அமெரிக்க வாழ்க்கை ஏழைநாட்டு இளைஞர்களுக்கு வண்ணக் கனவு; அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவர்களுக்கு இது சாயம்போன வானவில். கருப்பினத்தவரை சொர்க்கபுரியின் தூய்மைப்பணியாளர் (தோட்டி)களாக வைத்திருக்கவே விரும்பும் வெள்ளையர் மனோபாவத்துக்கும், இனப்பாகுபாட்டுக்கும் எதிரான கருப்பினத்தவர் போராட்டம் பல தளங்களில் நடந்து வருகிறது.அதில் ஒன்றான,1995 இல் நடந்த உண்மைச் சம்பவமே,”தி பரியல்”என்ற ஹாலிவுட் படம்.
மிசிசிபியில் வாழும் வயதான வெள்ளையர் ஜெர்ரி; எட்டு கல்லறைத் தோட்டங்களுக்கு உரிமையாளர்; இறுதிச் சடங்கு செலவுக்கான காப்பீட்டு நிறுவனமும் நடத்துகிறார். நிதி நெருக்கடியால் தனது கல்லறைத் தோட்டங்க ளில் மூன்றை விற்க முனைகிறார். கனடாவைச் சேர்ந்த “லோவன் குரூப்”என்ற கார்ப்ப ரேட் நிறுவனமும் கல்லறைத் தோட்டங்கள் மற்றும் இறு திச்சடங்குச் செலவுக் காப்பீட்டு நிறுவனம் நடத்துகிறது. இதன் சிஇஓ லோவன் என்ற வெள்ளை இனத்தவர். ஜெர்ரியின் மூன்று கல்லறைத் தோட்டங்களை வாங்க இந்நிறுவனம் உடன்படுகிறது. அமெரிக்கச் சட்டப்படி இருதரப்பும் விற்பனை ஒப் பந்தம் மேற்கொள்கின்றன.ஆனால் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தாமல் லோவன் காலங்கடத்துகிறார். இதனால் ஜெர்ரிக்கு நிதி நெருக்கடி அதிகரிக்கிறது. இதனால் தனது வழக்கறிஞர் நண்பர்களான ஆல்ரெட், கருப்பினத்தவரான ஹால் ஆகியோர் ஆலோச னைப்படி லோவன் நிறுவனத்தின் மீது ஜெர்ரி வழக்குத் தொடுக்கிறார். வில்லிகேரி என்ற புகழ்பெற்ற கருப்பின வழக்குரை ஞர் தலைமையிலான குழு அவருக்காக வாதாட வரு கிறது. லோவன் நிறுவனத்துக்காக டெளன்ஸ் என்ற கருப்பினப் பெண் வழக்கறிஞர் தலைமையிலான குழு வாதாடத் தயாராகிறது. டெளன்ஸும் ஒப்பந்தச் சட்ட வழக்குகளில் திறமை மிக்கவர்.'
வழக்கு கருப்பின நீதிபதி முன் விசாரணைக்கு வருகிறது. வில்லிகேரியின் சில தவறுகளை டெளன்ஸ் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறாள். இதனால் வில்லி கேரியை விலக்கிவிட்டு தன் வெள்ளைக்கார நண்பர் ஆல்ரெட்டை ஜெர்ரி தலைமை வழக்கறிஞராக நியமிக்கி றார். ஆனால் ஆல்ரெட்டின் தாத்தா “கேகேகே”என்ற வெள்ளை இனவெறி அமைப்பைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி,அவரையும் வழக்கிலிருந்து பின்வாங்கச் செய்கிறாள் டெளன்ஸ். ஜெர்ரி வெற்றிபெற வாய்ப்பில்லை என வில்லிகேரி குழும வழக்கறிஞர்களும் விலகுகிறார்கள். இறுதியில் வில்லிகேரியும் ஹாலும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். கோலியாத் போன்ற பெரு நிறுவனத்தை, வில்லி கேரி எப்படி தாவீது போல் வெல்கிறார் என்பதே மீதிக்கதை. 1980 காலகட்டத்தில் பாப்டிஸ்ட் தேவாலயங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கருப்பின மக்களின் சவ அடக்கம்,இறுதிச் சடங்குச் செலவுக்கான காப்பீடு ஆகிய வற்றில் கூட வெள்ளைப் பெரு நிறுவனங்கள் நடத்திய அருவெறுக்கத்தக்க கொள்ளை லாப வணிகத்தை பேசும் படம் இது.வழக்கு விசாரணையின் ஊடாக இது சொல்லப்படுகிறது. இந்த விசாரணை அலங்காரமான சவப்பெட்டியை ஒத்த கார்ப்பரேட்களின் அழுகி நாற்றமெடுத்த உள்ள கத்தை இந்த வழக்கு உலகுக்குத் திறந்து காட்டுகிறது. கார்ப்பரேட் சிஇஓ லோவன், அறவுணர்வு கொண்ட ஜெர்ரியிடம் வியாபார நிமித்தமாக உரையாடுகை யில்,”அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 51 மில்லியன் வாழ்கிறார்கள்.யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் 60 வயதை அடையும்போது அவர்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கும்.நமக்கு வாடிக்கையாளர்கள் இறந்த வர்களே. சவக்கிடங்கு நிறுவனத்தில் இரக்கம் பார்க்கக் கூடாது”எனப் பேசுகின்ற வசனங்கள்,மனிதத்துவம் மரித்த, இரக்கமற்ற பெரு நிறுவனங்களின் லாபவெறி செயல்பாட்டை தோலுரிக்கிறது.
ஜெர்ரியின் அன்பு மனைவி அனட்டியும்,வில்லி கேரியின் காதல் மனைவி குளோரியாவும், தங்களது கணவன்களின் மீது காட்டுகின்ற அன்பையும், அக்கறை யையும் இயல்பாகச் சித்தரித்துள்ளனர். அதேபோல் கணவன்மார்கள் தங்களது மனக்கஷ்டங்களை இணை யர்களிடம் பகிர்ந்து தகுந்த அறிவுரை பெறுகின்ற காட்சி களும் உணர்வுப்பூர்வமானது. வழக்கு விசாரணைக்கு முன் இரவில், கண்ணாடி முன் நின்று வில்லிகேரி, டௌன்ஸ் ஆகியோர் உதடு அசைவு முதற்கொண்டு உடல்மொழியில் எப்படி வாதாட வேண்டும் என ஒத்திகை எடுக்கும் காட்சிகள் மிக சுவா ரஸ்யமானவை. தீர்ப்புக்கு முன் சமாதானப் பேச்சுவார்த்தையில், லோவன் தரும் 75 மில்லியன் டாலர்களை உதறிவிட்டு, கோர்ட்டில் பார்ப்போம் என அறச்சீற்றத்துடன் ஜெர்ரியும், வில்லிகேரியும் பாட்டுப் பாடியும், ஆடியும் வெளியேறு கின்ற காட்சி சிலிர்ப்பானது.
தொண்ணூறுகளின் காலகட்டத்தை தனது சிறப்பான காஸ்ட்யூம் டிசைன் மூலம் கண்முன் நிறுத்துகிறார் மிர்ரன் ஹோர்டான்-ஹ்ரோஸியர்.அக்காலத்தை உணர்த்தும் துள்ளல் இசையை தந்துள்ளார் மைகேல் அபெல்ஸ்.உறுத்தாத ஒளிப்பதிவு.நேர்கோட்டு படத்தொகுப்பு. நடித்துள்ள அனைவரும் பாராட்டத்தக்க சிறந்த நடிப்பைத் தந்துள்ளனர். குறிப்பாக வில்லிகேரியாக ஜேமிபாஃக்ஸ்; ஜெர்ரியாக டாமி லீ ஜோன்ஸ்; ஹால்லாக ஆத்திஸ்; லோவனாக பில்கேம்ப்; ஜெர்ரி யின் மனைவியாக பமிலா ரீட்;வில்லிகேரியின் மனைவி யாக அமன்டாவேரன்; டௌன்ஸ்ஸாக ஜர்னிஸ்மோல்ட் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை தந்துள்ளனர். ஜேமி ஃபாக்ஸ் Collateral, Django: Unchained உள்ளிட்ட பலபுகழ்பெற்ற படங்களில் நடித்தவர்.இதே போல் டாமி லீ ஜோன்ஸ் அகாடமி,கோல்டன் க்ளோப், ப்ரைம்டைம் எம்மி, மற்றும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் போன்ற உயரிய விருதுகளைப் பெற்ற உலக றிந்த,ஒப்பற்ற நடிகர். குறிப்பிட்ட காலக்கட்ட சினிமாவை உணர்வுப்பூர்வமாகவும்,சிறப்பாகவும் உருவாக்கியுள்ளார் பெண் இயக்குநர் மேஹ்ஹி பெட்ஸ். இறுதிக் காட்சியில், வழக்கின் வெற்றிக் களிப்பில் மாடிப்படியில் இன பேதமற்று வில்லிகேரி, ஜெர்ரி சமமாக அமர்ந்து மௌனமாக, உணர்வுகளால் மட்டும் உரை யாடுகின்ற காட்சி முத்தாய்ப்பானது. ஆனால் அமெ ரிக்காவில் இனத் துவேஷமற்ற வாழ்வுக்கான கருப் பர்களின் கனவு இன்றும் நிறைவேறாமல் தொடர்கிறது என்பதே சமீபத்திய சோகமான செய்திகள். பிரைம் அமேசானில், தமிழ் சப்டைட்டிலுடன் இப் படம் காணக்கிடைக்கிறது.