articles

img

கர்நாடகத் தேர்தல்: கள நிலவரம் என்ன? - விஹார் அகமது சயீத்

2018-இல் காங்கிரஸ் 38.14  சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும்,  80 இடங்களை மட்டுமே வென்றது. மாறாக பாஜக 36.35 சதவீத வாக்குகளைப்  பெற்று 104 இடங்களைக் கைப்பற்றியது. ஜேடி(எஸ்) வடக்கு மற்றும் மத்திய கர்நாடகாவில் போதுமான ஆதரவுடன் கடலோர கர்நாடகாவில் செல்வாக்கு இல்லாமல் 18.3 சதவீத வாக்குகளுடன்  37 இடங்களை வென்றது.

நாட்டில் அனைத்து மாநில தேர்தல்களும் முக்கியமானவை என்றாலும், வர விருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த காரணங்களில் முத லாவதாக இருப்பது, கர்நாடகாவில் பாஜக ஆட்சிய மைத்ததிலிருந்து இப்போதுதான் ஆழம் தெரியாமல் காலை விட்டுள்ளது. ஏனெனில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நடப்பு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவில்லை. இரண்டா வதாக கர்நாடகா காங்கிரசின் மிகப்பெரிய தலைவ ரும்,  75 வயதான முன்னாள் முதல்வருமான சித்தரா மையா இதுவே தனது கடைசித் தேர்தல் என்று அறி வித்துவிட்டார். ஓய்வு பெறுவதற்கு முன்பு காங்கிரஸை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சித்தராமையா எதிர்பார்க்கிறார். மூன்றாவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று தெரி வித்துள்ளார்.  இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலிலும் தீவிர தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படு கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு அடுத்து நடப்பாண்டில் (2023-இல்) தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள  நிலையில், கர்நாடகாவைப் போலவே மேற்குறிப்பிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கடுமையான போட்டியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதே சம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல்கள் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் அரையிறுதி ஆட்டங் கள் என்று கூட குறிப்பிடப்படுவதால் கர்நாடக தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், பாஜக போட்டி

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பிற மாநிலங்களில் அக்கட்சியின் வாய்ப்புகளுக்கு ஊக்க மளிக்கும்; எதிர்க்கட்சிகளின் நலிவுற்ற மன உறுதியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள சில மாநி லங்களில் கர்நாடகாவும் ஒன்று. தென்னிந்தியாவில், தான் ஆளும் ஒரே மாநிலமான கர்நாடகாவை பாஜக தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், 2023-ஆம் ஆண்டில் நடைபெறும் இதர சட்டமன்ற தேர்தல் மற்றும் வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு கர்நாடக தேர்தல் வெற்றியை பிரச்சாரப் பொருளாக பாஜக பயன்படுத்தும்.

“ஆபரேஷன் கமலா” 

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஒரு போதும் தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது இல்லை. 2008-ஆம் ஆண்டு முதல்முறையாக கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும், 6 சுயேட்சை எம்எல்ஏ-க்களின் ஆதரவால் அரியணையில் அமர்ந்தது. 6 சுயேச்சை எம்எல்ஏ-க்களை ‘இழுத்த’ நிகழ்வுதான் “ஆபரேஷன் கமலா” (ஆபரேஷன் தாமரை) ஆகும். கடந்த 15 ஆண்டுகளாக இந்த “ஆபரேஷன் கமலா” மாதிரியை பல மாநிலங்களில் பாஜக வெற்றிகரமாகப் (சூழ்ச்சிகரமாக) பயன்படுத்தியுள்ளது.

பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தும் எடியூரப்பா

2013-இல் பாஜகவை விட்டு வெளியேற முன்னாள் முதல்வர் எடியூரப்பா முயற்சித்த பொழுது அவரது முக்கியத்துவம் தெளிவாகத் தெரிந்தது. காரணம், அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சி அமைத் தது. 2018ஆம் ஆண்டில் எடியூரப்பா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 224 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 104 இடங்களைப் பெற்று பாஜக தனிப்பெரும் கட்சி யாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க போதுமான  உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லை. தேர்த லுக்குப் பின்பு உருவான காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்)  கட்சிகளின் பலவீனமான கூட்டணி, பாஜக ஆட்சிக்கு வருவதற்கான முயற்சிகளை முறியடித்தது. எனினும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அடிக்கடி சல சலப்புகள் ஏற்பட்டு, தள்ளாடிக் கொண்டிருந்த காங்கி ரஸ் - ஜேடி(எஸ்) கூட்டணி அரசை 16 எம்எல்ஏ-க்களை கவர்ந்து இழுத்து,பாஜக கவிழ்த்தது. காங்கிரஸ் - ஜேடி(எஸ்) கட்சிகளில் இருந்து தாவிய எம்எல்ஏக்கள் அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற னர். இந்த சம்பவம் 2019-இல் எடியூரப்பாவின் தலைமை யில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்தது. எடியூரப்பா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு கள் எழுந்தன. அவரது மகன் பி.ஒய்.விஜயேந்திரா, மாநில பாஜகவில் ஒரு சக்திவாய்ந்த குழுவிற்கு தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் மாநிலத்தில் ஆக்ரோஷமான இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு எடியூரப்பா ஒரு தடையாக இருந்தார் என்பதை மாநி லத்தின் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வெளிக் காட்டின. ‘லிங்காயத்’ சமூக ஆதரவு எனும் அடித் தளத்தில் கர்நாடகாவில் பாஜகவை வெற்றிகரமாகவும் தனித்தும் கட்டமைத்த ஒரு அரசியல்வாதியாக எடி யூரப்பா, தனது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கருணைக்கு கடன்பட்டிருக்க வில்லை. வலதுசாரி இந்துத்துவா வட்டங்களில் வெறித் தனமான கூறுகளை அவரால் கட்டுப்படுத்த முடிந்தது மிக முக்கியமானதாக இருந்ததால் எடி யூரப்பா 2021-இல் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அதே ‘லிங்காயத்’ சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டார்.  எடியூரப்பா ஓரங்கட்டப் பட்ட நிலையில், கடந்த ஆண்டு (2022) பாஜகவின் நாடாளுமன்ற அலுவல் குழு மற்றும் மத்திய தேர்தல் குழுவின் ஒரு பகுதியாக நியமிக்கப்பட்டு மீண்டும் அரசியல் களத்திற்கு அழைத்து வரப்பட்டார். எனினும் மாநிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க சமூகமான லிங்காயத்துகள் ஒட்டு மொத்தமாக பாஜகவின் பின்னால் அணிதிரள்கி றார்களா என்பது குறித்து தற்போது பாஜக மிகவும் கவலை கொண்டுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் மைசூர் மாவட்டத்தில் உள்ள  வருணா தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிட வேண்டும் என்று பாஜக உயர்மட்டக் குழு கூறியது. பாஜகவின் இந்த முடிவை,  விஜயேந்திரா ஷிவ மோகா மாவட்டத் தில் உள்ள தனது ஷிகாரிபுரா தொகுதியில் போட்டி யிடுவார் என எடியூரப்பா அறிவித்து உறுதி செய்தார். எடியூரப்பாவின் மறுப்பு, லிங்காயத் சமூகத்தினரி டையே பாஜகவின் பரந்த ஆதரவைக் குறைக்கக் கூடும் என்று விளக்கப்படுகிறது.

லிங்காயத் தலைவர்  ஆதரவு மறுப்பு

இந்த நிலையில், ஜகதிக லிங்காயத் மகாசபாவைச் சேர்ந்த ஜி.பி.பாட்டீல், “இந்த முறை லிங்காயத் வாக்குகள் பிளவுபடும் என்று நான் உணர்கிறேன். ஒட்டு மொத்த லிங்காயத் சமூகமும் எப்போதும் பாஜகவுடன் தான் இருக்கிறது என்பது உண்மையல்ல. லிங்காயத்து களில் மிகப்பெரிய உட்பிரிவாக இருக்கும் பஞ்சம்சாலி கள் மட்டுமே பாஜகவை ஆதரிப்பவர்கள். பஞ்சம்சாலி போராட்டத்திற்கு பிறகு லிங்காயத்துகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தும் பசவராஜ் பொம்மையின் முயற்சி வெறும் தேர்தல் வித்தைதானே தவிர, இது நடைமுறைப்படுத்த முடியாதது” எனக் கூறி, பாஜக வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

‘ஒக்கலிகா’ கோட்டையை குறிவைக்கும் பாஜக

2018 தேர்தலின் முக்கிய அம்சங்களில் ஒன்று லிங்காயத் பிரிவை தனி மதமாக உருவாக்க பரிந்து ரைத்து, லிங்காயத்துகளை கவர சித்தராமையா மேற் கொண்ட முயற்சி ஆகும். மற்றொரு முக்கிய அம்சம்  என்னவென்றால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மீண்டும் உயருவதைக் கண்டு நடுங்கிய பாஜக, மதச் சார்பற்ற ஜனதாதள கட்சியின் கோட்டையாக அதா வது, ‘ஒக்கலிகா’ சமூகம் நிறைந்து இருக்கும் தெற்கு  கர்நாடகாவை கைப்பற்ற தற்போது தீவிர முயற்சி செய்து வருகிறது. கடந்த 2018 தேர்தலில் ஜேடி(எஸ்) 37 இடங்களை வென்றது. இதில் 31 இடங்கள் தெற்கு  கர்நாடக பகுதியிலும், மற்ற 6 இடங்கள் பிறபகுதியி லும் உள்ளவையாகும்.  1999-ஆம் ஆண்டு ஜேடி(எஸ்) கட்சி உருவானதில் இருந்து தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது ‘ஒக்கலிகா’ சாதி மக்களுக்கு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா மறுக்க முடியாத தலைவராகவும், அவரது மகன் குமாரசாமி அந்த சமூக நலன் சார்ந்த பேச்சாளராகவும் உள்ளனர். ஜேடி(எஸ்) தேவகவுடா வின் குடும்பத்தை மையமாகக் கொண்ட வாரிசு அரசியல் கட்சியாக உள்ளது. என்றாலும், கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே விசுவாசமான ஆதரவு தளத்தை தெற்கு கர்நாடகாவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த கர்நாடகா பகுதியில் பிளவுபட்ட சாதி அடிப்படையிலான அரசியல் மிக தீவிரமாக உள்ளது. அதாவது லிங்காயத்துகளுக்கும் ஒக்கலி கர்களுக்கும் இடையிலான போட்டி, நீண்ட காலமாக நீடித்து வருகிற போட்டியாக கருதப்படுகிறது. 1950 முதல் 1970 வரை காங்கிரசுக்குள் இருந்த அதிகாரப் போட்டிகளின் பின்னணியில் லிங்காயத்துகளுக்கும், ஒக்கலிகர்களுக்கும் இடையேயான பகைமை என்பது ஒரு பிளவு இயக்கம் போன்று உருவானது. இந்த மோதல் சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து தேர்தல்களிலும் எதிரொலித்தே வந்துள்ள நிலையில், நடைபெறவிருக்கும் தேர்தலிலும் பாஜக மற்றும் ஜேடி(எஸ்) ஆகியவை முறையே லிங்காயத்து கள் மற்றும் ஒக்கலிகர்கள் ஆகிய இரு ஆதிக்க சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதனை நன்கு உணர்ந்த பின்பே தெற்கு கர்நாடகா வின் ஒக்கலிகா சமூக ஆதிக்கம் நிறைந்த கிராமப்புற உள்பகுதிகளை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தெற்கு கர்நாடகாவில்  பாஜகவிற்கு வாய்ப்பு இல்லை

ஆனால் உண்மை கள நிலவரம் வேறாக உள்ளது என்பதை எழுத்தாளர் சுகதா ஸ்ரீனிவாசராஜு (பர்ரோஸ் இன் ஏ பீல்ட்: தி அன் எக்ஸ்ப்ளோர்டு லைப்  ஆப் எச்.டி) விளக்குகிறார்: “தெற்கு கர்நாடக பிராந்தி யத்தில் பாஜகவின் வாய்ப்புகள் குறித்து தேவகவுடா நம்பிக்கையுடன் இல்லை. காவிரி ஆற்றுப்படுகையின் பிதாமகனாக தேவகவுடா பார்க்கப்படுகிறார். இது அவர் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் என்ப தற்காக மட்டும் அல்ல; கடந்த ஆறு தசாப்தங்களாக (60 ஆண்டுகள்) அவர் இந்த பிராந்தியத்தில் செய்த  பணியின் காரணமாக பார்க்கப்படுகிறார். இந்தியா வில் உள்ள மற்ற பிராந்தியக் கட்சிகளைப் பார்த்தால் ஒவ்வொரு தேர்தலிலும் அவற்றின் வாக்கு விகிதம் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆனால் ஒரு கட்சி (ஜேடிஎஸ்)  தொடர்ந்து 20 சதவீத வாக்குகளைப் பெறுவது அபரிமித மானது; மக்களின் நன்றிக் கடனுக்குச் சான்றாகும். வடக்கு மற்றும் மத்திய கர்நாடகாவில் லிங்காயத் ஆதரவு தளத்தைத் தவிர, பாஜகவிற்கு சில பிற் படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. கர்நாடகாவின் மூன்று கடலோர மாவட்டங்களிலும் பாஜக அரசியல் ஆதரவைப் பெற்றுள்ளது என்றா லும், தெற்கு கர்நாடக பிராந்தியத்தில் ஒக்கலிகா வாக் காளர்களின் மனநிலையை பாஜக உண்மையில் புரிந்து கொள்ளவில்லை” என அவர் கூறுகிறார்.

காங்கிரசுக்கு வாய்ப்பு  அளிக்கும் எடியூரப்பா

கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான உண்மையான வாய்ப்பு காங்கிரஸுக்கு உள்ளது. காரணம், பாஜக மீதான வலுவான ஊழல் குற்றச் சாட்டுகள் மற்றும் மந்தமான மாநிலத் தலைமை போன்றவை பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை பல வீனப்படுத்தியுள்ளது.  எடியூரப்பாவின்  ஓரங்கட்டல், லிங்காயத் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் எடி யூரப்பாவும் பாஜகவுக்கு எதிராக செயல்படுவது காங்கிரசுக்கு சாதகமாக அமையலாம்; ஆனால் அதே வேளையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுத் தளம் மாநிலம் முழுவதும் சிதறிக் கிடக்கிறது. அதாவது அதிக வாக்குப் பங்கைப் பெற்றாலும் பெரும்பான்மை யுடன் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒக்கலிகா சமூகம் இன்னும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் உறுதியாக உள்ளது என்பதால் காங்கிரஸ், தொங்கும் நிலையே ஏற்படும்.

சிதறும் இந்துத்துவா ஆதிக்கம்

கர்நாடகாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் கடலோர கர்நாடகத்தில் பாஜகவுக்கு சாதகமாக இருப்பது  இந்துத்துவா மதவெறியால் உருவாக்கப் பட்ட பலம் தான். மேலும் மாநிலத்தின் மற்ற பகுதி களை விட அதிக முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட கடலோர கர்நாடகத்தில் இந்துத்துவா மதவெறி மூலமான அணி திரட்டல் தீவிரமாக உள்ளது. கடந்த 2018 தேர்தலில் இந்த பிராந்தியத்தில் இருந்து 19 இடங்களில் 17 இடங்களை பாஜக கைப்பற்றியது. கடலோர கர்நாடகாவை அடித்தளமாக கொண்டு செயல்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த அரசியல் அவதாரமான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா செயல்படுகிறது. இது முஸ்லிம்கள் மத்தியில் பல மான ஆதரவைப் பெற்றுள்ளது. இது பாஜகவிற்கு சிக்கலை உருவாக்கலாம்.

40 சதவீத கமிஷன் கட்சி 

கடந்த காலங்களில் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், பசவராஜ்  பொம்மையின் ஆட்சியில் பாஜக மீது குற்றச் சாட்டுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம், பாஜக சட்டமன்ற உறுப் பினர்கள் ‘வழக்கத்திற்கு’ மாறான கமிஷன் தொகையை கோருவதாக குற்றம் சாட்டியது. முதல்வ ராக பதவியேற்ற உடனேயே முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டமான காவேரியில் உள்ள ஹங்கல் தொகுதி இடைத்தேர்தலில், பொம்மை யால் பாஜகவுக்கு வெற்றியை உறுதி செய்ய முடிய வில்லை. பொம்மை ஒரு  பலவீனமான முதல்வர் என்ற பிம்பத்தின் ஆரம்பம் இது. அதுமட்டுமல்ல, மதவெறிப் பிரச்சாரத்தின் முகமாக மாற்றிக் கொள்வ தில் முனைப்பு காட்டினார். மத நல்லிணக்கத்தை கண்டுகொள்ளாமல் இந்துத்துவா வலதுசாரிகளின் வன்முறைச் சொல்லாடல்களும் செயல்களும் சுதந்திர மாக இயங்குவதை உறுதி செய்தார். 2021 முதல்  கர்நாடகாவில் மத சிறுபான்மையினரை குறிவைத்து பல சம்பவங்கள் நடந்தாலும், சமீபத்திய இரண்டு  நிகழ்வுகள் மதவெறியை தூண்டும் நிகழ்வுகளாக இருந்தன. முதலில் பொம்மை அரசு முஸ்லிம்க ளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இரண்டாவதாக பசுவதைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து தெற்கு கர்நாடகாவில் உள்ள ராமநகராவில் ஏப்ரல் 1 அன்று முஸ்லீம் இளை ஞரின் மரணம் ஆகிய இரண்டும், சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்ட கடுமையான சம்பவங்கள் ஆகும்.

இத்தகைய பின்னணியில், எடியூரப்பா, ஓரங் கட்டப்பட்டுள்ள நிலையில், மந்தமான மாநிலத் தலைமையுடன் களமிறங்கும் பாஜக மோடி, அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரின் பிரச்சாரத்தை  மட்டுமே நம்பியுள்ளது. மே 10 தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள மூன்று முக்கிய போட்டியாளர்களுக்கும் இது கடினமான மற்றும் வெப்ப மான கோடையாக இருக்கப் போகிறது.

பிரண்ட்லைன் (மே 5, 2023)
தமிழில்: எம்.சதீஸ்குமார்