articles

img

சிறுபான்மையினர் சந்திக்கும் பெரும் சவால் பெரும்பான்மைவாதம் - எஸ்.நூர்முகம்மது

ஹிஜாப் தடை மூலம் முஸ்லீம் பெண்களின் கல்வி வாய்ப்பை முடக்க நினைக்கும் பாஜக தற்போது ஒன்றிய அரசின் மூலம் 1 முதல் 8 வரை வழங்ககப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையையும், உயர்கல்விக்கு அளித்து வந்த  ஆசாத் கல்வி உதவித் தொகையையும் ரத்து செய்துள்ளது. 

டிசம்பர் 18. சர்வதேச சிறுபான்மையினர் உரிமை நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் உலகம் முழு மையும் உள்ள சிறுபான்மை மக்களுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறும். ஒவ்வொரு நாட்டி லும் சிறுபான்மையினர் வேறுபடுவர். மத வழி சிறுபான்மையினர், மொழி வழி சிறுபான்மையினர், இன வழி சிறுபான்மையினர் என சிறுபான்மை மக்கள் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையிலான ஒதுக்குதலுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

மதச் சார்பற்ற ஜன நாயக நாடுகளில் கூட பெரும்பான்மையினர் ஆதரவைப் பெற அரசியல் வாதிகளால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.  மிகப் பெரும் ஜனநாயக நாடு எனப் பெருமை பேசுகின்ற அமெரிக்கா வில்  இன வழி சிறுபான்மையினரான ஆப்பிரிக்க அமெரிக்கர்களான கறுப்பர் கள் கடுமையான ஒடுக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர் என்பது நிதர்ச னமான உண்மை. சமீபத்தில் நான் படித்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கரின் சுய சரிதையில் அமெரிக்காவில் கறுப்பர்கள் எவ்வளவு பெரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்ற விபரம் பார்த்தேன். அமெரிக்காவில் பென்சில் வேனியா மாகாணத்தில் மொத்த மக்கள் தொகையில் 9 சதவிகிதம் மட்டுமே உள்ள கறுப்பர்கள் மரண தண்டனை கைதிகளாக உள்ளவர்களில் 60 சத விகிதத்திற்கும் அதிகம்.  அவர்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படுவதையும், காவல் துறையினரும், நீதித்துறையினரும் கூட அவர்கள் மீது மிகவும் பாரபட்ச மான தாக்குதல்களையும், தண்டனைகளையும் கொடுக்கின்றனர் என்பதை யும், மரண தண்டனை தடை செய்யப்பட்ட நேர்வுகளில் கூட கறுப்பர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படுவதையும், சட்டத்தை மீறி கறுப்பரான கைதிக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில் மூன்று தடவை மின்சா ரம் பாய்ச்சியதையும் முமியா  அபு ஜலால் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

வெறுப்பரசியலே அவர்களது மூலதனம்

இந்தியாவில் மத வழி சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச அமைப்பு இந்துத்துவா எனும் கருத்தியல் அடிப்படையில் செயல்படும் அமைப்பு. ஹிந்துயிசமே எங்கள் தேசியம் என்று பிரகடனப்படுத்திய அமைப்பு. அகண்ட பாரதம் என் பதைக் குறிக்கோளாக அறிவித்த அமைப்பு. சிறுபான்மை மக்களைக் குறிப்பாக முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் ஒட்டு மொத்த இந்து மக்களின் ஏன் தேசத்தின் எதிரிகளாக சித்தரித்து, அதன் மூலம் ஏற் படுத்திய வெறுப்பரசியல் மூலம் தங்களது அரசியலைக் கட்டமைத்து வரும் ஒரு இயக்கம் அது. இதை வெளிப்படையாக அறிவிப்பதில் எவ்வித தயக்க மும் இருந்ததில்லை அவர்களுக்கு. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் கட்சியான பா.ஜ. க . ஆட்சி பொறுப்பேற்பதற்கு அவர்களது ஒரே சூத்திரம்  சிறுபான்மையினர் எதிர்ப்பே., அவர்கள் மீதான துவேஷமே.,  அவர்களை எதிரிகளாகக் கட்டமைப்பதே. அதன் மூலம் ஏற்படுத்தப்படும் வெறுப்பர சியலே அவர்களது ஒரே மூலதனம். இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் சிறுபான்மை மக்கள். அவர்களில் சுமார் 2.5 கோடி பேர் தான் கிறிஸ்தவர்கள். இதரர் முஸ்லீம்கள். சிறுபான்மை யினரான சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள் ஆகியோர் இந்துக்களின் ஒரு பகுதியினராகவேக் கருதப்படுகின்றனர். சிறுபான்மை முஸ்லீம்கள் பெரும்பான்மையோர் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைக ளில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு வாக்குக ளுக்காக சலுகைகள் வாரி வழங்கப்படுவதாகவும், அதனால் அவர்கள் வள மான வாழ்வு வாழ்வதாகவும் சங் பரிவாரத்தினர் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம்  செய்து வந்தனர். அவர்களது கோயபல்ஸ் பிரச்சாரம் அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே வறுமையிலும், வேலை யின்மையிலும் வாடிக் கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் உண்மையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வந்தது.

இரண்டு கமிஷன்களின் பரிந்துரைகள்

 இந்நிலையில் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இடதுசாரிகளின் முன்மொழிதல்படி இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன. நீதியரசர் ரஜேந்திர சச்சார் தலைமையில் ஒரு குழு சிறுபான்மை முஸ்லீம்க ளின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கை முஸ்லீம்கள் வாழ்வின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டியது. முஸ்லீம்கள் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளில் மிகவும் தாழ் நிலை யில் உள்ளனர் என்ற விபரம் அந்த அறிக்கையின் மூலம் வெளி வந்தது. இந்நிலையில் மாற்றம் கண்டிட பல பரிந்துரைகளும் நீதியரசர் ரஜேந்திர சச்சார் குழுவால் அரசுக்கு வழங்கப்பட்டன. அன்றைய அரசு அவற்றில் பெரும்பான்மையானவற்றை நிறைவேற்றாவிட்டாலும் ஒரு சில முன் னெடுப்புகளை செய்தது.

 அது போல் சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு எனும் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்க நாத் மிஸ்ரா குழு முஸ்லீம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க பரிந்து ரைத்ததோடு, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களுக்கு மாறிய தலித்துக ளுக்கும் பட்டியலினத்துக்கான சலுகைகளையும், இட ஒதுக்கீட்டையும் வழங்கப் பரிந்துரைத்தது. அன்றைய ஒன்றிய அரசு இந்த பரிந்துரைகளை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்யாமல் கிடப்பிலே போட்டது. இந்நிலையில் தான் 2014 இல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரான நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில்   ஆட்சிப் பொறுப்பேற்றது. குஜ ராத் முதலமைச்சராக இருந்து இந்துத்துவா கொள்கைகளை அரங்கேற்ற அனைத்தையும் செய்தவர் அவர். குஜராத் கலவரத்தின் மூலம் 2000 முஸ்லீம் கள் படுகொலை செய்யப்பட்டதையும், முஸ்லீம் பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதையும்  முதலமைச்சராக இருந்து மேற் பார்வையிட்டவர். இதனால் இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற மக்களா லும், உலக நாடுகளாலும் கூட வெறுக்கப்பட்டவர். அன்றைய பாஜக பிரதம ராக இருந்த வாஜ்பாய் அவர்களால் கூட வேறு வழியின்றி ராஜதர்மத்தைக் காப்பாற்ற தவறியவர் என்று கூறப்பட காரணமானவர். ஆனால் இதுவே ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஒரு தகுதியாக மாறியதன் விளைவே அவர் பிரதமராக பதவியேற்கும் நிலை ஏற்பட்டது. தங்களது வகுப்புவாத நோக்கங்க ளை நிறைவேற்ற அவரை விட பொருத்தமானவர் இல்லையென ஆர்.எஸ்.எஸ். முடிவுக்கு வந்தே அவரைப் பிரதமராக்கியது.

மோடி ஆட்சியின் அநீதிகள்

மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் சிறுபான்மை மக்கள்  பல வித மான தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் உள்ளாயினர். சங் பரிவாரத் தினரின் வெறுப்புப் பிரச்சாரம் நாடு முழுக்க நடைபெற்றது. பிரதமர் மோடியே அதற்குத் தலைமை தாங்கினார். பசு வதை செய்தாகக் கூறி 2015 இல் முகம்மது அக்லக் என்னும் முதியவர் படுகொலை, 2017 இல் 15 வயது ஜூனைத் எனும் இளைஞர் ரமலான் நோன்புடன் ரயிலில் பயணித்த போது ரயிலிலிருந்து தூக்கி வீசி படுகொலை என ஏராளமான தாக்குதல்கள். ஜெய் ஸ்ரீராம் எனக் கூறச் சொல்லி சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் என  பலப் பல தாக்குதல்கள். மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் அத்தகைய தாக்குத லைக் கண்டிக்கக் கூட முன்வராததோடு,

அத்தகைய வெறுப்புப் பிரச்சா ரத்தின் மூலாதாரமாகவே செயல்பட்டார். இந்நிலையில் தான் 2019 தேர்தலில் மீண்டும் தனிப் பெரும்பான்மை யுடன் பா.ஜ.க. மோடி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. 2014 தேர்தலில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத போதும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி. அமலாக்கத்தாலும் மக்களின் வாழ்வும், நாட்டின் பொருளாதாரமும் சீரழிந்த போதும் மக்கள் வாக்க ளித்தது சிறுபான்மை மக்களை எதிரியாகக் கட்டமைத்து,  பெரும்பான்மை  மக்களை வகுப்புவாத வெறியூட்டியதனாலேயே என்ற முடிவுக்கு வந்த சங் பரிவாரமும், மோடியும் மேலும் வேகமாகவும், வெறியுடனும் வகுப்புவாத பாதையில் செல்ல எத்தனித்தனர். மோடியின் இரண்டாம் ஆட்சி காலமும் மக்கள் அனைவருக்கும் வேதனையும், சோதனையும் நிறைந்ததாகவே அமைந்தது.  கோவிட் பெருந் தொற்றின் போது எவ்வித முன் தயாரிப்பும் இன்றி அறி விக்கப்பட்ட பொது முடக்கம் மக்களின் வாழ்க்கையை சீரழித்தது. ஏற்க னவே தாழ்நிலையில் இருந்த பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றது. மக்கள் அனைவரும் கடும் பாதிப்பிற்கு உள்ளாயினர். உரிய சிகிச் சையின்றி மரணத்தைத் தழுவியவர்கள் பல்லாயிரம். அவர்களுக்கு முறை யான கவுரவமான இறுதிச் சடங்கிற்குக் கூட வழியின்றி கங்கையில் வீசப்பட்ட பிணங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இருந்தும் அது குறித்தெல்லாம் கவலைப்படாத மோடி அரசு, தனது மத வெறிப் பாதையில் மேலும் வேகமாக பயணிக்கத் துவங்கியது.

கலவர ஊர்வலங்களான  ராமநவமி ஊர்வலங்கள் 

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தங்களது மதவெறி இந்துத் துவா அஜண்டாவை நிறைவேற்றி, அதையே அடுத்த தேர்தலின் முக்கிய  பிரச்சாரமாக மாற்றுவது என்ற திட்டத்துடனேயே மோடி அரசு செயல்படு கிறது. தாங்கள் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத மோடி தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் அரசியல் சட்ட ஷரத்து 370 ரத்து, அம்மாநிலத்தை 2 யூனி யன் பிரதேசங்களாக தரம் தாழ்த்துதல், குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மை மக்களை அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்தல் என பல நட வடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும் சிறுபான்மை மக்கள் மீதான சங் பரிவாரத்தினரின் தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளன.  குஜராத் சட்டமன்ற தேர்தலை ஒட்டி ராமநவமி ஊர்வலத்தின் போது குஜ ராத் சம்பாத் நகரில் 2022 மார்ச் 10 இல் சிறுபான்மை மக்கள் மீது தாக்கு தல்கள், வடக்கு குஜராத் ஹிம்மத் நகரில் கலவரம், குஜராத் மட்டுமன்றி மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் ராம நவமி ஊர்வலங்கள் கலவர ஊர்வலங்களாக மாற்றப்பட்டன. தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் 2022 ஏப்ரல் 11 இல் காவேரி மாணவர் விடுதியில் அசைவம் பரிமாறப்பட்டதாகக் கூறி மாணவர்கள் மீது ஏபிவிபி எனும் சங் பரிவார் மாணவர் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தினர். நிர்வா கமும், காவல்துறையினரும் அதற்கு உடந்தையாக இருந்தனர். இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்ற பெரும்பாலான இடங்களில் காவல்துறையினர் கலவரக்காரர்களுக்கு ஆதரவான நிலையே எடுத்தனர்.

புல்டோசர் இடிப்புகள்

தில்லியில் ஷாஹின்பாக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பெரும்பாலும் பெண்களால் நடத்தப்பட்ட அமைதியான தொடர் போராட்டம் சங் பரிவார வன்முறையாளர்களால் கலவரமாக மாற்றப்பட்டது. அதில் 30 க்கு மேற்பட்டோர் பலியாகினர். அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து பேசியவர்கள் உபா சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையில்  உள்ளனர். பல இடங்களில் இத்தகைய வன்முறையாளர்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய சிறுபான்மையினர் காவல்துறையினரால் கைது செய் யப்பட்டது மட்டுமன்றி, அவர்களது வீடுகளும் அரசு நிர்வாகத்தால் புல்டோசர் மூலம் இடித்து நிர்மூலமாக்கப்பட்டன.  தில்லி ஜஹாங்கீர்புரியில் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர் வீடுகள் நகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டன. அதற்குத் தடை விதித்து உச்சநீதி மன்றம் பிறப்பித்த தடை உத்தரவைக் கூட அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை. அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா கராத் அவர்கள் வீதியில் இறங்கி தானே புல்டோசர்களின் முன் நின்று  தடுத்ததன் மூலம் அவர்களது சில வீடுகள் தப்பித் தன. இது குறித்து விசாரணை நடத்திய உண்மை அறியும் குழுவின் அறிக்கை, சங் பரிவாரத்தினரும், நகராட்சி நிர்வாகமும் கைகோர்த்து நின்று இத்தகைய கொடும் செயலை நிறைவேற்றியதை அம்பலப்படுத்தியது. இத்த கைய புல்டோசர் மூலம் சிறுபான்மை முஸ்லீம்களின் இருப்பிடங்களையும், வருவாய் தரும் கடைகளையும் இடிக்கும் சம்பவங்கள் குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி, அசாம் உட்பட பல மாநிலங்களில் அரங்கேறின. 

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அயோத்தியில் இருந்த பாப்ரி மசூதி, ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டது என்ற பொய்யான பிரச்சாரம் மூலம் வெறியூட்டி 1992 டிசம்பர் 6 இல் அதை இடித்துத் தள்ளினர். அதற்கு அப்போ தைய ஒன்றிய, மாநில அரசுகள் துணை போயின. பின்னர் உச்சநீதிமன்றத் தின் அநீதியான தீர்ப்பின் துணையுடன் அந்த இடத்தைத் தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தனர். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் தற்போது பிரம் மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி  நடைபெற்று வருகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அதைத் திறந்து அதையே சாதனை யாக்கி தேர்தலைச் சந்திக்கவுள்ளனர். அடுத்து வாரணாசியில் உள்ள கியான் வாபி மசூதியில் தங்கள் பார்வையைச் செலுத்த துவங்கயுள்ளனர். பாப்ரி மசூதி போன்றே இதற்கும் நீதிமன்றத்தைப் பயன்படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். அங்கு சிவலிங்கம் இருப்பதாகக் கட்டுக்கதை உருவாக்கி, அதன் மூலம் அந்த இடத்தை உரிமையாக்கிக் கொள்ளவும், அங்கிருக்கும் மசூதியை தரைமட்டமாக்கவும் திட்டமிடுகின்றனர்.

கட்டாய மதமாற்ற கட்டுக்கதை

கட்டாய மதமாற்றம் என்ற ஒரு கட்டுக்கதையை உருவாக்கி அதன் மூலம் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பேற்றவும், அதைக்  காரணம் காட்டி சிறு பான்மையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உள்ளனர். பல மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் உள்ளது. இந்தியாவில் 500 ஆண்டுகாலம் முஸ்லீம்கள் ஆட்சி நடைபெற்றபோதும் இங்கு இஸ்லாமியர் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாகவோ அதன் மூலம் அவர்கள் மக்கள் தொகை பெரும்பான்மை ஆகிவிட்டதாகவோ கூற இயலாது. அது போல் பிரிட்டிஷ் போன்ற அந்நியர் ஆட்சி சுமார் இரு நூறாண்டுகள் நடந்தும் கிறிஸ்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.  தற்போது  உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் மதம் மாறிய தலித்துக ளுக்கு பட்டியலினத்தோருக்கான சலுகைகளும் இட ஒதுக்கீடும் வழங்கக் கோரும் வழக்கில் ஒன்றிய  அரசின் பதிலுரையிலேயே இந்து மதத்திலுள்ள ஜாதிய முறைகளின் பாதிப்புகளினாலேயே இந்துக்கள் கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களுக்கு மாறினர் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாக லவ் ஜிகாத் எனும் குற்றச்சாட்டைத்  தொடர்ந்து ஹலால் மாமிசம், தொழுகை அழைப்புக்கான அசான் ஆகியவையும் முஸ்லீம் பெண்கள் அணியும் ஹிஜாப் போன்றவைகளும் சங் பரிவா ரத்தால் கையிலெடுக்கப்பட்டுள்ளன. ஹிஜாப் தடை மூலம் முஸ்லீம் பெண்க ளின் கல்வி வாய்ப்பை முடக்க நினைக்கும் பாஜக தற்போது ஒன்றிய அரசின் மூலம் 1 முதல் 8 வரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை யையும், உயர்கல்விக்கு அளித்து வந்த  ஆசாத் கல்வி உதவித் தொகையை யும் ரத்து செய்துள்ளது. மேலும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப் போவதா கவும் அதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகவும் சில பாஜக அரசுகள் அறிவித்துள்ளன.

எதிர்ப்பாளர்களை  பொய் வழக்குமூலம் ஒடுக்குதல்

சங் பரிவாரத்தின் வெறுப்பு அரசியலையும், வகுப்புவாத வெறி யாட்டத்தையும் எதிர்க்கும் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட அனைவரையும் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் வேட்டையாடி வருவதை தனது வாடிக்கையாக கொண்டு வருகின்றன பா.ஜ.கவின் ஒன்றிய, மாநில அரசுகள். பீமா கொரேகான் வழக்கில் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையிலேயே மரணமடைந்த 83 வயதான, பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமி மீது என்.ஐ.ஏ. தொடர்ந்த வழக்கு பொய்யானது என்பதும், அவருக்குத் தெரியாமலே அவரது மடிக்கணி னியில் ஹேக் செய்தே ஆவணங்கள் நுழைக்கப்பட்டன எஎன்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது போல் கேரளத்தைச் சார்ந்த ரோனோ வில்சனின் மடிக்கணினியிலும் பொய்யான ஆவணங்கள் ஹேக் செய்தே பதிவேற்றப்பட்டன என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஆனந்த் டெல்டும் டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோர் மீதும் பொய் வழக்குகளே புனையப்பட்டன.  குஜராத் கலவரத்தின் போது ஜாகியா ஜாப்ரி  உட்பட 64 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்றைய முதல்வர் மோடி உட்பட பொறுப்பில் இருந்தவர்கள்  மீது குற்றஞ்சாட்டிய அவரது மனைவியின் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் காரணம் காட்டி அவர்களுக்காக நியாயம் கேட்ட சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல் வாத், முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சய் பட் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டனர். சங் பரிவாரத்தின ரின் பொய் செய்திகளை அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் முகம்மது சுபைர் கைது செய்யப்பட்டார். கேரள ஊடகவியலாளர் கப்பான் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி மூன்று மாதங்களாகியும் உ.பி. அரசால் விடுவிக்கப்படாமல் சிறையில் உள்ளார். தங்களது வகுப்புவாத, வெறுப்பு அரசியலை எதிர்ப் போர் அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளாக இவை உள்ளன.  ஆனால் குஜராத் கலவரத்தின் போது பில்கீஸ் பானு உட்பட 4 பெண் களை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தும், 14 பேரை படுகொலை செய்தும் கொடூரக் குற்றம் புரிந்து ஆயுள் தண்டனை பெற்ற 11 சங் பரிவாரத் தினர் ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் குஜராத் அரசால் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் தேர்தலின் போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2002 இல் நடைபெற்ற மதவெறி யாட்டத்தை நியாயப்படுத்தும் வகையிலும், பெருமைப்படுத்தும் வகையி லும் பேசியதைப் பார்த்தோம்.

கவலை கொள்ளச் செய்யும் செயல்கள்

இத்தகைய வகுப்புவாத செயல்களையும், பிரச்சாரத்தையும் செய்து சிறு பான்மை மக்களை எதிரிகளாக சித்தரித்து பெரும்பான்மைவாதத்தின் மூலம்  ஆட்சியைப் பிடிக்கும் அற்பச்  செயலை எதிர்க்க வேண்டிய சில மதச்சார் பற்ற கட்சிகளின் செயல்கள் தான் கவலை கொள்ளச் செய்கிறது. குஜராத் தேர்த லின் போது ஆம் ஆத்மி கட்சி புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக அiழைத்துச் செல்வதாகவும், இந்திய ரூபாய் நோட்டுகளில் லெட்சுமி, கணேசன் படங்கள் அச்சிட வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்தது. இவையெல்லாம் இந்திய அரசியலில் பெரும் பான்மை வகுப்புவாத ஆபத்து எந்த அளவு ஊடுருவி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இதைப் பெரும்பான்மை மக்களின் துணை கொண்டே முறியடித்திட முடியும். சர்வதேச சிறுபான்மையினர் உரிமை தினத்தில் நீதியரசர் சச்சார் குழு பரிந்துரைகளையும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகளை யும் நிறைவேற்ற வேண்டுமென்பதும், ரத்து செய்யப்பட்ட சிறுபான்மையின ருக்கான துவக்கக் கல்வி மற்றும் உயர் கல்வி உதவித் தொகைகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமென்பதும், வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டி, பெரும் பான்மை சிறுபான்மை மக்கள் அனைவரும் இத்தேசத்தின் மக்கள் என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டு மென்பதும், மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தின் விழுமியங்கள் அரசியல் நோக்கத்துக்காக அழிக்கப்படக் கூடாது என்பதும், சிறுபான்மை மக்கள் அச்சமோ, பதற்றமே இன்றி பாதுகாப்பான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டுமென்பதும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இத்தகைய கோரிக்கைகளுக்காகவே தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சிறுபான்மை மக்கள் உரிமை தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இயக்கங்கள் நடத்த முடிவு செய்துள்ளது. இக்கோரிக்கைகளுக்காக சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி மதச்சார்பற்ற கொள்கையில் நாட்டம் உள்ள பெரும்பான்மை மக்களும் ஆதரவளித்திட வேண்டும்.