articles

img

பாரதி பார்வையில் வைதிகம் - அருணன்

பாரதியின் கவிதைகள் அளவுக்கு அவரின் கட்டுரைகள் விரிந்த வாசகர் வட்டத்தை எட்டியதில்லை. அவரின் கவிதைகள் பல கவித்துவ ஆவேசத்தில் மட்டுமல்லாது, தகுந்த சமூக நோக்காலும் எழுந்தவை என்பதை உணர அவரின் கட்டுரைகளைப் படிக்க வேண்டியது அவசியம். பாரதியின் கட்டுரைத் தொகுதியில் ரவீந்திரநாத் தாகூர் எழுதி, இவர் மொழி பெயர்த்த “அடங்கி நட” எனும் கட்டுரை உள்ளது. அதைப் படித்தால் அந்த 1910 களிலேயே சாதிய எதிர்ப்பு தாகூர் நெஞ்சில் எப்படிக் கனன்று கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இந்தக் கட்டுரையை தமிழில் பெயர்த்ததன் மூலம் பாரதிக்கும் அந்த உணர்வு தகித்திருந்தது என்று நாம் முடிவு கட்டலாம். கட்டுரை பேசுகிறது: “பிராமணன் ஒருவன் குடத்தில் கொண்டுவரும் ஜலம் அழுக்காக இருப்பதால் குடிக்கத் தகாதென்றும், சண்டாளன் ஒருவன் சுத்தமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டுவந்த நீர் சுத்தமாக இருப்பதால் குடிக்கத் தகும் என்றும் நான் சொன்னால், வெறுமே குயுக்தி பேசுகிறேன் என்று சொல்லி என்னைக் கண்டிப்பார்கள். ஏனெனில் எனது கொள்கை யஜமான் உத்தரவுடன் ஒட்டவில்லை. ‘ஒட்டாவிட்டால் என்ன குடிகெட்டுப் போயிற்று?’ என்று நான் கேட்டால் உடனே என்னை ஜாதியிலிருந்து தள்ளி விடுவார்கள். என்னை விருந்துக்குக் கூப்பிட மாட்டார்கள். நான் செத்துப்போனால் சாவுக் கிரியைகளுக்குக்கூட வரமாட்டார்கள்”.

ஒரு கண்ணால் உறங்கி  மற்றொரு கண்ணால் விழி!

அந்தக் காலத்தில் வங்காளத்திலும் சாதி யம் வெறியோடு அலைந்ததும், அதை சாதி  விலக்கம் எனும் கொடூர ஆயுதத்தால் கட்டிக்  காத்து வந்தார்கள் என்பதும் இப்படியாக வெளிப்படுகிறது. இத்தகைய அக்கிர மத்தைச் செய்துகொண்டே, ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளிடம் தங்களுக்கு அரசி யல் உரிமையும் கோரினார்கள். இது சுத்த முரண் என்றார் தாகூர்: “ராஜாங்கத்தாரை நோக்கி ஸாம்ராஜ்ய  சபைகளில் எங்களுக்கு ஸ்தானம் வேண்டும்  என்று கேட்பதும், ஜனங்களைநோக்கி ஜாதி யாசாரங்களிலும் சொந்தக் காரியங்களி லும்கூட எஜமான் போட்ட கோட்டை மீறி நடக்  காதே என்று சொல்வதும் ஒரேவித கர்வத் தால் உண்டாவது வினோதமன்றோ? இதற்  குப் பெயர் ஸனாதன தர்ம புனர் உத்தாரணம்  என்கிறோம். ஸனாதனக் கட்சித் தலைவர் நாம்  ஒரு கண்ணால் உறங்கி மற்றொரு கண்ணால்  விழித்திருக்கும்படி அஸாத்ய உத்தரவு போடு கிறார்”. மக்களை சாதியால் கட்டி.வைத்து உத்தர விடும் அந்த எஜமான் யார்? அவர்தான் சனா தனக் கட்சித் தலைவர். அவர் சாமான்ய இந்து  அல்ல; சாமான்ய இந்துக்கள் மீது சாதியக்  கட்டுப்பாடுகளைக் கறாராக அமுல்படுத்தி அவர்களின் உரிமைகளை பறிப்பவர். ஆனால் அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களி டம் உரிமைகள் வேண்டும் என்று மறுபுறம் கேட்பார். இது வினோதம் அன்றோ? அத னால்தான், தாகூர் அழகாகக் கேலி செய்தார்: ஒரு கண்ணால் உறங்கி, மற்றொரு கண்ணால்  விழித்திருக்குமாறு உத்தரவு போடும் வேடிக்கை மனிதர்!

இந்த சனாதனத்தை மதத்திலிருந்து வேறு படுத்திப் பார்க்கும் பார்வையையும் கொண்டி ருந்தார் தாகூர். இதனாலும் இந்தக் கட்டுரை  பாரதிக்குப்பிடித்துப் போய் மொழி பெயர்த்  தார் எனலாம். வாழ்வின் சில முக்கியமான விஷயங்களில் சாமான்யர்களின் மதமும், சனாதனிகளின் கட்டுப்பாடும் எப்படி வித்தி யாசப்படுகிறது என்பதைப் பட்டியலிட்டார். அது: “ஸமயம் (மதம்) வேறு, குருக்கள் கட்டுப்  பாடு வேறு என்பதை மறக்கலாகாது... ஒரு வன் மற்றொருவனைக் கஷ்டப்படுத்தினால் இருவருக்கும் கெடுதி என்று ஸமயம் சொல்லுகிறது. மகள் விதவையாகிப் பட்டினி  கிடக்கும்போது இன்ன தேதியில் அவ ளுக்குத் தாகத்துக்கு ஜலம் கொடுத்தால் பெற்றோர்களுக்குப் பாவம் என்று குருக்  களின் கட்டுப்பாடு சொல்கிறது. பச்சாதா பத்தாலும் ஒருவன் பாவத்தைக் கழுவலாம் என்று ஸமயம் சொல்லுகிறது. கிரகணத்தன்று ஒருவன் இன்ன நீரில் முழு கினால்தான் பாவம் தீர்வதுடன், பதினான்கு தலைமுறை பிதிர்கள் செய்த பாவமும் தீரும்  என்று கட்டுப்பாடு சொல்லுகிறது... மலைகளையும் கடல்களையும் கடந்து  போய் இவ்வழகிய உலகின் வியப்புகளைக்  கண்டு களிக்க வேண்டும் என்று ஸமயம்  சொல்லுகிறது. கடலைக் கடந்தவன் மண்  ணிற் புரண்டு பிராயச்சித்தம் பண்ண வேண் டும் என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. எக்குடிப் பிறந்தாலும் உண்மை உடையவன் தொழத் தக்கவன் என்று ஸமயம் சொல்லு கிறது. பிராமணனாகப் பிறந்தவன் அயோக்கி யனாக இருந்தபோதிலும் அவன் பாத தூளை  பிறர் சிரத்தில் தரிக்கலாம் என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. சுருக்கிச் சொன்னால் ஸமயம்  விடுதலை போதிக்கிறது. குருக்கள் கட்டுப் பாடு அடிமை நிலையைப் புகழ்ந்து கீர்த்த னம் பாடுகிறது”. அன்றைக்கு சனாதனமானது சாமான்ய இந்துக்களை எப்படியெல்லாம்படுத்தியது என்பதையும், அதை எதிர்த்து தாகூர் போன்ற  முற்போக்கு எழுத்தாளர்கள் எப்படி ஆவே சமாய்க் கிளம்பினர் என்பதையும் இந்தக் கட்டுரை சொன்னது. இதை மொழி பெயர்த்த தன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு மகத்தான அறிவுஜீவிதத் தொண்டை செய்திருக்கிறார் நமது பாரதியார்.

ஜாதி பிரஷ்டம் என்பது  சுத்த மடமை

தனது சொந்தக் கட்டுரைகளிலும் சனா தனத்தை, வைதிகத்தை பாரதி எதிர்த்து  எழுதினார். “தமிழ்நாட்டின் விழிப்பு” என்றொரு கட்டுரை. அந்தக் காலத்திலேயே “தமிழ்நாடு” என்று அழைத்ததைக் கவனி யுங்கள். யார் கவனிக்காவிட்டாலும் மேதகு  ஆளுநர் கவனிக்கட்டும்! அதில் கூறினார்:  “சகலமனிதரும் சகோதரர். மனுஷ்ய வர்க்கம் ஓருயிர். இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே ஆசார சுவர்கள் கட்டி, நான்  வேறு ஜாதி என் மைத்துனன் வேறு ஜாதி, இரு வருக்குள் பந்தி போஜனம் கிடையாது, அவனை ஜாதி பிரஷ்டம் பண்ண வேண்டும்  என்பது சுத்த மடமை”. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் அப்ப டித்தான் இருந்திருக்கிறது. இதைத் தான் மடமை என்று வன்மையாகக் கண்டித்தார் பாரதி. “சூத்திரனுக்கு ஒரு நீதி- தண்டச்/ சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி எனச்/ சாத்திரம் சொல்லிடுமாயின்- அது /சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்” என்று கவிதை யாத்தார் என்றால் அது இந்தப் புரிதலில் இருந்துதான். அவர் கூறிய  சதிகார சாத்திரம் மனுதர்ம சாஸ்திரம் என்ப தில் சந்தேகம் வேண்டாம்.

ஆண்பிள்ளைகள்  யோக்கியர்கள் இல்லை

பெண்கள் விஷயத்தில் வைதிகர்கள் விதித்திருந்த கொடுங் கட்டுப்பாடுகள் பற்றித்  தான் விரிவாகவும், மிகுந்த வேதனையாக வும் எழுதியிருக்கிறார் பாரதியார். “பெண்  டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டி/ பெண் குலத்தை முழுது அடிமைப்படுத்த லாமோ?” என்று அவர் கேட்டது மிகுந்த அர்த்தபாவம் மிக்கது. உயர்வருணம் எனப்பட்டதன் தூய்மையைக்காக்க வேண்  டும் என்பதற்காகவே பெண்ணை வீட்டில்  வைத்து அடைத்தான் கணவன். அப்படியாக  அவளின் பதிவிரதாதனத்தை காக்க முடியும்  என்று நினைத்தான். பாரதி புளிச்சென காறித்  துப்பினான்: “ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்று எல்லாரும் விரும்பு கிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால் ஆண்பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை”. (பதிவிரதை) பதிவிரதாதனம் சதி, பதி இருவர் சம்பந்  தப்பட்டது. தான் யோக்யனாக இல்லாததால்  தான் பெண்ணை அடிமைப்படுத்தி வைக்கி றான் ஆண். மனைவியை அடைத்து வைக்க,  பெண் குலம் முழுமைக்கும் அப்படியான கட்டுப்பாடுகளை விதித்தது வைதிகம் என்று  கச்சிதமாகச் சாடினார் பாரதி. பெண் கல்வி மறுப்பு பற்றி இன்னொரு கட்டுரையில் இப்  படிக் குறிப்பிட்டார்: “இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்  கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர்.

இப்போதோ பெண் கல்வி தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவி யிருக்கிறது. அண்டச்சுவர்கள் ஒன்றும் இடிந்து போகவில்லை. இதுவரை கூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன!” (பெண் விடுதலை-2) பாரதி கேலி செய்த அந்தப் “பலர்” யார்?  பெண்கள் தனியாக நடமாடவே கூடாது என்று ரைத்த புண்ணியவான்கள். கல்வி கற்கவும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே போகக்  கூடாது என்றவர்கள். வேறு எதற்காகவும் தனியே போகக் கூடாது என்று விதித்திருந்தார் கள். அவர்கள்தாம் “தமிழ்நாட்டு வைதிகர்”. அதே கட்டுரையில் தொடர்ந்து கூறினார்: “பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்ச ரிக்க வழியில்லாத தேசங்களும் உள. அவற்  றில் நமது தேசத்தில் பெரும் பகுதி உட்  பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படு கிறேன்.ஓஹோ, பெண்கள் தனியாக சஞ்சா ரம் செய்ய இடங்கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும், ஒருவிதமான நிய தியும் இருக்காது, மனுஷ்யர் மிருகப்பிராய மாய் விடுவார்கள் என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானா லும் போகலாமென்று வைத்திருக்கிறார்கள். அதனால் பூகம்பமொன்றும் நேர்ந்துவிட வில்லை”.

புருஷ விதவைகள் பெருகுவாரே!
 

வீட்டைவிட்டு பெண் தனியே போகக் கூடாது என விதித்தவர்கள் விதவை மறு மணத்தை ஏற்பார்களோ? அந்தக் காலத்தில் அது மகாக் கொடுமையாக இருந்தது. 15 வயதுக்கு குறைவான இந்து விதவைகள் 3 1/2 லட்சம் பேர் இருந்தனர். இந்த விபரம்  காந்திஜி நடத்திய “நவஜீவன்” பத்திரிகை யில் வெளியாகியிருந்தது. இந்தக் கொடு மைக்குத் தீர்வு என்று “ஆண்கள் புனர்விவா கம் செய்து கொள்வதில்லை என்று விரதம்  பூண வேண்டும்” என்றார் காந்தி. சனாதனி கள் கோபிப்பார்கள் என்று சகலவயது விதவை மறுமணத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் நமது பாரதியோ இது விஷ யத்தில் காந்தியையே விமர்சித்தார், விதவா  விவாகத்தை ஆதரித்தார். “ஸ்திரீ விதவை களின் தொகையைக் குறைக்க வழி கேட் டால் ஸ்ரீமான் காந்தி புருஷ விதவைகளின் தொகையை அதிகப்படுத்த வேண்டும்  என்கிறார்” என்று ஒரு போடு போட்டார். பிறகு  கூறினார்: “விதவைகள் எந்தப் பிராயத்தி லும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரை  புனர்விவாகம் செய்து கொள்ளலாம். அப்படியே புருஷர்கள் எந்தப் பிராயத்திலும்  தம் வயதுக்குத் தக்க மாதரை மறுமணம் செய்து கொள்ளலாம்.  இந்த ஏற்பாட்டை அனுஷ்டானத்திற்கு கொண்டுவர வேண்டும்”. (ஸ்ரீமான்காந்தி சொல்லும் உபாயம்) சனாதன எதிர்ப்பு என்பது இந்து மத  எதிர்ப்பு அல்ல. அங்குள்ள சாதிய, பெண்ணடி மைத்தன எதிர்ப்பே என்பதை மகாகவிகள் தாகூரும் பாரதியும் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கூறுகளின் மிச்ச சொச்சம் இருக்கும்வரை அதற்கான எதிர்ப்  பும் இருக்கவே செய்யும்.