articles

img

கோவை தொழிலார்களின் குரல்கள்... - சின்ராஜ்

10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிக அளவில் கோலோச்சி வந்தன. ஜாப் ஆர்டர்கள் மூலம் நல்ல வருவாய் சிறு குறு தொழிலாளர்கள் பெற்று வந்தனர். ஆனால் தற்போது முறையற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பால் மூலப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச சந்தை நிலவரத்தை காரணம் காட்டி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடன் மேல் கடன் வாங்கி தொழில் நடத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மூலப் பொருட்களின் மீதான அதிகப்படியான வரிகளை ரத்து செய்தால் ஓரளவு தாக்கு பிடிக்க முடியும்.

சதீஸ் (பிட்டர்), டெக்ஸ்டைல் மிஷினரி உற்பத்தி நிறுவனம்

சிறிய நிறுவ னங்களில் தொடர்ந்து வேலை இருப்பதில்லை, காரணம் நிறுவ னத்திற்கு போதுமான ஆர்டர்கள் கிடைப்பதில்லை. மூலப்பொருட்களின் விலை உயர்வால் தற்போது கூடுதலாக இருப்பு வைத்துக்கொள்வது கிடையாது. குறிப்பிட்ட சில காலம் கூடுதலாக வேலை  இருக்கும். விலைவாசி உயர்வால் கிடைக்கின்ற சம்பளம் பற்றாக்குறையாகவே உள்ளது. மின்சார கட்டண உயர்வு, கேஸ் விலை உயர்வு,  வாடகை, மருத்துவ செலவுகள் சுமையை கூடுதலாகிக்கொண்டே வருகிறது. இதனால் தற்போதெல்லாம் சேமிப்பு என்பதே கிடையாது.  

ராஜன் (செட்டர்), கணபதி இன்ஜினியரிங்

வார நாட்க ளுக்கே வேலை இருப்பதில்லை,  ஓவர் டைம் என்ப தெல்லாம் இப்போது அரிதாகிவிட்டது. பெரிய நிறுவனங்க ளின் ஆர்டர் அளவு குறைந்துள்ளது. இதனால், ஊதியமும் குறைவாகவே கிடைக்கிறது. குடும்பச் செலவைக்கூட பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டியதாக உள்ளது.  குடும்பத்தில் மற்றொருவருடைய வருவாயைக்கொண்டே சமாளிக்க வேண்டியுள்ளது.

ஹலோசிடஸ் ஜெயக்குமார், ஆஸர் டெக் கணபதி.

தொழில் முனை வோரான நாங்கள் வேலை செய்துதான் தொழிலை தற்காத்து வருகிறோம். ஜிஎஸ்டி செலுத்த கடன் வாங்கி கட்டுகிறோம். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதிலும் இப்போது சிக்கல். பெரிய நிறுவனங்கள் ஆர்டர்களை தருவதில்லை. ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பதெல்லாம் மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது. பெரிய கார்ப்ரேட்டுகளுக்குத்தான் அரசு உதவி செய்கிறது. குறு,சிறு தொழில்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை.

வணங்காமுடி 
 

மூலப்பொருட்களின் விலை இரட்டிப்பு மடங்கு உயர்ந் ந்துள்ளது. வேலை யாட்களை சிறு தொழில் முதலாளிகள் தற்காத்து வைத்துள் ளனர்,  கொரோன காலத்திற்கு பிறகு இன்னமும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. முன்பெல்லாம் ஓவர் டைம் இருக்கும், போனஸ் இருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதுவும் இல்லை.