articles

முன்னேற்றம் இல்லை! கடும் பாதிப்பே!!

வளர்ச்சி வளர்ச்சி என்று வளர்ச்சி குறித்து ஓயாமல் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்க ளும், ஒன்றிய அமைச்சர்களும். மேலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார  வளர்ச்சி பெற்ற நாடாக 2030,2040 என பல பத்து வருடங்களுக்கு பிறகு மாறும் என்றும் ஆருடம் கூறிக் கொண்டிருக்கிறார்கள் .

இவர்கள் குறிப்பிடுகிற வளர்ச்சியை காணும் போது, ஏற்கனவே பல புள்ளி விபரங் கள் தெரிவிப்பது போல், நாட்டின் 1% பெரும் பணக்காரர்களிடம் 73% சொத்து அதி கரிப்பு என்றும், மக்கள் தொகையில் பாதிப் பேராக உள்ள 67 கோடி பேர்களின் சொத்து சேர்ப்பு வெறும் 1%மட்டுமே உயர்வு உள்ள தாக தெரிவிக்கிறது. இவர்கள் கடைப் பிடிக்கிற பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பணக்காரர்கள் மேலும் பணக் காரராவதும், ஏழை மீண்டும் ஏழை என்கிற அடிப்படையில் உள்ளது.

இவர்கள் குறிப்பிடும் வளர்ச்சி

அம்பானி ,அதானி போன்ற பெரும் பணக்காரர்களின் வளர்ச்சியை கணக்கிடுகி றார்களோ? அப்படி எனில் 2030, 2040 இல் உலகின் முதல் கோடீஸ்வரராக அவர்களை மாற்றுவது தான் இவர்களுடைய வளர்ச்சி யாக இருக்குமோ?

சமீபத்தில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழ கத்தின் இந்தியாவின் வேலை வாய்ப்பு நிலைமை 2023 அறிக்கையின் பொருளா தார வளர்ச்சி மற்றும் அதன் கட்டமைப் பில் உருவாகியுள்ள மாற்றங்கள் குறித்து சில முக்கிய பிரச்சனைகளை முன்வைக் கின்றது. அது பின்தங்கியுள்ள  சாதி, பாலி னம் மற்றும் மதக் குழுக்களைச் சார்ந்த தொழிலாளர்களை எவ்வாறு பாதிக்கிறது? என்பதை முன் வைக்கிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொழிலாளர்களுக்கு உதவிய வேலை வாய்ப்புகள், பெண்கள், சிறு தொழில் செய் வோர் தலித், இஸ்லாமியர் என அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பேசுகிறது.சமீப ஆண்டுகளில் வேலை வாய்ப்பில் ஏற்பட்ட சில முக்கிய சிறு அளவிலான பலன்களை யும் சுட்டிக் காட்டுகிறது. எதிர்மறையாகவே உள்ளது 

2017-18, 2021-22 ஆகிய 4 ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் மக்களில் 53 மில்லி யன் அதிகரித்து 1021 மில்லியனாக உயர்ந்துள் ளது. இது ஆண்டு சராசரியை விட அதிக மாகும். இதே காலகட்டத்தில் வேலையில்லா தோர் எண்ணிக்கை 2.1% என்பதிலிருந்து 6.6 % என உயர்ந்துள்ளது. மேலும் உண்மை ஊதியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்க ளை பார்த்தோமானால், பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு ஆதாயம் ஏறக் குறைய இல்லை அல்லது எதிர்மறையாகச் சென்றுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

ஒன்றிய பாஜக அரசின் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்கிற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்ட சூழ்நிலையில் பக்கோடா விற்பதும் வேலை தான் என்று பிரதமர் கூறியுள்ள நிலையில் சுய தொழில் செய்பவர்களின் வருமானமும் இக்காலத்தில் சாதாரண தொழிலாளர்க ளின் வருமானத்தில் கால் பகுதி அளவில் தான் (மிகமிகச் சிறிய அளவு)அதிகரித் துள்ளது என்பதும்,பெரும் தொற்றுக் காலத்தி லும் அதற்குப் பின்பும் சாதாரணத் தொழி லாளர்களுடைய ஊதியம் பெறுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகும். 

100 நாள் வேலைதிட்ட நிதி ஒதுக்கீடு குறைப்பு

2019 -20 களில் இத்திட்டத்தில் வேலை பெற்றவர்களுடைய எண்ணிக்கை 7.9 கோடி ஆகும். தற்போது பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு 2021- 22-ல் 10.6 கோடி யாக உயர்ந்திருக்கிறது. மேலும் பெருந் தொற்றுக் காலத்தில் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் மீண்டும் தங்கள் கிராமத்திற்கு வந்தவர்களுக்கும் உதவுகிறது. அதே நேரத்தில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு மிகப்பெரிய அளவில் குறைத்து இருக்கிறது. 

கடுமையாக உயர்ந்து வருகிற விலை வாசி உயர்வாலும் அதனால் ஏற்படக் கூடிய பொருளாதாரப் பிரச்சனைகளால் பெண்கள் வீட்டு வேலைகளிலிருந்து முறை சாரா தொழிலிலும் , சுயதொழிலிலும், விவசா யத்திலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர்கள் வேலையில் பங்கேற் கும் விகிதத்தில் சற்று முன்னேற்றம் உள்ளது. இருப்பினும் அவர்களுடைய ஊதியம்  மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

சாதிய அடிப்படையில் பார்த்தால் தலித் மக்கள், இதர பகுதி மக்களைக் காட்டி லும் நிரந்தர ஊதியம் பெறுபவர்களானா லும் சரி சுயதொழில் செய்பவர்களானாலும் நான்கில் மூன்று என்கிற அடிப்படை யிலேயே இருக்கிறார்கள்.

இஸ்லாமியத் தொழிலாளர்களின் நிலையைப் பொறுத்தவரை ஊதிய உயர்வு, இந்துத் தொழிலாளர்களை விட குறைவா கவே காணப்பட்டது. தொழில் பிரிவில் கிட்டத்தட்ட சமமாக இருந்தது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மதம் சார்ந்த 

வெறுப்பு திசை திருப்பல்

இது கடந்த 10 ஆண்டுகளில்,ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளால் சகல பகுதி மக்களுக்கும் பெரிய முன்னேற்றம் இல்லை  என்பதையும், மாறாக கடும் பாதிப்பு ஏற்பட் டுள்ளது என்பதையும் உணர்த்துகிறது.

ஆனால் இவ்வுண்மைக்கு மாறாக, வழக்கம் போல் பொய்களை அள்ளி வீசு கிறார்கள்.

அதற்காக பெரும் தொகை விளம்பரத் திற்காகச் செலவு செய்யப்படுகிறது. சுயேச்சையாக செயல்பட வேண்டிய  அரசு நிறுவன கட்டமைப்புகள் அனைத்தும் இன்று ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும்  இதை மக்கள் உணரா வண்ணம், மதம் சார்ந்த வெறுப்பு பேச்சுக் களை பேசித் திசை திருப்புகிற நடவடிக்கை யும் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது.

எனவே ஒவ்வொரு நிமிடமும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. “தூங்கும் போதும் கூட, காலாட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லையென் றால், உயிர் இல்லை என்று புதைத்து விடு வார்கள்” என்கிற பழமொழியை போல் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

எக்கனாமிக் அண்டு  பொலிட்டிக்கல் வீக்லி தலையங்கம்  தமிழில் : ஆர்.மைதிலி