அண்மையில் தொலைக்காட்சிகளில் ஒரு விளம்பரம் ஓடியது. நமக்கு வலிமையை தருபவர் அம்மா; அந்த அம்மாக்களுக்கு வலிமையை தருவது யார்.? அது மோடி ஜீ தான். இப்படி ஒரு காமெடி விளம்பரம் அது. பாஜகவினரோ ஒரு படி மேலே; மோடி கா கேரண்டி என கத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மக்களுக்கு கொடுத்த கேரண்டியை மோடி காப்பாற்றினாரோ இல்லையோ; தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக கொடுத்த கேரண்டியை கறாராக காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். பின்வரும் ஆதாரங்கள் மோடி யாருக்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டி ருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஆடித் தள்ளுபடியை மிஞ்சும் மோடி தள்ளுபடி
மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2014 முதல் 2023ஆம் ஆண்டுவரையிலும் மொத்தம் 14.56 லட்சம் கோடி வராக்கடன் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு ரூ.400 கோடி வீதம் பத்து ஆண்டுக ளுக்கு இத்தகைய மலையளவு தொகை வராக்கட னாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகை உபி. மாநிலத்தின் பொது செலவினங்களுக்கு செலவிடப் படும் தொகையைப் போல இரண்டரை மடங்காகும். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வராக்கடன் என வகைப் படுத்தப்படும் தொகை மூன்று மடங்கு உயர்ந்திருக்கி றது. இதில் வங்கிகள் வசூலித்த தொகை ரூ.2,04,668 கோடி. அதாவது மொத்த தொகையில் வெறும் 14 சத வீதம் மட்டுமே. மீதமெல்லாம் ஸ்வாஹா.. இதில் ‘Willful defaulters’ - அதாவது வேண்டுமென்றே கடனைத் திரும்பிச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை 9249 பேர். அவர்கள் கட்டத் தவறிய மொத்தக் கடன் தொகை ரூ.1,96,930 கோடி. மோடி பிரத மரானதற்கு பிறகு இவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. ஒருவேளை இதைத்தான் ‘சப்கா சாத - சப்கா விகாஷ்’ (அனைவ ருக்குமான வளர்ச்சி) என்கிறாரோ என்னவோ..?
மோடி ராஜ்ஜியத்தில் கடன் மோசடி
மோடியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என உற்சாகமாக பாடிக் கொண்டிருக்கிறார்கள் மோசடி ஆட்கள். Bank Fraud எனப்படும் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் இந்த பத்து ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்திருக்கிறது. 2005 – 2014 வரையி லான ஆண்டுகளில் கடன் ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை ரூ. 34,993 கோடி ஆக இருந்தது. ஆனால் 2015 – 2023 வரையிலான ஆண்டுகளில் இந்த தொகை ரூ.5.89 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. அதாவது 17 மடங்கு உயர்வு. இந்த லட்சணத்தில் மூன்றாவது முறையாகவும் நானே பிரதமராவேன் என்கிறார். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் கடந்த மார்ச் 31, 2023 நிதியாண்டின் விபரங்களின்படி கடன் மோசடியின் மொத்த தொகை ரூ.6,01,834 கோடி. இதில் ஒரு கோடிக்கும் அதிகமான தொகையை பெற்று மோசடி செய்தவர்கள் மட்டும் 26,086 பேர். இத்த கைய கடன் மோசடி பிரச்சனைகளின் மீது வங்கிகள் தொடுத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 16,420. பெரும்பாலான வழக்குகளில் வட்டியோடு முழு கடன் தொகையும் கறாராக வசூலிக்கப்படாமல் சமரசத்தின் மூலமாகவே முடித்து வைக்கப்படு கின்றன. அது எப்படிப்பட்ட சமரசம். இதோ ஒரு உதாரணம் பாருங்கள். அனில் அம்பானியின் நிறுவன மான ரிலையன்ஸ் காம் எனும் நிறுவனம் பெற்ற கடன் தொகை ரூ.49,668 கோடி. ஆனால் சமரசம் மூலம் அந்நிறுவனம் திருப்பி செலுத்திய தொகையோ வேறும் 455.92 கோடி மட்டுமே. இதைப் பார்க்கிற போது ஒன்றிய நிதியமைச்சரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது. இது எவர் அப்பன் வீட்டு பணம் என்று சொல்வீரா அமைச்சரே..?
எளியவர்களுக்கு சுருக்கு – வலியவர்களுக்கு சொர்க்கம்
மோடி அரசின் வரிக் கொள்கையென்பது எளிய மக்களுக்கு கழுத்தில் மாட்டப்பட்ட சுருக்குக் கயிறாக வும், கார்ப்பரேட்டுகளுக்கு சொர்க்கமாகவும் என இரட்டைத் தன்மை கொண்டதாகத்தான் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வரி வருவாய் உயர்ந்திருக்கிறது என பெருமை பொங்கப் பேசுகி றார்கள் இவர்கள். ஆனால் உண்மையென்ன?. 2019-ஆம் ஆண்டில் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கான வரி விகிதம் 30 சதவீதமாக இருந்தது. 2021-இல் அது 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது அது மேலும் குறைக்கப்பட்டு 15 சதவீதமாக சுருக்கப்பட்டு விட்டது. விட்டால் இனி கார்ப்பரேட்டுகள் வரியே கட்ட வேண்டாம் என சொன்னாலும் சொல்வார்கள். கார்ப்பரேட்டுகளுக்கான இத்தகைய வரி குறைப்பி னால் கடந்த ஓராண்டில் மட்டும் 1.84 லட்சம் கோடி துண்டு விழுந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான். இத்தகைய பற்றாக்குறையால் உரு வாகும் நெருக்கடியை மக்கள் சுமக்க வேண்டியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் வருமான வரி கட்டும் சாதார ணமானவர்களின் எண்ணிக்கை ரூ.117 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் மூலமாகத்தான் அரசின் வரி வருவாய் உயர்ந்திருக்கிறதே தவிர கார்ப்ப ரேட்டுகளால் அல்ல. இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்னவெனில், கார்ப்பரேட்டுகளுக்கான வரியைக் குறைத்தாலும் கூட அவர்கள் அதை விடவும் குறைவான வரியையே கட்டுகிறார்கள் என்பதே. குறிப்பாக 22 சதவீத வரி என்று இருந்த போது ரிலையன்ஸ் நிறுவனம் 16.5 சத வீத வரியையும், அல்ட்ரா டெக் சிமெண்ட் (அதானி) நிறுவனம் 14.8 சதவீத வரியையுமே கட்டியுள்ளன. ‘வரி சொர்க்கத்தில்’ தனது நண்பர்களை வாழ வைக்கும் மோடி, தனக்கு ஓட்டு போட்ட மக்களை வாட்டி வதைக்கிறார்.
வளமும் நிலமும் மக்களுக்கல்ல தனியாருக்கே
மக்கள் சேமிப்பை கடன் தள்ளுபடியாகவும், வரிச்சலுகையாகவும் வாரியிறைத்தது போதாதென்று நிலங்களையும் வளங்களையும் மொத்தமாக தாரை வார்க்கத் துடிக்கிறது மோடியின் சர்க்கார். சாலை களையும், ரயில்வே சொத்துக்களையும், பொதுத் துறை நிலங்களையும் 40 ஆண்டுகளுக்கு குத்த கைக்கு தர முடிவெடுத்திருக்கிறார்கள். அதுவும் கூட மிக மிக சொற்பமான கட்டணத்தில் உதாரணமாக ஒன்றை பார்க்கலாம். மொத்தமுள்ள தேசிய நெடுஞ் சாலையில் 26,700 கி.மீ நீளமுள்ள சாலையை வெறும் ரூ.1.6 லட்சம் கோடிக்கு குத்தகைக்கு தரு கிறார்கள். ஆனால் இந்த சாலையை அமைக்க அரசு செலவிட்ட தொகையோ ரூ.8 லட்சம் கோடியாகும். தேசிய பணமாக்கல் திட்டம் எனும் பெயரால் சுமார் ரூ.6 லட்சம் கோடி அளவிற்கு அரசு நிலங்களை தனியா ருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவை தவிர அரசு பொதுத்துறை நிறுவனங்களை நட்டம் என காரணம் சொல்லி அப்படியே தனியாருக்கு - அதுவும் பாஜக கட்சிக்கு வேண்டியவர்களுக்கு தாரை வார்க்க துடிக்கிறார்கள். சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனும் நிறு வனத்தை பாஜகவைச் சேர்ந்த பர்னிச்சர் தயாரிக்கும் ஒருவருக்கு அளித்திருக்கிறார்கள். பவன் ஹன்ஸ் லிமிடெட் எனும் ஹெலிகாப்டர் நிறுவனத்தை லேமென் தீவுகளிலிருந்து இயங்குகிற ஏற்கனவே மோசடியில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்திற்கு அளிக்கி றார்கள். விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் நிறுவனம் உள்ளிட்ட பல பொதுத் துறைகளை விற்பது, எல்.ஐ.சி எனும் ஆலமரத்தை பலவீனப்படுத்துவது என அடுத்த டுத்த திட்டம் அவர்களின் பட்டியலில் உள்ளது. கனிம வளங்களை தனியார் கொள்ளையடிப்ப தற்கான வகையில் சட்டங்களை சீர்குலைக்கிறார்கள். அதற்காகவே, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், வனப்பாது காப்பு சட்டம் என அனைத்திலும் மாற்றம் செய்யப் படுகிறது.
‘மோதானி அரசு’
மோடி – அதானி கூட்டில் உருவான ‘மோதானி அரசே’ இந்தியாவை தற்போது ஆள்கிறது. அதானி யின் ஆகச்சிறந்த வேலைக்காரராக பிரதமர் செயல்படு கிறார் என்பதை பின்வரும் பட்டியல் உணர்த்துகிறது: மிக நீண்ட இந்திய கடற்கரையில் ஒவ்வொரு 500 கி.மீ இடைவெளியிலும் அதானிக்கு சொந்தமான ஒரு துறை முகம் இருக்கிறது. மொத்த கப்பல் போக்குவரத்தில் 24 சதவீத அளவிற்கும், பொருட்கள் போக்குவரத்தில் 57 சதவீத அளவிற்கும் அதானியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் முதல் முறை யாக ஆறு விமான நிலையங்களை தனியாருக்கு அளிப்பது என மோடி எடுத்த முடிவைத் தொடர்ந்து ஆறு விமான நிலையங்களும் அதானியின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது. அதானிக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்களிலிருந்து 450 மில்லி யன் டன் நிலக்கரி கையாளப்படுகிறது. சத்தீஸ்கர், மத்தி யப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் காப்புக்காடு கள் சட்டங்களை மீறியும் அதானியின் சுரங்கங்கள் செயல்படுகின்றன. அதானி பென்ச் பவர் லீட் எனும் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்காக 31 கிராமங்களில் உள்ள 5607 ஹெக்டேர் நிலங்கள் அவருக்கு தாரை வார்க்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறை முகத்திற்காகவே கடலோர ஒழுங்குமுறை சட்டம் 1991 ஐயும், வனங்கள் பாதுகாப்பு சட்டம் 1980 ஐயும் திருத்தி யிருக்கிறது மோடி அரசு. இத்தனை சலுகைகளை ஒரு நபருக்கு செய்யும் மோடியின் அரசு தான் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டுகிறது. அதுதான் வர்க்க பாசம். இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். மோடியின் உத்தரவாதம் என இவர்கள் சொல்வதெல் லாம் மக்களுக்கான உத்தரவாதமல்ல, மாறாக அது கார்ப்பரேட்டுகளுக்கானதே எனும் உண்மையை நாம் ஒவ்வொருவரிடமும் பரப்புவோம். தூக்கியெறிவோம் இந்த துரோக அரசை!.
கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)