articles

img

பாசிசத்தை வீழ்த்த சோசலிச பாதையில் 54ஆம் ஆண்டில் மாணவர் சங்கம் - கோ.அரவிந்தசாமி

இந்திய மாணவர் சங்கம் 1970 டிசம்பர் 30 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் துவங்கப் பட்டது. 50 லட்சம் மாணவர்களை உறுப்பி னர்களாக கொண்டு சுதந்திரம், ஜனநாயகம், சோசலி சம் என்ற பதாகை ஏந்தி மலர்ந்தது. இந்தியாவில் மாணவர் அமைப்பு அகில இந்திய அளவில்  துவங்குவதற்கு முன்பே  கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல  மாநிலங்களில் மாணவர் சங்கம் மாநில அளவில் வலுவான நிலையில் மாநில உரிமைகளுக்காக செயல்பட்டு வந்தது.  தமிழக மாணவர் சங்கத்தின் முதல் மாநாடு மதுரை தமுக்கம் கலையரங்கில் 1968 ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் அனைவருக்கும் கல்லூரிகளில் இடம் வேண்டும், விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி வேண்டும்,. கல்லூரிகளில் தமிழ் மொழியை பாட மொழியாக்கிட வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை தமிழக மாணவர் சங்கம் வலியுறுத்தியது. அன்றை யிலிருந்து இன்று வரை மானவர்கள் நலனுக்காக வும், மாணவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும்  தொடர்ச்சியாக போராடி வருகிறது. பிரிட்டனில் கல்வி பயின்றுவரும் இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இணைந்து மாணவர் சங்க கிளை உருவாக்கப் பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கல்வித் துறையில் திட்டமிட்டு  இந்துத்துவா அஜெண்டாவைப் புகுத்தி மிக வேகமாக கல்வியை காவிமயப்படுத்தி மதத்தின் அடிப்படையில் சாதியின்  அடிப்படையில்  சமூக அமைப்பினைக் கூறுபோடும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.  மக்களின் ஒட்டு மொத்தமான உணர்வுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பாஜக தனது மத வெறுப்பு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதை நிறுத்திக் கொண்டிருப்பது போல வெளியில் ஒரு தோற்றம் நிலவினாலும் அது தன் மத வெறுப்பு அரசியலை மிகவும் தீவிரமாக தன் நடவடிக்கைகளின் மூலம் அமல்படுத்தி வருகின்றது.   தேசிய கல்விக் கொள்கை 2020 மூன்று விஷயங்க ளை மையப்படுத்துகிறது. அவை கல்வி தனி யார்மயம், காவிமயம் மத்தியமயம். அந்நிய பல்கலைக் கழகத்திற்கு வழிவகுத்து கல்வியை லாபநோக்கில் செயல்படுத்த பன்னாட்டு முதலாளிகளுடன் கைகோர்த்து வணிகம் செய்யும் செயலை செய்து வருகிறது.

வணிக நோக்கில் கல்வி

சுயநிதிப் பாடங்களையும், பன்னாட்டு முதலாளி களின் மூலதனத்தையும், இந்திய கல்வித்துறையில் நேரடியாக அனுமதிக்கிறது. இது இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் மனிதவள வளர்ச்சி, சேவை சார்ந்த அரசின் பணியாகக் கருதாமல் நிதி, வியாபா ரம், லாபம் சார்ந்த செயல்பாடாக மாற்றி உள்ளது. இதன் அமலாக்கத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் 40 விழுக்காடு கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் இணைய வழிக் கல்வியும், பயிற்சி வகுப்பு களும், போட்டித் தேர்வு பயிற்றுவிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையும் புற்றீசல் போல அதிகரித்துள்ளன. தேசிய தேர்வு முகமையின் மூலம்  நீட், கியூட் போன்ற தேர்வுகளை வியாபாரமாக மாற்றியுள்ளது. லாபம் ஈட்டும் தொழிலாக பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் ஆகியுள்ளன.  ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பயிற்சி மையத்தில் மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் இதன் மூலம் மாணவர்க ளுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதன் மூலம் அவர்க ளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து சமீபத்தில் இந்து ஆங்கில நாளேடு நடத்திய ஆய்வின் புள்ளி விவ ரங்களை வெளியிட்டது. தமிழ்நாட்டை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கோட்டா நகரில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 25 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவே இதுவரை  இல்லாத எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 15 ஆக இருந்தது என பிபிசி செய்தி நிறு வனம் ஆய்வுச் செய்தியும் வெளியிட்டுள்ளது. கல்வி இன்றைக்கு வியாபார வளர்ச்சியை தொடும் அளவுக்கு மாறி வருவது குறித்து அந்த புள்ளிவிபரம் சுட்டிக்காட்டு கிறது.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் செய்முறை தேர்வு டன் கூடிய மேல்நிலைப் படிப்பில் உள்ள வேதியி யல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களை படிக்காமல், பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு தனித் தேர்வு மூலம் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பது தனியார்  பயிற்சி மையங்களை ஊக்குவிப்பதாகும். நாடு முழுவதும் மாணவர்களை தனியார் பயிற்சி மையங்களை நோக்கித் தள்ளுவதாகும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான். ஒன்றிய அரசின் இந்த முயற்சி அனைத்தும் புதிய புதிய நீட் பயிற்சி மையங்களை உருவாக்கி பெருமுதலாளிகள் லாபமடைய வழிவகைச் செய்வதுதான். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசாங்கம் பல்கலைக்கழக மானியக்குழுவையும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலையும் கலைப்பதற்கான நடவடிக்கையை இக்கல்வி கொள்கையின் வரைவு வழி நின்று செய்து, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற பெயரில் ஒரே அமைப்பாக மாற்றியது. இதன் மூலம் உயர் கல்வியின் பன்முகத்தன்மையை அழித்து, ஜனநாயக நெறிமுறைகளை சிதைத்து, கல்வியை மத்தியப்படுத்தும் பணியைச் செய்து முடித்துள்ளது. 

காவிமயமாகும் கல்வி

கல்வியில் காவியை புகுத்துவதற்கான நடவடிக்கை யாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை சார்ந்த நபர்களை துணை  வேந்தர்களாக நியமித்து வருகிறது. மேலும்  வேந்த ராக இருக்கும் ஆளுநர்களும் சங் பரிவாரத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்நிலை மேலும் மோசம் அடைந்துள்ளது.  கல்வி வளாகங்களில் தொ டர்ச்சியாக தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்கள் இந்துத்து வா பிரச்சாரத்தை செய்து வருகிறார்.  குறிப்பாக பாஜக ஆளாத மாநிலத்தில் ஆளுநர் மூலமாக இந்துத்து வா சித்தாந்தங்களை கல்வி நிலைய வளாகங்களில் கொண்டு செல்கின்ற பணிகளை அவர்கள் முன்னெ டுத்து வருகிறார்கள், எனவேதான் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் மாநில ஆளுநர்களை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை சட்டமன்றத் தில் நிறைவேற்றியுள்ளன.  

பாட நூல் மாற்றம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவான என்.சி.இ.ஆர்.டி, பாடப்புத்தகங்களில் இருந்து பல்வேறு வரலாற்று  பகுதிகளையும் அறிவியல் ஆராய்ச்சிப் பகுதிகளையும் நீக்கியுள்ளது. கோவிட்  நோய்தொற்றுக்குப் பிறகு மாணவர்களின் சுமைக ளைக் குறைக்க பாடத்திட்டத்தை குறைக்கும் வகையில் சில பாடத்திட்டங்கள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து 12-ஆம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து குஜராத் கலவரம், முக லாயப் பேரரசு தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள் ளன. மற்றும் அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் பகத்சிங் போன்ற தியாகிகள், மகாத்மா காந்தி, கோட்சே தொ டர்பான பகுதிகள் நீக்கப்பட்டன. 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடும், மக்களாட்சி மற்றும் பன்முகத்தன்மை  தொடர்பான பகுதிகள் மற்றும் அறிவியலில் டார்வின் பரிணாம வளர்ச்சி நீக்கப் பட்டுள்ளது. இந்திய வரலாற்றை மனுவாத அடிப்படையில் திரித்து வருகிறது. சனாதன கோட்பாடுகளையும், வைதீக மரபுகளையும் இந்தியாவின் வரலாறாக மாற்றும் நடவடிக்கையை செய்து வருகிறது. . முக லாயர்கள், ஆங்கிலேயர் வரும் வரை இந்து மன்னர்க ளால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடிய பொற்கால ஆட்சி நடந்தன என உண்மைக்கு மாறாக வரலாற்றை திருத்தி வருகிறது. மேலும் இஸ்லாமிய படையெடுப்பு என்றும், ஆரியர் வருகை என்றும், ஜனநாயகம், மதசார்பின்மை, சமத்துவம் போன்ற வார்த்தைகளை நீக்கியும் பாடப்புத்தகத்தை வடிவ மைத்து வருகிறது. கர்நாடக பாடப்புத்தகத்தில் மன்னி ப்புக்  கடித புகழ் சாவர்க்கரை விடுதலை போராட்ட வீரர் என குறிப்பிட்டு அந்தமான் சிறையிலிருந்து புல்புல் பறவையில் பறந்து வந்தார் எனவும், குஜராத் தேர்வில் மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என வினா இடம்பெற்றுள்ளதும், பெண்கள் எப்படி அடிமையாக இருக்க வேண்டும் என ஒரு பாடமே வடிவமைத்துள்ளதும், ஒன்றிய அரசின் போட்டி தேர்வில் சாதியப் பெயர்களை குறிப்பிட்டு எது கீழ்சாதி என கேட்பதும், ஒலி மாசு குறித்த வினா வில் இஸ்லாமிய பாங்க் ஓசையை குறிப்பிடுவதும் என பல  எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் படத்தினை புரோகிதர் போல் சித்தரித்து அவரை இந்து மதத்திற்கு சொந்தமானவர் என்று பெருமை பீற்றிக் கொண்டு பாட நூல்களில் மதச்சாயத்தை பூசி அரசியல் ஆதாயம் தேடி வருகின்றது ஒன்றிய அரசாங்கம். பிரதமர் உலக நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் திருக்குறளைப் பற்றி ஏராளமான விஷயங்களைப் பேசுகிறார். ஆனால் திருக்குறளில் சொல்லப்படும் அறநெறி கருத்துக்க ளுக்கு மாறாகவே இந்த அரசாங்கம் செயல்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையம் என பெயரையும் மாற்றி அந்த லோகோவில் பாரத் என பெயர் மாற்றம் செய்து தன்வந்திரியின் படத்தை இணைத்து பல்வேறு  மத சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

கல்வி நிலையங்களில்  சாஹா பயிற்சி

இந்தியாவில் வரும் 2025-இல் நூற்றாண்டை கொண்டாட இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, தன் தொண்டர்களுக்கு 7 நாட்கள் ஆரம்ப நிலை பயிற்சி முகாம், 20 நாட்கள் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம், 25 நாட்கள் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் என நான்கு கட்டங்களாக பயிற்சி முகாம் களை நடத்தி வருகிறது. குறிப்பாக இதில் மாணவர் களை அதிகமாக பயிற்றுவிக்க முயற்சித்துள்ளது. தமிழகத்தில், குடியாத்தம், மதுரை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, தஞ்சை ஆகிய ஐந்து இடங்களில் முதலாம் ஆண்டு பயிற்சி முகாம்களும், அதிகம் பயிற்சி எடுத்த கோயம்புத்தூர் மாநகர் , திருப்பூர் போன்ற இடங்களில் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாமும் நடத்தும் ஏற்பாட்டில் உள்ளனர். கடந்த காலத்தில் வரலாற்றாசிரியர்கள் ரொமிலா தாப்பர், ஆர்.எஸ்.ஷர்மா, பிபன் சந்திரா ஆகியோர்க ளின் நூல்கள் தடை செய்யப்பட வேண்டும் என பாஜக அமைப்பினர் கூக்குரலிட்டனர். இடதுசாரி கருத்தாக் கத்தில் புத்தகம் எழுதிய எழுத்தாளர் கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கெளரிலங்கேஷ் போன்ற எழுத்தா ளர்களை இந்துத்துவா கும்பல்  கொலை செய்தனர். பத்திரிகை சுதந்திரம் கூட இல்லாமல் தனது கருத்தாக் கத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். இறையாண்மைக்கு எதி ராக குரல் கொடுத்தால் பல வழக்குகளை தொடுத்து சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயலில் இந்த ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. அதோடு விஸ்வகர்மா யோஜனா எனும் திட்டம் மூலம் குலக் கல்வி முறைகளை திணித்து பாரம்பரியமான தொழிலை மீட்கிறோம் என்ற பெயரில் சாதி ரீதியான தொழில் முறைகளை ஊக்கு விக்கும் நடைமுறைகளை கையில் எடுக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பெரும் அழிவை சந்தித்துள்ளது. கல்வி நிலையங்கள் முழுவதும் பல கல்வி சார்ந்த பொ ருட்கள் சேதமடைந்துள்ளன. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக ஒன்றிய அரசிடம்  தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரணத் தொகையை கூட வழங்காமல் வஞ்சிக்கும் மோசமான சூழல் தான் நடக்கிறது. ஹிட்லரின் நாசிசப் படையும் முசோலினி பாசிசப் படையும் இதே போல் தான் செய்தது என்பதை மறந்து விட வேண்டாம். இப்படி ஹிட்லர் முசோலினி நாசிச, பாசிச படைகளோடு ஒப்பிட்டு இந்த மோடி அரசை நாம் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்து தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திக் கொண்டு கல்விநிலைய வளாகங்களில் ஊடுருவி கார்ப்பரேட்டு களோடு கைகோர்த்து ஜனநாயகத்தை கேள்விக்குறி யாக்கி தலித், சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுத்து இந்துத்துவா கருத்துக்களை அனைத்து கல்விநிலையங்களிலும் திணித்திடும் ஒன்றிய அரசின் தவறான கல்விக்கொள்கைக்கு எதிராக நாம் தொடர்ச்சியாக போராட வேண்டும். மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தொடர் கிளர்ச்சி பிரச்சா ரங்களை செய்யவேண்டியிருக்கிறது. அத்தோடு  இந்துத்துவா சித்தாந்த கருத்துகளுக்கு எதிராக எப்படி நாம்  எதிர்கொள்ள வேண்டும் என்பதை மாணவர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இந்த பாசிச பாணி பாஜகவின் மதவாதத்திற்கு எதிராக சமத்து வத்தை நிலைநாட்டிட, கல்விநிலைய ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திட,  54 ஆம் ஆண்டில் அடி யெடுத்து வைக்கும் நம் அமைப்பின் பாரம்பரி யத்தோடு சோசலிசப் பாதையில் பயணிக்க அனைத்து கல்விநிலைய வளாகங்களிலும் நாம் முன் முயற்சி எடுத்திட வேண்டும்.

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், இந்திய மாணவர் சங்கம்