஆனால் அரசு அளித்த ஆதரவு தன்னை அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்ததாகவும் அவர் கூறினார்.
கோழிக்கோடு பாரூக் பயிற்சிக் கல்லூரி முதல்வர் முகமது சலீம் கூறுகையில், சிறு வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட மாணவர்களை கண்டறிந்து ஊக்குவிக்க, மாவட்டம் தோறும் புதிய திறன் ஆய்வு மையம் ஏற்படுத்த வேண்டும். பொதுக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சுகாதார சுற்றுலா
சுகாதார சுற்றுலாவை சந்தைப்படுத்த அரசு மட்டத்தில் அதிக திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று டாக்டர். அருண் ராஜன் கருத்து தெரிவித்தார். சுகாதார சுற்றுலாத் துறையில் தனியார் துறையினர் அதிகம் செய்ய முடியும் என்றார். மேலும், ஆயுர்வேத துறையில் பல்நோக்கு சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) வசதிகளை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சுகாதார சுற்றுலாவை மேம்படுத்த அரசு அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என பதிலளிக்கப்பட்டது.
விரிவான வளர்ச்சியை வலுப்படுத்தும் அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கு அனைத்து ஆதரவை யும் வழங்குவதாக ஹசீப் தங்ஙள் கூறினார். அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும்; கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு வளர்ச்சி க்கு ஆதரவு உண்டு என்றார் அவர். அரசியல் வேறு பாடுகள் இருந்தாலும் ஜனநாயக முறையில் தேர்ந் தெடுக்கப் பட்ட அரசாங்கம் நடத்தும் நிகழ்ச்சியை புறக்கணிப்பதில் எந்த பொருளும் இல்லை. மேலும், திரூரில் வசிப்பவர் என்ற முறையில், அதிவேக ரயில் சேவை நீண்ட கால தேவையாக உள்ளது என்றும் அவர் விளக்கினார்.
திரூர் வளைகுடா மார்க்கெட் வியாபாரிகளை தொழிற்சங்கங்களும் ஜிஎஸ்டி அதிகாரிகளும் எதிரிகளாக கருதுவதாகவும், வர்த்தக நிறுவனங்க ளின் உரிமத்தை புதுப்பிக்காமல் அதிகாரிகள் தொந்த ரவு தருவதாகவும் கூறினார்.
கேரளத்தில் தொழில் தொடங்க புலம்பெயர்ந்தோ ருக்கு சிறப்பு முன்னுரிமையும் வசதிகளும் உள்ள தாக புலம்பெயர்ந்த தொழிலதிபர் சமீர் ஹாஜிக் தெரிவித்தார். கடல் சீற்றம் மிகுந்த பொன்னானியில் கடல் சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கடலோர பகுதியில் அரசு உதவியுடன் எம்.பி.பி.எஸ்., படித்து மாநிலத்திலேயே முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்ற டாக்டர். சுல்பத் கருத்துத் தெரிவித்தார். காலாபூட் தொழிலாளியும் விவசாயியு மான குஞ்ஞு மொய்தீன் இதற்கு பதிலளித்து பேசுகை யில், காலாபூட் விவசாயிகளுக்கு அரசு அனைத்து உதவி களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது என்றார்.
மலபார் தேவஸ்வம் போர்டின் கீழ் உள்ள கோவில் ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், கோவில்க ளின் பங்களிப்பு தொகையை உயர்த்தவும் மனோஜ் எம்பிராந்திரி வேண்டுகோள் விடுத்தார். கோயில் ஊழியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் ஒரு பகுதியாக மலபார் தேவஸ்வம் மசோதா கொண்டு வரப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. எழுப்பப்படும் ஒவ்வொரு பிரச்சனையிலும் பின்தொடர்தல் உறுதி செய்யப்படுகிறது. நவகேரள சங்கமத்தின் பயன் இத்தகைய கூட்டங்களில்தான் முழுமை பெறுகிறது.
தேசாபிமானியில் இருந்து தமிழில் : சி.முருகேசன்