வரலாற்றைச் சிதைப்பதும் திரித்து எழு துவதும் பாசிஸ்டுகளுக்கு எப்பொழுதுமே தேவையாக உள்ளது. முசோலினியும் ஹிட்லரும் இதனைச் செய்தனர். இப்பொழுது இந்திய பாசிஸ்டுகளும் அதனை செய்கின்றனர். இந்தியாவில் பாடப்புத்தகங்களை வடிவமைக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வெளியிட்டுள்ள வரலாறு/ சமூக அறிவியல் உட்பட பல புத்தகங்களில் பாடங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களைதான் சிபிஎஸ்இ மற்றும் பல மாநில பாடத்திட்டங்கள் பின்பற்றுகின்றன. பல ஆண்டுகளாக தீவிரமாக திட்ட மிட்டு வந்த சங் பரிவாரத்தினர் இன்று இந்த பாடப் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். இளம் வயதி லேயே மாணவர்களை தவறான வழியில் செலுத்துவது தான் இவர்களது நோக்கம்.
பல்வண்ண இந்திய வரலாறு
இந்தியா என இன்று அறியப்படுகின்ற பூகோளப் பகுதியில் வரலாறு நெடுகிலும் பல இனங்கள் படை யெடுத்துள்ளனர். ஆரியர்கள்/ சாகர்க்கள்/ குஷானர் கள்/ கிரேக்கர்கள்/ ஹூனர்கள்/ யூதர்கள்/ மங்கோலி யர்கள்/ துருக்கியர்கள்/ அரேபியர்கள்/ ஐரோப்பி யர்கள் என பலர் படையெடுத்தனர். போர்களுக்கு பின்னர் சிலர் இங்கேயே தங்கினர். போர்களுக்கு முன்பும் பின்பும் இவர்களில் பல பிரிவினர் வணிகத்தி லும் ஈடுபட்டனர். இதன் விளைவாக இந்தியா பல பண்பாடுகளின் சங்கமமாக இருந்தது. எனவே வான வில் போல பன்முகத்தன்மை கொண்டதாகவே இந்தியப் பண்பாடு அமைந்தது. ஒற்றைப் பண்பாடு கொண்ட இந்து ராஜ்ஜி யத்தை அமைக்க முயலும் சங் பரிவாரத்துக்கு பன்முகத்தன்மை கொண்ட பண்பாடு மிகப்பெரிய தடைக்கல்லாக உள்ளது. எனவே இந்த பன்மு கத்தன்மையை மக்களின் மனதிலிருந்து அகற்ற முயல்கின்றனர். அதற்காக பல திட்டங்களை தீட்டி யுள்ளனர். அதில் முக்கியமான ஒன்று பாடத்திட்டங் களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஆகும். இளம் வய தினரை பள்ளி பருவத்திலேயே பன்முகத்தன்மையை மறக்க செய்தால் தமது இலக்கு சுலபமாக நிறைவே றும் என எண்ணுகின்றனர். எனவே பாடத்திட்டங்க ளில் கை வைக்கின்றனர். இந்திய வரலாற்றின் பயணம் நேர்மறை மற்று
இந்திய வரலாற்றின் பயணம் நேர்மறை மற்றும் எதிர்மறைகளின் கலவையாகவே இருந்து வந்துள்ளது. இதுவரை ஆதாரங்கள் அடிப்படையில் நிலைநாட்டப் பட்ட வரலாறு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. தொடக்கத்தில் சிந்துச் சமவெளி நாகரிகமும் அதற்கு இணையாக தென்பகுதியில் வளமான நாகரிகமும் இருந்தன என்பதை ஆதிச்சநல்லூர்/ கீழடி ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. இந்த நாகரிகத்தில் கடவுள் இருந்தாலும் பெரு மதம் எதுவும் இல்லை. பின்னர் முக்கிய நிகழ்வாக ஆரியர் படையெடுப்பு நிகழ்ந்தது. இதன் விளைவாக சில சாதக மாற்றங்களும் சில பாத கங்களும் நிகழ்ந்தன. உலகெங்கும் நடந்தது போல மேய்ச்சலும் பின்னர் விவசாயமும் முன்னேற்றங் கள் எனில் சமூகத்தை தம் பிடிமானத்தில் வைத்திருக்க ஆளும் வர்க்கங்கள் தனித்துவமான வழிகளை உரு வாக்கின. பிறப்பின் அடிப்படையில் வேறுபாடுக ளைக் கொண்ட வர்ணாசிரம கோட்பாடுகள் உருவாக் கப்பட்ட. ஒடுக்கப்பட்டவர்கள் உழைப்பவர்களாக வும் அதே சமயத்தில் கீழ் வர்ணத்தாராகவும் இருந்தனர். உழைப்பவர்களிடமிருந்து பொருளாதார அடிப்படையில் உபரிமதிப்பு பறிக்கப்பட்டது. அது குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க வர்ணாசிரமம் பயன்பட்டது. இதனைக் கேள்வி கேட்க பவுத்தமும் சமணமும் உருவாகின. வர்ணாசிரமத்தை முழுமையாக எதிர்க்க முடியாத காரணத்தால் தமக்கென சில கோட்பாடு களை பவுத்தமும் சமணமும் உருவாக்கிக் கொண்டன. அந்த கோட்பாடுகளில் பிறப்பின் அடிப்ப டையில் வேற்றுமை இல்லை; ஆண்-பெண் எனும் வேறுபாடு இல்லை. புலால் உண்ணாமையை இந்த மதங்கள் முன்வைத்ததால் இதனால் பலன் கண்டவர் கள் இந்த மதங்கள் பக்கம் நின்றனர். இவை புதிய பண்பாடு, விழுமியங்களை உருவாக்கின. எனினும் வர்ணாசிரமத்தை உருவாக்கியவர்கள் இதைப் பொறுத்துக் கொண்டு இருக்கவில்லை. பவுத்தம் மற்றும் சமணத்திடமிருந்து புலால் உண்ணாமை உட்பட பல கோட்பாடுகளை உள்வாங்கி அதன் மூலமா கவே அந்த மதங்களை பின்னுக்குத் தள்ளின. இவ்வாறு சைவமும் வைணவமும் மறுமலர்ச்சி அடைந்த பொழுது புதிய பண்பாடுகள் உருவாகின. ஆனால் வர்ணாசிரமம் தொடர்ந்தது.
மதங்களும் மொழிகளும் கலந்த சங்கமம்
இதற்கிடையே இஸ்லாம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. எனினும் அது ஒரே வடிவமாக வர வில்லை. துருக்கியிலிருந்து ஒரு வடிவமும் அரேபியாவி லிருந்து இன்னொரு வடிவமாகவும் முன்வந்தது. இரு தரப்பாரும் குதிரை வணிகத்தில் ஈடுபட்டிருந்த கார ணத்தால் முரண்பாடுகளும் இருந்தன. எனினும் இரு பிரிவினரும் புதிய பண்பாட்டு விழுமியங்களை கொண்டு வந்து சேர்த்தனர். இதன் ஒரு கிளையாக சுஃபி பண்பாடு உருவானது. சுஃபி பண்பாடு இந்து மதம், இஸ்லாம் இரண்டையும் அரவணைக்க முயன்றது. எனவே இது ஒரு புதிய பண்பாடை முன்னி றுத்தியது. சைவம்/ வைணவம்/ பவுத்தம்/ சமணம்/ இஸ்லாத்தின் சன்னி பிரிவு மற்றும் சுஃபி பிரிவு ஆகி யவை ஒரே சமயத்தில் இயங்கியதால் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக இருந்தன. அதே சமயத்தில் நேர்மறை அம்சங்களும் நிகழ்ந்தன. இவற்றில் எது மக்களிடம் அதிகமாக செல்வாக்கு பெற்றது எனும் தீர்ப்பு எழுதப்படுவதற்கு முன்பாகவே ஐரோப்பியர்கள் வந்து சேர்ந்தனர். இவர்களின் வருகை முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவர்கள் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல; தொழிற்புரட்சியின் நாயகர்கள் என்ற முறையில் புதிய அறிவியல்/பொருளாதாரம் மற்றும் ஆயுதங்களும் அவர்களுடன் வந்து சேர்ந்தன. ஐரோப்பியர்களும் தமது பங்குக்கு புதிய பண்பாட்டு விழுமியங்களை உருவாக்கினர். இதற்கிடையே இந்தி யாவிற்குள் சீக்கியமும் தென் பகுதியில் ஆசிவகமும் தோன்றி தமது பங்குக்கு புதிய பண்பாட்டு கூறுகளை முன்வைத்தன. எனினும் ஆசிவகம் ஒப்பீட்டு அளவில் வந்த வேகத்தில் மறையவும் செய்தது.
இந்த வரலாற்றுப் பயணத்தில் வேறு முக்கிய நிகழ்வுகளும் உருவாகின. வடபகுதியில் இந்தோ-ஆரிய மொழிகள் தோன்றின எனில் தென்பகுதியில் திராவிட மொழிகள் தோன்றின. திராவிட மொழிகளின் மூதாதை என்ற அடிப்படையில் தமிழ் மொழி பல இந்தோ ஆரிய மொழிகளைவிட நீண்ட வரலாற்றைக் கொண்டதாக இருந்தது. புதிதாக மலையாளம்/கன்னடம்/தெலுங்கு உட்பட பல வளமான மொழிக ளும் தோன்றின. அவையும் புதிய பண்பாட்டு விழுமி யங்களை முன்வைத்தன. இப்படி பல மதங்களும் மொழிகளும் உருவாக்கிய பண்பாடுகளின் சங்கம மாகவே இந்தியா இருந்தது. எனவேதான் விடுதலை யின் பொழுது இந்தியா பல தேசிய இனங்களின் ஒன்றியம் என அழைக்கப்பட்டது. இந்த பண்பாடுகளின் சங்கமத்தை சங் பரிவாரம் ஒரு பொருட்டாகவே பார்ப்பது இல்லை. அவர்களின் ஒரே திட்டம் இந்துத்வா ராஜ்ஜியம் அமைப்பது. அதற்கு ஒரே பண்பாடு/ஒரே மதம்/ஒரே மொழி தேவையாக உள்ளது; எனவே வண்ணமயமான இந்திய பண்பாடு களை அகற்றுவது அவர்களுக்கு தேவையாக உள்ளது. அதற்கு முதலில் இந்தியர்களின் சிந்தனையிலிருந்து இதனை அகற்ற வேண்டும். அதன் முக்கிய நகர்வு தான் பாடப்புத்தகங்களில் மாற்றம்.
நீக்கப்பட்ட பகுதிகள்
என்னென்ன பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது அதனை நீக்கியவர்களின் நோக்கங்களை தெளிவு படுத்துகிறது.
1. காந்திஜி படுகொலைக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீது மக்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. இது பற்றிய வாசகங்கள் நீக்கப்பட்டுள்ளன.
2. இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்பட்டால் அது இந்த தேசத்தையே அழித்துவிடும் என காந்திஜி எண்ணினார். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக வலு வாக குரல் கொடுத்தார். இது இந்துமதவாதிகளுக்கு எரிச்சலூட்டியது. இந்தியா இந்துக்களின் நாடாகவே இருக்க வேண்டும் என எண்ணினர். இதற்கு மாறாக செயல்பட்ட காந்திஜி மீது அவர்களுக்கு வெறுப்பு உருவாகியது. இதன் விளைவாக பல முறை காந்திஜியை கொலை செய்ய முயற்சித்தனர். இது பற்றிய வாசகங்கள் நீக்கப்பட்டுள்ளன.
3. காந்திஜியை கொன்ற கோட்சே பூனாவை சேர்ந்த பிராமணர் என்பதையும் அவர் ஒரு இந்து பயங்கர வாத பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார் எனும் வாசகங்களும் நீக்கப்பட்டுள்ளன.
4. குஜராத் மற்றும் ஏனைய கலவரங்களுக்கு பின்னர் முஸ்லீம்களும் இந்துக்களும் சேர்ந்து வாழும் தெருக்களும், பகுதிகளும் மறைந்துவிட்டன. ஒரு மதத்தவர் மட்டுமே உள்ள “கெட்டோக்கள்” எனப் படும் பகுதிகள் உருவாகின. அதே போல செல் வந்தர்கள் தனியாக பாதுகாப்புடன் வாழும் “கேட்டட் கம்யூனிட்டி” எனும் பகுதிகளும் உருவாகின. இது பற்றிய வாசகங்கள் நீக்கப்பட்டுள்ளன.
5. குஜராத் கலவரங்கள் பற்றிய பல விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
6. அவசரநிலை காலம் பற்றிய விவரங்கள் நீக்கப் பட்டுள்ளன.
7. மம்லுக்/கில்ஜி/துக்ளக்/லோடி/ முகலாயர்கள் ஆகிய முஸ்லீம் ஆட்சிகளின் வரலாறு பற்றிய பல முக்கிய விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
8. வர்ணாசிரமம்/ வர்ண வேறுபாடுகள்/ தீண்டாமை குறித்து பல விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
9. வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சூத்திரர்களும் பெண்களும் வேதங்கள் கற்க இயலாது எனும் வாச கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
10. குஜராத் கலவரங்களின் பொழுது பிரதமர் வாஜ்பாய் அன்றைய முதல்வர் மோடியிடம் “அரச நிர்வாகமும் நீதியும் நிலை நாட்டப்பட வேண்டும்” என்று விமர்சனம் செய்தது நீக்கப்பட்டுள்ளது.
11. பனிப்போர் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம் குறித்த பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
12. தொழிற்புரட்சியும் நாகரிகங்களின் முரண்பாடு களும் எனும் பாடம் நீக்கப்பட்டுள்ளது.
13. ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் எனும் பாடம் நீக்கப்பட்டுள்ளது.
14. தலித் இயக்கம் பற்றிய சில பாடங்கள் நீக்கப் பட்டுள்ளன.
இந்த நீக்கங்கள் மற்றும் மாற்றங்கள் உடனடி யாக கண்ணுக்கு தெரிந்தவை! முழு விவரங்களும் பின்னர்தான் தெரியவரும். மாணவர்களின் பாடச்சுமைகளை குறைக்கவே சில மாற்றங்கள் செய்யப்பட்டன என என்சிஇஆர்டி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் நோக்கம் என்ன என்பது வெள்ளிடை மலை! இத்தகைய செயல் கள் முசோலினி அல்லது ஹிட்லரை நிரந்தரமாக காப்பாற்றவில்லை. இந்திய பாசிஸ்டுகளுக்கும் இது நிரந்தரப் பாதுகாப்பாக இருக்கப்போவது இல்லை.