articles

img

உறுதிமிக்க போராட்டத்தில் உதிரம் சிந்திய தியாகி பழனிச்சாமி - கே.கணேசன்

1979ஆம் ஆண்டு ஜூன் 9 திருப்பூர் தொழி லாளி வர்கத்தின் வரலாற்றில் மறக்க முடியாத  நாள். நம்முடைய இளம் தோழன் தியாகி பழனிச் சாமி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப் பட்ட நாள். 44 ஆண்டுகள் ஆண்டுகள் கடந்தும்  நேற்று நடைபெற்றது போல், அந்த சம்பவம் இன் னும் மாறாத ரணத்தோடு நம் நெஞ்சில் கோபக் கனலாக உள்ளது.

போராட்டக் காலம்

1970 – 80 காலகட்டத்தில் திருப்பூர் வட்டாரத் தில் பல்வேறு தொழில்களில் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு கே.எஸ்.கருப்ப சாமி, கே.தங்கவேல், அ.பழனிச்சாமி போன்ற தலைவர்கள் தலைமை ஏற்று வழிநடத்தி கொண் டிருந்தனர். அப்போது, 1978 – 79 ஆம் ஆண்டு களில் திருப்பூர் மேற்கு ஏரியா பகுதியில் விசைத் தறி தொழிலாளர் சம்பள உயர்வுக்கான போராட் டங்கள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந் தது. இந்த போராட்டத்துக்கும் சிஐடியு தலைவர் கள் வழிகாட்டினர். விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு  போராட்டங்கள் சிஐடியு தலைமையில், மற்ற  சங்கங்களோடு இணைந்து கூட்டுப் போராட் டமாக மிக உக்கிரமாக நடைபெற்றது. தொழிலா ளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை முறி யடிக்க முடியாமல் விசைத்தறி முதலாளிகள் திணறிக் கொண்டிருந்தனர். திருப்பூரிலுள்ள மில், பாத்திரம், பனியன் மற்றும் சலவை பட் டறை தொழிலாளர்களின் ஆதரவோடு இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வந் தது.

துரோக ஒப்பந்தம்

இப்போராட்டத்தை பலவீனப்படுத்த முடி யாத முதலாளிகள், அப்போதைய ஆளும் கட்சி யான அதிமுக சார்பு தொழிற்சங்கத் தலைவர் களை விலைக்கு வாங்கி, போராடிக் கொண் டிருந்த தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு எதி ரான, ஒரு துரோக ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். மற்ற சங்கங்கள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல், போராட்டத்தை தொடர்ந்து நடத் தினர். அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழி லாளர்கள் கூட அவர்களின் ஒப்பந்தத்தை ஏற்றுக்  கொள்ளாமல் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து  பங்கேற்றனர்.அதேசமயம் துரோக ஒப்பந் தத்தை காரணம் காட்டி, அதிமுக தொழிற்சங் கத்தினர், கருங்காலிகள் ஆதரவுடன் விசைத் தறி கூடங்களை இயக்க முதலாளிகள் முயற்சித் தனர். சில இடங்களில் இயக்கவும் செய்தனர். போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்க ளுக்கு விரோதமான அந்த செயலை கண்டித்து  ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடை பெற்றன. சில இடங்களில் விசைத்தறிகளை இயக்கிய கருங்காலிகளுக்கும், போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகர்க்கப்பட்ட வீடுகள்

இந்த சூழ்நிலையில், சுல்தான்பேட்டை, செட் டிபாளையம், மங்கலம் பகுதியை சேர்ந்த சிஐ டியு முன்னணித் தலைவர்களின் வீடுகள்  குறிவைத்துத் தாக்கி இடித்து சிதைக்கப்பட்டன. அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் எல்லாம்  சூறையாடப்பட்டன. இத்தகைய பிற்போக்குத்தனமான தாக்கு தலை எதிர்கொண்டு தோழர்கள் உறுதியோடு நின்றனர். சிஐடியு தலைமை தலையிட்டு நிற்க தியாய் நின்ற தோழர்களுக்கு உதவக்கூடிய வகையில் நிதி வசூல் செய்து, இடித்து சிதைக்கப் பட்ட 16க்கும் மேற்பட்ட வீடுகளையும் சரி செய்து  கொடுத்தது. மேற்கு ஏரியா தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கை போராட் டத்தில் அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி  சுமூகத் தீர்வு காண வேண்டும் என திருப்பூ ரின் பல்வேறு தொழிற்சங்கங்களும் அரசை வலி யுறுத்தினர்.

போராட்டப் பாசறை

சீராணம்பாளையம் கிராமம் பனியன், சலவை பட்டறை, பவர்லூம் தொழில்களில் பணி புரியும் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக இருந்தது. தொழிலாளர்கள் அனை வரும் சிஐடியுவில் முன்னணியில் இருந்து செயல்பட்டனர். விசைத்தறி தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இயக்கங் கள் நடத்துவதிலும்   முன்னணியில் இருந்தனர்.  மேற்கு ஏரியா போராட்டத்தில் சீராணம்பாளை யம் ஒரு பாசறையாக செயல்பட்டது.   எனவே, சீராணம்பாளையம் தொழிலாளர் மீது தாக்குதல் நடத்தினால் போராடும் தொழி லாளர்களுக்கு ஆதரவு தருவதை அவர்கள் நிறுத்தி விடுவார்கள், சிஐடியு சங்கத்தை பல வீனப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண் டுவர முடியும் என நினைத்து முதலாளிகள், அதி முக தொழிற்சங்கத்தினர் தாக்குதலுக்கு திட்ட மிட்டனர்.

படுகொலை தாக்குதல்

1979 ஆம் ஆண்டு ஜூன் 8 அன்று இரவு மங்க ளம் கிராமத்தில் உள்ள திரையரங்கில் திரைப் படம் பார்த்துவிட்டு திரும்பிய சீராணம்பா ளையம் பகுதி தோழர்களை வேவு பார்த்து அறிந்து கொண்டனர். கணபதிபாளையம் நீலி  பிரிவு அருகில் அதிமுக ரவுடிகளும், குண்டர்க ளும் நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் மறைந் திருந்து கத்தி, கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயு தங்களுடன் திடீரென பின்னால் இருந்து தாக்கு தல் நடத்தினர். போராட்டக் களத்தில் முன்னணி யில் செயல்பட்ட நமது 17 வயதே ஆன   இளம்  தோழர் பழனிசாமியை வெறிகொண்டு வெட்டிச்  சாய்த்தனர். எதிர்பாராத அந்த தாக்குதலில் இருந்து தப்பி  வந்த கே.ஈஸ்வரன், ஏ.கதிர்வேல், தங்கவேல், ராமச்சந்திரன், எம்.நடராஜன் உள்ளிட்ட மற்ற வர்கள் ஊர் வந்து மற்றவர்களிடம் சொல்லி தாக் குதல் நடந்த இடத்திற்கு திரும்பச் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது பழனிச்சாமி கொடூ ரமாக வெட்டப்பட்டு குற்றுயிரும், குறையுயிரு மாக பழனிச்சாமி கிடந்தார். உடனடியாக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத் துவர் அவர் வழியிலேயே மரணம் அடைந்து விட் டதாகத் தெரிவித்தார். திருப்பூரே மிகவும் பதட்டத்திற்கு உள்ளா னது. தியாகி பழனிச்சாமி உடல் திருப்பூர் கட்சி  அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கி ருந்து கட்சியின் மூத்த தலைவர் கே.ரமணி மற்றும்  ஆர்.வெங்கிடு, கே.எஸ்.கருப்பசாமி, கே.தங்க வேல் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள்  தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பழனிச்சாமியின் உடலை 12 கிலோமீட்டர் தூரம்  நடந்தே ஊர்வலமாக சீராணம்பாளையம் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். தன்னல மற்ற தியாகியின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தி  இளைஞர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள் கைகளை மற்ற பகுதிகளிலும் விரிவாக்க வேக முடன் செயல்பட்டனர். 

உயரப் பறக்கும் செங்கொடி

இதே இடுவாய் ஊராட்சியில் தியாகி கே. ரத்தினசாமியும் அதிமுக ஆட்சி காலத்தில் 2002 ஆம் ஆண்டு ஆளும்கட்சியின் ஆதரவுடன் ஆதிக்க சக்திகளால் கோரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த ஒரே ஊராட்சியில் செங் கொடி இயக்கத்தின் இரண்டு தியாகிகள் விதைக் கப்பட்டனர்.  தோழர்களை கொலை செய்தால் இயக் கத்தை பலவீனப்படுத்தலாம் என்ற எதிரிகளின் எண்ணம் நிறைவேறாது என்பதை காலம் உணர்த்தியது.  அந்த தியாகிகள் ஏந்தி பிடித்த  செங்கொடியின் கீழ் அவர்கள் லட்சியத்தை நிறை வேற்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இடு வாய் ஊராட்சியில் இப்போது களப்பணி ஆற்றி  வருகிறார்கள். விசைத்தறி, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், கட்டுமான சங்கம், பொது தொழி லாளர் சங்கம் என பல வர்க்க, வெகுஜன அமைப் புகள் உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இடுவாய் ஊராட்சி பகுதி மக்களோடு நீக்க மற நிறைந்துள்ள செங்கொடி இயக்கம், அந்த மக் களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சமர சம் இன்றி போராடும் என தியாகிகளின் லட்சி யத்தை நெஞ்சில் ஏந்தி சபதம் ஏற்போம். (கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாவட்டக்குழு உறுப்பினர், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர்)