ரூ.466 கோடியில் உயர்மட்ட பாலங்கள்
ள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழ மை (ஏப்.1) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “நெடுஞ்சாலைத்துறை பாதுகாப்பான சாலைகளை வழங்குவதோடு மட்டும் அல்லாமல், பசுமையான சாலைகளையும் அமைத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 1,584 உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 ஆண்டு களில் சுமார் 8 லட்சத்து 72 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது”என்றார். கண்ணாடி இழைப் பாலம் “ 4 ஆண்டுகளில் ரூ.858 கோடி மதிப்பிலான 25 புதிய ரயில்வே மேம்பால பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. “நம்மசாலை”செயலியின் மூலமாக 13,300 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 22 மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவில் கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்” தமிழ்நாட்டில் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6.31 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்” என்றும் கூறினார். இமானுவேல் சேகரன் மணிமண்டபம் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை யுடன் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தளபதி பொல்லானுக்கு ரூ.4.90 கோடியில், உருவ சிலை யுடன் அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது விரைவில் திறக்கப்படும்.
சமூக நீதிக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனுக்கு ,ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், ரூ. 3 கோடி மதிப்பீட்டில், திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். வள்ளுவர் கோட்டம் வள்ளுவர் கோட்டம் என்றாலே சிலருக்கு கசக்கும். அதனால்தான், 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது, ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வந்த புனரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. எனவே, மிக விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இரும்பு மனிதர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இடத்திற்கான ஒப்பந்ததாரருக்கு ரூ.6 கோடி நிலுவையில் உள்ளது என முதலமைச்சரிடம் தெரிவித்த போது, உடனடியாக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுங்கள் என எந்த பாரபட்சம் இன்றி தெரிவித்த ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்.
தாய்மொழியையும், தமிழையும் காப்பாற்ற முதல் குரல் எழுப்பிய நமது முதலமைச்சரை நாம் இரும்பு மனிதர் என்று அழைக்க வேண்டும் என்றும் கூறினார். 20 புதிய அறிவிப்புகள் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு:- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ஆற்றுப் பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். சாலைகளை அகலப்படுத்த ரூ.2,200 கோடி முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 220 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2200 கோடியில் அகலப்படுத்தப்படும்.
அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ், 84 தரைப்பாலங்கள், உயர்மட்டப் பாலங்களாக ரூ.466 கோடியில் கட்டப்படும். ஆத்தூர் நகர் மற்றும் ஓசூர் மாநகருக்குப் புறவழிச் சாலைகள் ரூ.550 கோடியில் அமைக்கப்படும். தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி, இராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் முட்டம் பாலம் ஆகிய மூன்று இணைப்புச் சாலைகள் ரூ.230 கோடியில் மேற்கொள்ளப்படும்.ஆறுகளின் குறுக்காக தங்குதடையற்ற பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய 6 உயர்மட்டப் பாலங்கள் ரூ.295 கோடியில் புதிதாக கட்டப்படும். 10 ரயில்வே மேம்பாலங்கள் ரயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 ரயில்வே மேம்பாலங்கள், ஒரு கீழ் பாலம் ரூ.787 கோடியில் கட்டப்படும். நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆறு புறவழிச் சாலைகள் மற்றும் நான்கு இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ.285 கோடியில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
காலதாமதமின்றி பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு ரூ.11.85 கோடியில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 15 புறவழிச்சாலைகள், இணைப்புச் சாலை, சாலை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடியில் தயாரிக்கப்படும். சாலைகளை தரம் உயர்த்த ரூ.1000 கோடி கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1000 கி.மீ நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1000 கோடியில் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும். கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக கஸ்டம்ஸ் சாலை ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவ மனை அருகே நடைமேம்பாலம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் வெள்ளிமலை - சின்னதிருப்பதி ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட இதர சாலை யாக ரூ.98.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயரத்தி மேம்படுத்தப்படும். திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் சுற்றுலா மேம்பாட்டிற்கு 10 கி.மீ நீள சுற்றுச் சாலை ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும். சுற்றுலா தலமான ஏற்காடு மலைக்கு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயி லுக்கு மாற்றுப்பாதையில் அமைக்க ரூ.1 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். திருப்பூர் மாநகருக்குப் புறவழிச்சாலை அமைக்கவும், தூத்துக்குடி நகரில் இணைப்புச் சாலை அமைக்கவும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடியில் தயாரிக்கப்படும்.
எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரையிலான கடல்வழி இணைப்புப் பாலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் இணைப்பு சாலை அமைக்க, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் ரூ.4 கோடியில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். சென்னை பெருநகர பகுதியில் உயர்மட்ட பாலம் மற்றும் புறவழிச்சாலை அமைக்க ரூ.258 கோடியில் மேற்கொள்ளப்படும். சென்னை பெருநகர பகுதியில் பாடி அருகே U வடிவ சேவை சாலையும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர் - கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த ரூ.95 கோடியில் மேற்கொள்ளப்படும்.